Raja Rani 2 Serial: டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டியா? தோழியின் கேள்வியால் ஷாக் ஆன சந்தியா!

சந்தியா நான் கொடுத்து அனுப்பின விவாகரத்து பத்திரத்துல சைன் போட்டியா இல்லையா என்று ஃபிரெண்ட் போனில் கேட்கிறாள். இதைக் கேட்டு சந்தியா ஷாக் ஆகிறாள்.

சந்தியா நான் கொடுத்து அனுப்பின விவாகரத்து பத்திரத்துல சைன் போட்டியா இல்லையா என்று ஃபிரெண்ட் போனில் கேட்கிறாள். இதைக் கேட்டு சந்தியா ஷாக் ஆகிறாள்.

author-image
WebDesk
New Update
Raja Rani 2, Raja Rani 2 Serial, Vijay TV, Raja Rani 2 serial today episode, alya manasa shocking for divorce paper, sandhya, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், ஃபிரெண்ட் டைவர்ஸ் பேப்பரைக் கேட்டதால் ஆல்யா மானசா அதிர்ச்சி, சரவணன், அர்ச்சனா, பார்வதி, சந்தியா, சரவண, சிவகாமி, சுந்தரம், Raja Rani 2 serial today story, sandhya, saravanan, parvathy, archana, sivagami, Vijay TV Serials

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தினமும் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்து வருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம். ராஜா ராணி முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஆல்யா மானசா தான் 2வது பாகத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

Advertisment

ராஜா ராணி சீரியலில் இன்றைய எபிசோடில், சரவணன் தனது ஸ்கூட்டர் பஞ்ச்சரானதால் ஒரு கடைக்கு தள்ளிக்கொண்டு போய்விடுகிறான். சரவணன் வழக்கமாக வண்டியைப் பழுதுபார்க்க விடும் மெக்கானிக் கடை என்பதால் மெக்கானிக் நலம் விசாரிக்கிறான். ஸ்வீட் கடை பிஸினஸ் எப்படி போகிறது என்று விசாரிக்கிறான். சரவணனும் ஏதோ போகிறது என்று பதில் சொல்கிறான். மெக்கானிக் வண்டியில் ஆணி குத்தி இருப்பதை எடுத்து காட்டுகிறான். அப்போது, அங்கே கணவனும் மனையும் ஸ்கூட்டரில் ஜோடியாக துணிகளை விற்பனை செய்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் அங்கே அமர்ந்திருக்கும் சரவணனைப் சார் நீங்க ஒரு புடவை வாங்கிக்கோங்க என்று கேட்கிறார்கள். அதற்கு சரவணன் அதெல்லாம் வேண்டாம் என்று கூறுகிறான். பக்கத்தில் இருக்கும் மெக்கானில், ஏம்மா, அவங்க வீட்லயே ஜவுளிக்கடை வைச்சிருக்காங்க… அவர் எப்படி வாங்குவாரு என்று கேட்கிறான். அதற்கு துணி விற்பனை செய்கிற பெண், சார் நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டிதான், 7-8 வருஷமா வியாபாரம் பண்றோம். ஆனால், என் புருஷன் எங்காவது வெளியில போயிட்டு வரும்போது எனக்குனு ஒரு புடவை வாங்கிவரும்போது மனசு அவ்வளவு நிறைஞ்சிருக்கும். இது தொழில் சார். அது வாழ்க்கை.” என்று கூறுகிறார். இதைக் கேட்டு சந்தியாவை நினைத்துப் பார்க்கும் சரவணன், ஒரு புடவையை வாங்குகிறான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த மெக்கானிக் நல்ல வியாபாரிங்க நீங்க, அண்ணன் கிட்டயே புடவையை வித்துட்டீங்களே என்று கூறுகிறான். அதற்கு புடவை விற்கும் பெண், நீங்க வாங்கவே இல்லையே என்று கேட்க மெக்கானிக் இன்னொரு நாள் வாங்கிக்கிறேன் என்று கூறுகிறான்.

புடவையை வாங்கிக்கொண்ட சரவணன் நேராக தனது ஸ்வீட் கடைக்குப் போகிறான். அங்கே கடையில் வேலை செய்யும் சிறுவன் சர்க்கரை, கடைக்கு சந்தியா வந்ததையும் தனக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தையும் சொல்கிறான். அதைவிட, கடையில் சந்தியா வியாபாரம் செய்ததையும் சொல்கிறான். சந்தியா வியாபாரம் செய்ததால் கல்லாப்பெட்டியே நிறைந்துவிட்டதைக் கூறுகிறான். சந்தியா கடைக்கு வியாபாரம் செய்ததைக் கேட்டு சரவணன் சந்தோஷப்படுகிறான். சந்தியா படிச்சவங்க, எதையும் புரிஞ்சுக்கிட்டு நல்லா செய்வாங்க என்று பாராட்டுகிறான். இதையடுத்து, சிறுவன் சர்க்கரை, சந்தியாவுக்கு உங்கமேல ஒரு இது இருக்குன்னே… அதை என்னால சொல்ல தெரியல” என்று கூறுகிறான். அதைக் கேட்டு சரவணன் சந்தோஷமடைகிறான்.

Advertisment
Advertisements

அடுத்த காட்சியில், வீட்டில் சந்தியா ஸ்வீட் பாக்ஸ் அட்டைகளை மடித்து பாக்ஸ்களாக மடித்து வைத்துக்கொண்டிருக்கிறாள். சரவணனை திட்டிவிட்டதை நினைத்து வருத்தப்படுகிறாள். வந்த உடன் சாரி கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

இதற்கு முன்பு சந்தியாவின் தோழி சந்தியா விவாகரத்து வாங்குவதற்கான விவாகரத்து பத்திரத்தை அவளுக்கே தெரியாமல் அவள் பையில் எடுத்து வைத்துவிட்டாள். அதை சரவணன் தான் கீழே கிடந்ததை எடுத்து வைத்தான். இப்போது, ஃபேன் காற்றில் அந்த பத்திரம் கீழே பறந்து வந்து விழுகிறது. ஆனாலும், சந்தியா அதை கவனிக்காமல் ஸ்ட்வீட் பாக்ஸ் அட்டைகளை மடித்து வைத்துக்கொண்டிருக்கிறாள். எப்படியோ அந்த பத்திரத்தை பார்த்துவிட்டு எடுக்கப் போகிறாள். அதற்கு முன்பு அங்கே வந்த சரவணன் பத்திரத்தை எடுக்கிறான். பிறகு, அந்த பத்திரத்தை ஒரு ஓரமாக எடுத்து வைக்கிறான்.

அந்த நேரம் பார்த்து, சந்தியாவின் தோழி வீட்டுக்கு போன் செய்கிறாள். டெலிபோனை எடுத்து பேசும் சந்தியா யார் என்று விசாரிக்கிறாள். அப்போதுதான், அவளுடைய தோழி சந்தியா நான் கொடுத்து அனுப்பின விவாகரத்து பத்திரத்துல சைன் போட்டியா இல்லையா என்று கேட்கிறாள். இதைக் கேட்டு சந்தியா ஷாக் ஆகிறாள். என்னது விவாகரத்து பத்திரமா மெதுவா பேசு அத்தை யாராவது கேட்கப் போகிறார்கள் என்று கூறுகிறாள்.

அதற்கு சந்தியா, என்ன சொல்ற புரியவில்லை என்று கேட்கிறாள். அதற்கு அவளுடைய தோழி நான் உன் பேக்ல டைவர்ஸ் பேப்பர் வைச்சேனே நீ பார்க்கலையா? என்று கேட்கிறாள். இதைக் கேட்டு பதறிப் போகும் சந்தியா நான் பார்க்கல என்று கூறிவிட்டு, அது யார் கிட்டயாவது கிடைச்சால் என்ன ஆவது என்று நினைத்து ஓடிப் போய் தேடுகிறாள். அந்த பத்திரம் அங்கேயே அப்படியே இருக்கிறது. இதை அங்கே இருக்கும் சரவணன் கேட்கிறான். சந்தியா டைவர்ஸ் கேட்கத்தான் விவாகரத்து பத்திரம் வாங்கி வந்திருக்காங்க என்று நினைத்து சரவணன் உடைந்து போகிறான்.

ஆனால், சந்தியா போனில், நான் டைவர்ஸ் செய்ய விரும்பவில்லை. இதுதான் என் குடும்பம் என்று சொல்கிறாள். இதையடுத்து, அவளுடைய தோழியும் மன்னிப்பு கேட்கிறாள். பிறகு, ஆனால், நீ இன்னொரு பேப்பர்ல சைன் பண்ணனும். அது ஐபிஎஸ் ஆகனும்ங்கிற உன்னோட கனவு நிறைவேறுவதற்கான அப்ளிகேஷனில் சைன் பண்ணனும் என்று கூறுகிறாள். சந்தியாவும் சரி என்று சொல்கிறாள். ஆனால், இதை அவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு அவருடைய சம்மதமும் வேண்டும். இரண்டு பேரும் மனசு ஒத்துப்போனால்தான் முடியும் என்று கூறுகிறாள்.

ஆனால், இதைக் கேட்டு சரவணன் வருத்தப்படுகிறான். விவாகரத்து வாங்கத்தான் அந்த பத்திரத்தை வாங்கி வந்திருக்கீங்களா என்று வருத்தத்தில் கண்கலங்குகிறான்.
போனில் பேசு முடித்துவிட்டு வந்த சந்தியா, சரவணனிடம் நான் உங்ககிட்ட சண்டை போட்டிருக்க கூடாது. ஏதோ ஒரு மூட் அவுட்ல பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க என்று கூறுகிறாள். அதற்கு உங்களை மன்னிக்க நான் யாருங்க நீங்கதான் போகப் போறீங்களே என்று மனதில் நினைக்கிறான்.

பிறகு, சந்தியா வாங்க சாப்பாடு எடுத்து வைச்சிருக்கேன் என்று சாப்பிட கூப்பிடுகிறாள். ஆனால், சரவணன், இடிந்து போய் ஏதோ யோசனையுடன் வெளியே போகிறான். சந்தியா சாப்பிட கூப்பிட்டும் எதுவும் அவன் எதுவும் சொல்லாமல் போகிறான். சந்தியா, “நான் தான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டேன். இப்போ அவருக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்.” என்று மனதில் நினைக்கிறாள்.

அப்போது வேலைக்காரி மயில் போனில் யாரோ விடாமல் பேசிக்கொண்டிருக்கிறான். நீங்க யார்னு கேளுங்க என்று போனை காதில் வைக்கிறாள். ஆனால், சந்தியா, சரவணன் பேசாமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறாள். போனில் யார் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்று சந்தியா சொல்ல சரி என்று மயிலும் போனை வைத்துவிடுகிறாள்.

இதையடுத்து, மயில் “நாளைக்கு வீட்ல சுமங்கலி பூஜை நடக்கப் போகுதாம். அம்மா உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. அதற்கான வேலைகளை முன்கூட்டியே பார்க சொல்லிட்டாங்க… சரிங்களாமா” என்று சொல்லிவிட்டு செல்கிறாள். ஆனால், சந்தியா தனது கணவன் சரவணன் பேசாமல் போனதை நினைத்து கவலைப் படுகிறாள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Raja Rani Raja Rani 2 Vijay Tv Raja Rani Serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: