சின்னத்திரையில் ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் காலத்தில் மற்ற நிகழ்ச்சிகளில் டிஆர்பியில் பின்வாங்குவது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிகழ்வு. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒன்றிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமான சில போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்.
தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இதனிடையே நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வரும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் சீரியல் நடிகை ஒருவர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றான ‘பாவம் கணேசன்’ சீரியல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த இந்த சீரியலில் நவீன் முரளிதர் மற்றும் நேகா கவுடா ஹீரோ – ஹீரோயினாக நடிக்கின்றனர்.
இந்த சீரியலின் நாயகி நேகா கவுடா தற்போது கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவ இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே தியேட்டர் நாடக கலைஞராக நடிக்க துவங்கினார். இவரது தந்தை கன்னட திரையுலகில் மேக்கப் கலைஞராக பணியாற்றியவர்.
ஒரு கன்னட நிகழ்ச்சி மூலம் தான் முதன்முதலில் சின்னத்திரையில் அறிமுகமான நேகா அதன்பிறகு தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியலில் காலடி எடுத்து வைத்தார். இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் சாந்தனை திருமணம் செய்து கொண்ட நேகா,கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்த ராஜா ராணி ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றனர்.
இதனிடையே கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேகா கவுடா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், விளையாடுவதை பார்த்துக்கொண்டே தனது ஆதரவு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் நேகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“