Vijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்

Vijay tv serial barathi kannamma today episode, kannamma starts business: பாரதியின் காயத்தை நினைத்து கவலைப்படும் கண்ணம்மா, மாவு பிஸினஸ் ஆரம்பம், பிறந்த நாள் கொண்டாட லட்சுமியை வெளியே கூட்டிபோகும் கண்ணம்மா இன்றைய எபிஷோடில்…

Vijay tv serial barathi kannamma today episode, kannamma starts business: பாரதியின் காயத்தை நினைத்து கவலைப்படும் கண்ணம்மா, மாவு பிஸினஸ் ஆரம்பம், பிறந்த நாள் கொண்டாட லட்சுமியை வெளியே கூட்டிபோகும் கண்ணம்மா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்போம். நேற்றைய எபிஷோடில் வெண்பா காணாமல் போனதற்கு கண்ணம்மாவிடம் சண்டை போடும் பாரதிக்கு எதிர்பாராத விதமாக கையில் ஏற்படுகிறது. இதை வீட்டில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

பாரதிக்கு காயம் பட்டதை நினைத்து ஒருப்பக்கம் கவலைப்படும் கண்ணம்மா, வெண்பாவ நான் கடத்துனதா என் மேல் சந்தேகப்படுறானே என்று பாரதி மீது கோபப்படுகிறாள். பாரதிக்கு இப்ப புத்திகெட்டுப் போச்சு ஒரு நாள் திருந்தி என்கிட்ட வருவான், ஆனா நான் அவனை மன்னிக்க மாட்டேன் என கோபப்பட்டவாறே பாரதியின் ரத்தத்தை துடைக்கிறாள் கண்ணம்மா.

அப்போது அங்கு வரும் லட்சுமி என்னம்மா துடைக்கிற என கேட்க, உன் பிறந்த நாளுக்காக துடைக்கிறேன் என சமாளிக்கிறாள் கண்ணம்மா. அதன்பின் லட்சுமி நம்ம வீட்டுக்கு யாரோ காரில் வந்தாங்கனு மஞ்சு சொன்ன யாருமா வந்தது என கண்ணம்மாவிடம் கேட்கிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சிடையும் கண்ணம்மா மக்கள் தொகை கணக்கு எடுக்குறதுக்காக வந்தாங்க என ஒருவாறு சமாளிக்கிறாள். கணக்கெடுப்பில் அப்பா பேரையும் சேர்த்தியா என்று கேட்கும் லட்சுமியிடம் போய் படி என கோபமாக கூறுகிறாள் கண்ணம்மா.

வீட்டில் உள்ள பிரச்சனைகளை நினைத்து கவலையாக இருக்கிறார் சௌந்தர்யா, அப்போது அங்கு வரும் அகிலனிடம், பாரதி கையில் எவ்வளவு பெரிய காயம் இருக்கு, ஆனா அதைப்பத்தி கேட்ட கோபப்படுறான் என சொல்கிறார். அதற்கு அகிலன், பாரதிக்கு அண்ணிய பிரிஞ்சு இருக்குறதால வருகிற கோபம் இது என்கிறான். காயத்துக்கான காரணத்த பாரதி நம்மகிட்ட ஏன் மறைக்கிறான் என கேட்கிறார் சௌந்தர்யா. மேலும் பாரதி கண்ணம்மா கூட சண்டை போட்டுதான் காயத்தோடு வந்து இருக்கான் என சந்தேகமடைகிறார்.

Advertisment
Advertisements

அடுத்ததாக கண்ணம்மா மாவு பிஸினஸ் ஆரம்பிக்கிறாள். பெரிய தொழிலதிபர் ஆகப்போறோம் கண்ணம்மா என சொல்லும் துளசியிடம், நாமளே கஷ்டப்பட்டு 10000 ரூபாய்க்கு இந்த கிரைண்டர் வாங்கிக்கோம் தொழிலதிபர் எல்லாம் பெரிய வார்த்தை என்கிறாள் கண்ணம்மா. மாவு பிஸினஸ்ன வாட்ஸ் அப் குருப் மூலம் வீட்டுக்கே டெலிவரி பண்ணலாம் என ஐடியா கொடுக்கிறாள் மஞ்சுவோட அம்மா. அப்போது அங்கு லட்சுமியும் மஞ்சுவும் வந்து கிரைண்டர் எதுக்கு என கேட்கிறார்கள். எதுக்குனு கண்டுபிடிச்ச சாக்லேட் தருவதாக சொல்கிறாள் துளசி. சரியாக கண்டுபிடிக்கும் லட்சுமிக்கும் மஞ்சுவுக்கும் சாக்லேட் கிடைக்கிறது.

பின்னர், நாளைக்கு லட்சுமி பிறந்த நாளுக்கு என்னால் அவளோட இருக்க முடியாது, ஒரு முக்கியமான வேலை இருக்கு அதனால இன்னைக்கு லட்சுமி வெளிய கூட்டிப்போய் ஒரு நாள் முழுக்க அவளோட இருக்க போறேன் என துளசியிடம் கண்ணம்மா சொல்கிறாள். அப்போது அங்கு வரும் லட்சுமியிடம் நாளைக்கு உன் பிறந்த நாளுக்கு எனக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொல்கிறாள் கண்ணம்மா. அதைக் கேட்டு கோபமடையும் லட்சுமி, நீ எப்பவுமே முக்கியமான நேரத்தில் என் கூட இருக்க மாட்டேங்கற என்கிறாள். உடனே கண்ணம்மா நாளை நீ உன் ஃப்ரண்ட்ஸ் கூட கொண்டாடிக்கோ இன்னைக்கு நாம வெளியில் போய் கொண்டாடலாம் என சமாதானம் செய்கிறாள்.

அதைக்கேட்டு மகிழ்ச்சி அடையும் லட்சுமி எனக்கு கீபோர்டு கிஃப்ட் வேணும் என்கிறாள். கீபோர்டு 10000 வரும் என துளசி சொல்ல, கண்ணம்மா அம்மாவுக்கு அவ்வளவு பட்ஜெட் தாங்காது, வேற எதாவது கேளு என்கிறாள். சரி என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்து விட சொல்கிறாள் லட்சுமி. அதுக்கும் முடியாது என கண்ணம்மா சொல்கிறாள். சைக்கிளாவது வாங்கி தா என லட்சுமி கேட்க, அதான் உன்கிட்ட சைக்கிள் இருக்கே என சொல்கிறாள் கண்ணம்மா. இதனால் கோபமடையும் லட்சுமி நீ எத கேட்டாலும் முடியாதுனு தான் சொல்லுவ, எனக்கு எதுவும் வேணாம் என்கிறாள்.

அப்போது கண்ணம்மா, இன்னைக்கு வெளில போறோம்ல அங்க 2500 ரூபாய்க்குள் நீ என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறேன் என உறுதியாக சொல்கிறாள். இதைகேட்டு சந்தோஷமாகிறாள் லட்சுமி. பின்னர் லட்சுமியும் கண்ணம்மாவும் முதலில் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு லட்சுமி பூசாரி மாதிரி நானும் சாமிய தொட்டு பூஜை பண்ணனும் என கேட்கிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: