விஷ்ணுகாந்த் மாத்திரை போட்டு தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்தாக சீரியல் நடிகை சம்யுக்தா குற்றம் சாட்டியுள்ள நிலையில், உடல் பரிசோதனைக்கு நான் தயார் என விஷ்ணுகாந்த் கூறியுள்ளார்.
சீரியல் நடிகை சம்யுக்தாவும் நடிகர் விஷ்ணுகாந்தும் காதலித்து திருமணம் செய்து சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஓரினச்சேர்க்கை… திருநங்கையுடன் உறவு… நடிகர் அர்னவ் குறித்து திவ்யா பகீர் புகார்
விஷணுகாந்த் மாத்திரை போட்டு தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்தாகவும், ஆபாச படங்களை பார்த்து அதுமாதிரி நடந்து கொள்ள சொன்னதாகவும், படுக்கை அறையில் கேமரா வைக்கலாம் என்று கூறியதாகவும் சம்யுக்தா குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில், சம்யுக்தா புகார் தொடர்பாக இன்ஸ்டாகிராம் நேரலையில் விஷ்ணு காந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அவர்கள் என் மீது போலீசில் புகார் அளித்து, கொடூரமானவனாக சித்தரிக்கின்றனர். சம்யுக்தா திருமணமாகி கொஞ்ச நாட்களிலேயே அவரது வீட்டுக்குபோய் விட்டார். இந்த திருமணத்தை ஒரு சீரியல் திருமணம் போல நினைத்து மக்களிடம் இருந்து மறைத்து விட எண்ணினார். நான் வெளியே சொன்னதால் என்னை முடக்க பயங்கர திட்டம் வகுத்து செயல்படுத்தி உள்ளனர்.
இன்னொருவருடன் காதலில் இருந்ததாக நான் வெளியிட்ட ஆடியோவுக்கு விளக்கம் தரவில்லை. அவர் பக்காவாக என்னை ஏமாற்றி இருக்கிறார். நான் படுக்கை அறையில் கேமரா வைக்க வேண்டும் என்று சொன்னதாக சொல்லி உள்ளார். அதை கேட்கும்போது என் உடம்பு கூசியது. அவர் சொன்ன அனைத்தும் பொய். மாத்திரை போட்டுக்கொண்டு செக்ஸ் வைத்ததாக சொல்லி உள்ளார். அதற்கான உடல் பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன். அந்த பரிசோதனையில் நான் மாத்திரை பயன்படுத்தி இருப்பது உறுதியானால், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்க தயாராக இருக்கிறேன்,” என்று விஷ்ணுகாந்த் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.