New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/bk3-1.jpg)
Vijay TV Serial barathi kannamma today episode hema try to contact barathi : பசியில் அலையும் ஹேமா, ஹேமா போன் செய்தும் எடுக்காத பாரதி இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
பாரதியை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறாள் ஹேமா. அப்போது பசி எடுக்கவே என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறாள் ஹேமா. ஒரு கடையில் சென்று காசு இல்லை தண்ணி பாட்டில் வேணும் என ஹேமா கேட்க, கடைக்காரர் துரத்தி விடுகிறார். பின்னர் சிறிது தூரம் நடக்கும் ஹேமா ஒரு மரத்தடி மயங்கி உட்காருகிறாள்.
அடுத்ததாக, லட்சுமி கண்ணம்மாவிடம் எங்க போன என கேட்கிறாள். அதற்கு கண்ணம்மா, ஹாஸ்பிட்டல் போயிருந்ததாக பொய் சொல்கிறாள். அப்போது லட்சுமி, டாக்டர் அங்கிள், ஹேமாவையும் என்னையும் ஒருத்தர் பிரிக்க பாக்குறாங்கனு அழுதாரு என சொல்கிறாள். டாக்டர் அங்கிள் அவர் கஷ்டத்த மனசு விட்டு சொல்லிட்டாரு, நீ சொல்ல மாட்டேங்குற என சொல்கிறாள் லட்சுமி.
அடுத்ததாக, ஹேமாவை கடத்தியது யாராக இருக்கும் என புலம்பிகொண்டே ஹேமாவை தேடிக் கொண்டிருக்கிறான் பாரதி. அப்போது பிரகாஷ் போன் செய்து ஹேமாவுக்கு பாஸ்போர்ட் ரெடியாகி விட்டதாக கூறுகிறான். அதனை நினைத்து அழுகிறான் பாரதி.
அடுத்ததாக, ஹேமா ஒரு அம்மாவிடம் சென்று, ஒரு போன் பண்ண வேண்டும் என கேட்டு, போனை வாங்குகிறாள். ஆனால் பாரதி பிரகாஷிடம் பேசிக் கொண்டிருப்பதால் ஹேமாவின் போனை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் பாரதிக்கு ஹேமா போன் செய்ய, பாரதி பிரகாஷிடம் நடந்த விஷயங்களை கூறுகிறான். அதற்குள் அந்த அம்மாவிற்கு கார் வர அவர் கிளம்புகிறார்.
ஹேமாவை தேடி அலையும் கண்ணம்மா, வழியில் அப்பாவைப் பார்க்கிறார். கண்ணம்மாவிடம் இங்க என்னம்மா பண்ற என கேட்க, அவள் பாரதியோட பொண்ணு ஹேமாவ யாரோ கடத்திட்டாங்க, அதான் தேடிக்கிட்டு இருக்கேன் என்கிறாள் கண்ணம்மா. அதற்கு அப்பா, பாரதி உனக்கு அவ்வளவு தூரோகம் பண்ணிருக்கான், நீ ஏன் தேடுற என கேட்க, அதற்கு கண்ணம்மா சின்னபொண்ணு காணாம போயிட்டா நீ இப்ப பழைய பகையெல்லாம் கொண்டு வர்றீங்க என கோபப்படுகிறாள்.
பின்னர், ஹேமாவுடன் பாஸ்போர்ட் ஆபிஸ் போய் வந்ததை நினைத்து பார்க்கிறான் பாரதி. கண்ணம்மா தான் ஹேமாவ கடத்திருக்கனும் என தீர்மானமாக நம்புகிறான் பாரதி. ஹேமா அழைத்த நம்பருக்கு திரும்ப அழைக்கிறான் பாரதி. அந்த அம்மா ஒரு சின்னப்பொண்ணு போன் செய்ததாக கூற, பதறிப்போகிறான் பாரதி. பின்னர் எந்த ஏரியாவில் பார்த்தீங்க என கேட்டு, அங்கு செல்ல புறப்படுகிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.