Advertisment

Vijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்

Vijay TV Bakiyalakshmi serial ezhil questions amritha: இனியாவின் ஸ்கூலில் சமையல் ஆர்டரை பிடிக்கும் பாக்கியா, அம்ரிதாவிடம் கேள்வி கேட்கும் எழில் இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம்  கேட்கும் எழில்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்று பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

எழிலிடம் என்ன பேசினீங்க என அம்ரிதா, அவளின் அப்பாவிடம் கேட்கிறாள். அதற்கு அவர் உன்கிட்ட எத்தனையோ தடவை சொல்லியும் நீ கேக்கல அதனால அவன்கிட்ட உண்மையை சொல்லிட்டேன் என்கிறார். மேலும் இனிமே உன்ன தொந்தரவு பண்ணக்கூடாது என்றும் திரும்பவும் அவன் உன்கிட்ட பேசுனா என்ன நடக்கும்னு சொன்னேன் என்றாவாறு கோபமாக எழுந்து போகிறார். அதைக் கேட்டு திகைத்து நிற்கும் அம்ரிதா எழிலுக்கு போன் செய்கிறாள். அப்போது அம்ரிதாவின் அப்பா வந்து அவன் உன் போனை எடுக்க மாட்டான் என கூறுகிறார்.

அடுத்து, இனியா பாக்கியாவை ஸ்கூலுக்கு அழைக்கிறாள். அதற்கு பாக்கியா அப்பாகிட்ட சொல்லிட்டியா என கேட்கிறாள். அப்போது அங்கு வரும் கோபி என்ன விஷயம் என கேட்கிறார். விஷயத்தை கேள்விபட்டதும் எதுவும் பிரச்சனையா என கேட்கிறார். பின்னர் எனக்கு சரியா பேசத் தெரியாது என பாக்கியா கோபியையும் ஸ்கூலுக்கு அழைக்கிறார். அதற்கு கோபி வேலை இருக்கு என மறுக்கிறார். மேலும் இனியாவிடம் அப்பா அம்மா இரண்டு பேரையும் வரச் சொன்னாங்களா என கேட்க அதற்கு இனியா அம்மாவை மட்டும் தான் வரச் சொன்னாங்க என சொல்கிறாள்.

பின்னர் இனியாவும் பாக்கியாவும் ஸ்கூலுக்கு கிளம்புகிறார்கள். பள்ளியிலும் பாக்கியா இனியாவிடம் எதுவும் தப்பு பண்ணலயே என திரும்பவும் கேட்கிறாள். அதற்கு எதுவும் இல்லை என மறுக்கிறாள் இனியா. அப்போது அங்கு வரும், பிரின்சிபல், சாரிட்டி டேக்கு நீங்க பண்ணி கொடுத்த ஸ்வீட் நல்ல இருந்துச்சு என கூற, ஆசுவாசமடைகிறாள் பாக்கியா. பின்னர் பிரின்சிபல் பள்ளியில் நடக்கும் விழாவுக்கு நீங்க லஞ்ச் பண்ணி கொடுக்க முடியுமா என கேட்கிறார். அதைக்கேட்டு சந்தோஷமாகிறாள் பாக்கியா. கண்டிப்பா செஞ்சு தர்றேன் எனவும் கூறுகிறாள்.

பின்னர் வெளியே வந்து 200 பேருக்கு சமைக்கப் போறேன் என பெருமையாக சொல்கிறாள். அதற்கு இனியா உன்னால செய்ய முடியுமா என கேட்க, அதெல்லாம் செஞ்சுருவேன் என சொல்கிறாள் பாக்கியா. அப்புறம் நீ எப்பவுமே உங்க அப்பாவ தான் பெருமை சொல்லுவ, இப்பதான் நீ உன் ஸ்கூலில் என்ன பத்தி பெருமையா சொல்லிருக்க என பாக்கியா சொல்ல, அதெல்லாம் தப்புதான் என மன்னிப்பு கேட்கிறாள் இனியா. பின்னர் நாம முன்னாடி எப்படி கஷ்டப்பட்டோம் என சொல்லி, ப்ளே ஸ்கூலில் வேலை பார்த்தைக் கூறி அம்மாக்களின் பெருமையை பேசுகிறாள் பாக்கியா.

இங்கு எழில் அம்ரிதா அப்பா கூறியதைப் பற்றியே யோசித்து கொண்டிருக்கிறான். அப்போது அங்கு அம்ரிதா, எங்க அப்பா உங்கள பார்த்தாரா எனக் கேட்டாள். அதற்கு ஆமா என எழில் சொல்ல எதுவும் தப்ப சொன்னாரா என கேட்கிறாள். நான் உங்க பிரண்ட் தானே நா எதுவும் உங்ககிட்ட மறைச்சதில்லை ஆனா நீங்க ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க என எழில் கேட்கிறான். அதற்கு அம்ரிதா எங்க அப்பா இப்படி தான் என டென்ஷனாக கூறுகிறாள். மேலும் எங்க அப்பா உங்கள மிரட்டுனதா சொன்னாரு, எதுவும் தப்பா பேசுனாரா என அம்ரிதா கேட்கிறாள். தப்பா எதுவும் பேசலை என சொல்லும் எழிலிடம், நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என அம்ரிதா சொல்கிறாள். அதன்பின் எழில் உங்களுக்கு கல்யாணம் ஆனதை என்கிட்ட ஏன் மறைச்சிங்க கேட்கிறான். அதைக் கேட்டு அதிர்ச்சியாகிறாள் அம்ரிதா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment