scorecardresearch

Vijay TV Serial Mega Sangamam; காதல் தோல்வியில் கண்ணன்… காதலை சொல்ல முடியாமல் ஐஸ்வர்யா

Vijay TV Serial bakiyalakshmi pandian stores mega sangamam today episode kannan opens up to iniya: காதல் தோல்வியை இனியாவிடம் கூறும் கண்ணன், ஐஸ்வர்யாவை காதலிப்பதாக கூறும் பிரசாந்த் இன்றைய எபிஷோடில்

Vijay TV Serial Mega Sangamam; காதல் தோல்வியில் கண்ணன்… காதலை சொல்ல முடியாமல் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமத்தில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

எங்க அம்மா என்னை எந்த வேலையும் பாக்க விடமாட்டாங்க என பாக்கியாவிடம் சொல்கிறாள் தனம். மேலும் வளைகாப்புக்கு பாக்கியா குடும்பத்தை அழைக்கிறாள் தனம். குழந்தை பிறந்த பின் சென்னைக்கு வர வேண்டும் என தனத்தை அழைக்கிறாள் பாக்கியா. அதற்கு தனம் நாங்க ஏற்கனவே வரலாம்னு நினைச்சோம் ஆனா நிறைய வேலை இருந்ததால வர முடியலை என்கிறாள்.

அடுத்ததாக சார்ஜர் கொடுக்கும் கண்ணனிடம், ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க என கேட்கிறாள் இனியா. அதற்கு கண்ணன் ஒண்ணுமில்லை என சமாளிக்க, உடனே இனியா காதல் தோல்வியா என கேட்கிறாள். ஆம் என கண்ணன் சொல்ல யாரு அந்த பொண்ணு? என்ன ஆச்சு என கேட்கிறாள். அதற்கு கண்ணன், எனக்கு கொஞ்ச நாளாதான் அந்த பொண்ண தெரியும், ஆனா அவ இப்ப வேற ஒருத்தன காதலிக்கிறா என்கிறான்.

அப்போது அங்கு வரும் ஐஸ்வர்யா, இனியாவும் கண்ணனும் பேசுவதைக் கண்டு எரிச்சலடைகிறாள். இனியா தனக்கு இரண்டு தடவை காதல் தோல்வி ஏற்பட்டதாக கண்ணனிடம் கூறுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அவர்களை நெருங்கி வர உடனே அங்கிருந்து கிளம்புகிறான் கண்ணன். ஐஸ்வர்யா இனியாவிடம் என்ன பேசிட்டு இருந்தீங்க என கேட்க, அதற்கு இனியா நீங்க ஏன் அத கேக்குறீங்க என கேட்கிறாள். நானும் கண்ணன் மாமாவும் பேசுனத உங்ககிட்ட சொல்ல முடியாது என சொல்லிவிட்டு செல்கிறாள் இனியா. கண்ணன் தன்னிடம் மட்டும் பேசாததை நினைத்து கவலைப்படுகிறாள் ஐஸ்வர்யா.

அடுத்ததாக, தன் கணவரிடம் போனில் பேசிக் கொண்டிருக்கும் பாட்டி ஈஸ்வரியை கலாய்க்கிறாள் இனியா. அப்போது கஸ்தூரி நீங்க லவ் மேரேஜா என ஈஸ்வரியிடம் கேட்க, வெட்கப்படுகிறாள் ஈஸ்வரி. அப்போது ஜெனி, முல்லையின் லவ் ஸ்டோரியை கேட்க, கஸ்தூரி அந்தக் கதையை சொல்கிறாள். அடுத்து கஸ்தூரி, மல்லியின் காதல் கதையைப் பற்றி கேட்கிறாள். அதற்கு மல்லி அது ஒரு சினிமா மாதிரி இருந்துச்சு என சொல்கிறாள். அடுத்து வண்டி ஜெனி பக்கம் திரும்புகிறது. நீங்களும் லவ், மேரேஜ் தானே, ஆனா இங்க உங்கள சேர்ந்தே பார்க்க முடியல என கேட்கிறாள் கஸ்தூரி. அதற்கு ஈஸ்வரி செழியனுக்கு நிறைய வேலை இருக்கு அதான் என்கிறாள். மேலும் ஜெனிக்காக செழியன் போலீஸ் ஸ்டேசன் போய் அடியெல்லாம் வாங்கிருக்கான் என்கிறாள். அப்போது ஜெனி, ஆமா ரொம்ப கஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணோம், பாக்கியா தான் எங்கள ஒண்ணு சேர்த்து வச்சாங்க என கூறுகிறாள்.

அடுத்ததாக, பசங்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செழியன் கண்ணனிடம் ஏன் ஒரு மாதிரி இருக்க என கேட்கிறான். அதற்கு எழில் அவனுக்கு என்மேல தான் கோபம் என்கிறான். அடுத்து செழியன் தூங்குவதற்காக கிளம்ப, எழில் அவனை தடுத்து இங்கேயே இருக்க சொல்கிறான். அப்போது பிரசாந்த் ஐஸ்வர்யா என்னை கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு என கிளம்புகிறான். அதற்கு எழில் யாருமே கூப்பிடல என உட்கார வைக்கிறான். ஐஸ்வர்யா மீது உனக்கு என்ன அக்கறை என செழியன் கேட்க, அதற்கு பிரசாந்த் அவளுக்காக கவலைப்பட நான் தான் இங்க இருக்கேன் என்கிறான். இதைக் கேட்டு எரிச்சலாகி கிளம்புகிறான் கண்ணன்.

அடுத்த நாள், ஜெனியிடம் வீடு வாங்குற பிளான் பத்தி பேசுகிறான் செழியன். அப்போது உங்க அப்பா அக்கௌண்ட்க்கு பணம் போடுறேன் அதை பில்டர்கிட்ட கொடுக்க சொல்லு என்கிறான். ஏன் இதைப் பத்தி உங்க அம்மா அப்பாக்கிட்ட பேசமாட்டேங்குற என கேட்கிறாள் ஜெனி. அதற்கு செழியன் அதில் நிறைய பிரச்சனை இருக்கு நான் சென்னை போய் சொல்லிக்கிறேன் என்கிறான். இப்ப சொன்ன நாம தனியா போற மாதிரி இருக்கும், அதனால அப்புறம் சொல்லிக்கலாம் என்கிறான்.

அடுத்ததாக, எனக்கு குழந்தை இல்லாதது நல்லதா போச்சு என சொல்கிறாள் மல்லி. அப்போது முல்லை கவிதாகிட்ட வேற கல்யாணம் பத்தி பேசுனீங்களா என கேட்கிறாள். எழில் தான் பேசிக்கிட்டு இருக்கான் என கூறும் பாக்கியா, மல்லியிடம் நீயும் சின்ன வயசுல புருசன பிரிஞ்சுட்டியே என வருத்தப்படுகிறாள். அதற்கு மல்லி சொத்து இருப்பதாக பெருமையாக சொல்கிறாள். அப்போது முல்லை, உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கட்டுமா என கேட்க, பிரசாந்த் என் பையன் மாதிரி அவனுக்கு கல்யாணம் பண்ண போற வயசுல நீ என்ன கல்யாணம் பண்ண சொல்லி கேக்குறியா என சொல்கிறாள்.

அடுத்து சமையல் அறையில், ஐஸ்வர்யா சமையல் செய்துவிட்டதாக கூறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறாள். அப்போது ஐஸ்வர்யா பாக்கியாவை நான் எப்படி கூப்பிடுறது என கேட்க, அம்மானு கூப்பிடு என்கிறாள் பாக்கியா. அதைக் கேட்டு சந்தோஷப்படும் ஐஸ்வர்யா பாக்கியாவை அம்மா என கூப்பிடுகிறாள். பின்னர் மல்லி ஐஸ்வர்யா பொறுப்பா நல்ல பொண்ணா இருக்கா அதான் பிரசாந்த்க்கு பிடிச்சிருக்கு என்கிறாள்.

அடுத்ததாக, காலேஜ்க்கு அப்புறம் என்ன படிக்க போற என ஐஸ்வர்யாவிடம் கேட்கிறான் எழில். அதுக்கு ஐஸ்வர்யா என் சித்தி என்னை டிகிரி படிக்க வைக்குறதே பெரிய விஷயம் என்கிறாள். நீ சென்னை வந்திருக்கியா என எழில் கேட்க, பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்ததாக கூறும் ஐஸ்வர்யா, ஸ்கூல்ல டாப்பராக இருந்ததாகவும் கலெக்டர் ஆக விரும்புவதாகவும் கூறுகிறாள். இதைக் கேட்டு ஆச்சரியப்படும் எழில், கண்ணனைக் கூப்பிட்டு ஐஸ்வர்யா கலெக்டர் ஆக விரும்புவதைக் கூறுகிறான். என்கிட்ட எதுவுமே சொன்னதில்ல, என கண்ணன் சொல்ல, அதற்கு ஐஸ்வர்யா இனி எதுவுமே கேட்டதில்ல என்கிறாள். அப்போது அங்கு வரும் பிரசாந்த் ஐஸ்வர்யாவை மீனை பார்க்க அழைக்கிறான். இதைப் பார்த்து எரிச்சலாகிறான் கண்ணன். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv serial mega sangamam bakiyalakshmi pandian stores today episode kannan opens up to iniya

Best of Express