Vijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா

Vijay TV serial barathi kannamma durga in trouble: விஷம் கலந்த தண்ணீரைக் கொடுத்து துர்காவை பீதியாக்கும் வெண்பா, பர்த்டே பங்சனில் பாரதியை புகழும் லட்சுமி இன்றைய எபிஷோடில்…

Vijay TV serial barathi kannamma durga in trouble: விஷம் கலந்த தண்ணீரைக் கொடுத்து துர்காவை பீதியாக்கும் வெண்பா, பர்த்டே பங்சனில் பாரதியை புகழும் லட்சுமி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். நேற்றைய எபிஷோடில் வெண்பாவை கல்யாணம் செய்ய பாரதி மறுத்ததால் அதிர்ச்சி அடைகிறாள் வெண்பா.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

லட்சுமிக்காக காத்திருக்கும் சௌந்தர்யா, கண்ணம்மாவிடம் லட்சுமி கிளம்பிட்டாளா என கேட்கிறாள். அப்போது அங்கு வரும் லட்சுமியைக் கண்டதும் சந்தோஷமாகிறாள் சௌந்தர்யா. டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு என பாரதியின் அப்பா சொல்ல, டாக்டர் அங்கிள் வாங்கி கொடுத்ததுதான் என சொல்கிறாள் லட்சுமி. பின்னர் நீயா வந்தியா இல்ல உங்க அம்மா அனுப்பி வைச்சாங்களா என சௌந்தர்யா கேட்க, நா கேட்டேன் அம்மா போக சொன்னாங்க என லட்சுமி சொல்கிறாள். அப்போது அங்கு வரும் ஹேமா, லட்சுமியை கட்டிபிடித்துக் கொள்கிறாள். பின்னர் இருவரும் மாறி மாறி ஹேப்பி பர்த்டே சொல்லிக் கொள்கிறார்கள்.

அடுத்ததாக, கட்டி போடப்பட்டிருக்கும் துர்காவிடம் வந்து, பாரதி என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறான், எல்லாம் உன்னால தான் எல்லாம் வேஸ்டா போச்சு என துர்காவை அடிக்கிறாள் வெண்பா. மேலும் கண்ணம்மாவ கொல்ல நா உன்ன கூட்டி வந்த, அவ நல்லவனு சொல்லி என்ன லவ் டார்ச்சர் பண்ற, உனக்கு ஏன் இந்த வேலை என கோபத்துடன் அடிக்கிறாள். அப்போது தண்ணி கேட்கும் துர்காவிடம் நீ எப்படி என்ன டார்ச்சர் பண்ண என கூறி ஒரு பாட்டில் தண்ணீரையும் அவன் வாயில் ஊற்றுகிறாள். பின்னர் தண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக கூறி துர்காவை அதிர்ச்சி ஆக்குகிறாள். காப்பாற்ற சொல்லும் துர்காவிடம், பாரதி இந்த பக்கம் தான் வருவான் அவன கூப்பிடு என்று சொல்லிவிட்டு, உயிரோடு இருந்த நாளைக்கு பார்க்கலாம் என சொல்லி கிளம்புகிறாள். தண்ணீரில் விஷம் கலக்கல தான் ஆனா அது தெரியாம பயத்துல நீ சாவு என மனதுக்குள் நினைத்தவாறே கிளம்புகிறாள் வெண்பா.

பின்னர் பாரதி வீட்டுக்கு வரும் வெண்பா, அங்கு காத்திருக்கும் சாந்தியிடம் உள்ள எதுவும் பேசாத என கூறி அழைத்துச் செல்கிறாள். வெண்பாவை பார்க்கும் சௌந்தர்யா, அவமானபடுத்தியும் திரும்பி வந்துட்டாளா என மனதுக்குள் நினைத்தவாறே, சாந்தியை யார் என கேட்கிறாள். வீட்ல வேலை பாக்குறவங்க என வெண்பா சொல்ல சரி உள்ள போங்க என அனுப்பி வைக்கிறாள் சௌந்தர்யா.

Advertisment
Advertisements

அடுத்ததாக அஞ்சலியிடம் சௌந்தர்யா எங்க என அவளது கணவர் கேட்க, கோவிலுக்கு போயிருக்காங்க என அஞ்சலி சொல்கிறாள். இந்த நேரத்தில தான் கோவிலுக்கு போகனுமா என சௌந்தர்யாவின் கணவர் எரிச்சலாக கிளம்புகிறார்.

பர்த்டே பங்சன் நடக்கும் இடத்தில் குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க பாரதி லட்சுமியை பார்த்து அவளிடம் பேசுகிறான். அப்போது அங்கு வரும் வெண்பா, அதைப் பார்த்து எரிச்சல் அடைகிறாள். பின்னர் கேக்கில் ஹேமா, லட்சுமி இருவர் பேரையும் பாரதி சேர்த்து எழுதியை பார்த்து எல்லோரும் சந்தோஷமாகிறார்கள். அப்போது பாரதி படிக்க வைக்கும் குழந்தைகள் எல்லோரும் வந்து பாரதியை புகழ்ந்து பேசுகிறார்கள். அப்போது லட்சுமி என்னையும் படிக்க வைக்கிறது டாக்டர் அங்கிள் தான் என சொல்லி, எல்லாத்துக்கும் நன்றி என்கிறாள் லட்சுமி. இதையெல்லாம் பார்த்து எரிச்சலடைகிறாள் வெண்பா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: