Advertisment

Vijay TV Serial: பாக்கியா காட்டிய வீட்டை வாங்கும் ராதிகா… அதிர்ச்சியில் கோபி

Vijay tv bakiyalakshmi serial radhika on house hunt: பாக்கியா காட்டிய வீட்டை வாங்க முடிவு செய்யும் ராதிகா, எழில் எனக்கு நல்ல ஃபிரண்ட் என கணேஷின் பெற்றோரிடம் கூறும் அம்ரிதா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: பாக்கியா காட்டிய வீட்டை வாங்கும் ராதிகா… அதிர்ச்சியில் கோபி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

வேறு வீடுகளை பார்க்க அழைக்கும் கோபியிடம், நான் டீச்சர்கிட்ட வர்றேனு சொல்லிட்டேன் என்கிறாள். அதற்கு கோபி, அதனால் என்ன போன் பண்ணி வர முடியலனு சொல்லு என்கிறான். நா சொல்ற வீடு எல்லாம் மயூ ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கு உனக்கு வசதியா இருக்கும் என்கிறான் கோபி. அதற்கு ராதிகாவோ, டீச்சர் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தா பாதுகாப்பா இருக்கும் என கோபியுடன் செல்ல மறுக்கிறாள். உடனே கோபி டீச்சர நம்புவ, என்ன நம்பமாட்டியா என்கிறான். டீச்சர் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு என கோபியிடம் கேட்கிறாள் ராதிகா. டீச்சர் மேல எனக்கு ஒன்னும் கோபம் இல்ல என சமாளிக்கும் கோபியிடம், நா டீச்சர் சொன்ன வீட்ட போய் பாக்குறேன் என பிடிவாதமாக சொல்கிறாள் ராதிகா.

வீடு பார்க்க நீங்களும் வாங்களேன் என ராதிகா கோபியை கூப்பிட, அதிர்ச்சியாகும் கோபி இல்ல நா வரல என சமாளிக்கிறான். பின்னர் மயூவும் ராதிகாவும் வீடு பார்க்க கிளம்புகிறார்கள். பாக்கியா வீட்டில் ஜெனி, மயூவை பார்த்து உன்ன ரொம்ப மிஸ் பண்ணதா சொல்கிறாள். பின்னர் பாக்கியா மற்றும் செல்வியுடன் ராதிகா வீடு பார்க்க செல்கிறாள். சுந்தரியின் வீட்டை பார்க்கிறார்கள். அப்போது செல்வி சுந்தரி அக்கா வட்டிக்கு விடுவாங்க, ரொம்ப கறாரானவங்க என சொல்ல, சுந்தரி அதெல்லாம் ஒன்னும் இல்ல என மறுக்கிறாள். மேலும், யார் இந்த வீட்டுக்கு முதலில் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் வீடு என்கிறார்.

வீட்டைச் சுற்றி பார்த்துவிட்டு, வீடு ரொம்ப பிடிச்சிருப்பதாக சொல்கிறாள் ராதிகா. வீட்டை வாங்க முடிவு செய்யும் ராதிகாவிடம் அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிக்கங்க என்கிறாள் சுந்தரி. பாக்கியாவிடம் அட்வான்ஸ் பணத்தை கொடுப்பதாக கூறிவிட்டு எல்லோரும் கிளம்புகிறார்கள்.

அடுத்ததாக பாக்கியா செய்த ஸ்வீட்டை எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அருமையாக இருப்பதாக சொல்கிறார்கள். கோபி என்ன விஷேசம் என கேட்க அதற்கு இனியா ஸ்கூலில் நடந்த விஷயம் உங்களுக்கு தெரியாத என்கிறாள். மறந்துவிட்டதாக கூறும் கோபியிடம், பாக்கியாவுக்கு ஸ்கூலில் சமையல் ஆர்டர் கிடைத்த விஷயத்தை சொல்கிறாள் இனியா. பின்னர் ராதிகா வந்து வீடு பார்த்ததையும், அதை ராதிகா வாங்கபோறதையும் பாக்கியா சொல்ல, அதிர்ச்சியாகும் கோபி பாக்கியா மீது கோபப்படுகிறான். வீடு வாங்குறதுல எதுவும் பிரச்சனை வந்த என்ன பன்றது என கோபமாக சொல்லிவிட்டு போகிறான் கோபி. பிரச்சனை வரும் இத நீங்க பண்ண வேணாம் என செழியன் சொல்ல, அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது, ராதிகாவை ஒரு வக்கீல் வைத்து எல்லா விஷயத்தையும் பாக்க சொல்லு என பாக்கியாவுக்கு ஆதரவு தருகிறார் கோபியின் அப்பா. ஒவ்வொரு பிரச்சனையா வருதே என தன்நிலை நினைத்து நொந்து கொள்கிறான் கோபி.

அடுத்ததாக வீட்டுக்கு வரும் அம்ரிதா, ஊரிலிருந்து அம்மா போன் பண்ணதாக சொல்கிறாள். பின்னர் எழிலை பார்த்ததாக அம்ரிதா கூற, அப்பா அவ்வளோ சொல்லியும் நீ அவனை பார்த்தியா என கோபப்படுகிறாள் அம்ரிதாவின் மாமியார். அப்பா மிரட்டுனதா சொன்னாரு அதுக்கு மன்னிப்பு கேட்கத்தான் எழிலை பாத்தேன் என்கிறாள் அம்ரிதா. மேலும் கல்யாணம் ஆனதை அப்பா சொன்னதா எழில் சொன்னாரு. நானும் ஆமானு சொல்லிட்டேன். மேலும் கணேஷ் இன்னும் என் மனசுல இருக்காரு, நீங்க என்ன பாத்துக்கிறது எல்லாத்தையும் சொன்னேன். எழில் எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட். அவர்கிட்ட நா நல்ல மனசு விட்டு பேசுனேன். வேற எதுவுமில்லை. நா கணேஷ தவிர யாரையும் நினைக்கமாட்டேன் என்ன நம்புங்க என சொல்லிவிட்டு அழுகிறாள் அம்ரிதா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment