Advertisment

முத்து- மீனா ரொமான்ஸ்: டி.ஆர்.பி-யில் அடிச்சுத் தூக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களான முத்து - மீனா ரொமான்ஸ் காட்சி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து டி.ஆர்.பி-யில் அடிச்சு தூக்கி உச்சத்திற்கு சென்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Siragadikka Aasai 1

முத்து- மீனா ரொமான்ஸ்: டி.ஆர்.பி-யில் அடிச்சுத் தூக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களான முத்து - மீனா ரொமான்ஸ் காட்சி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து டி.ஆர்.பி-யில் அடிச்சு தூக்கி உச்சத்திற்கு சென்றுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சீரியல் ரசிகர்களைக் கவர்ந்து டி.ஆர்.பி-யில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும். அப்படி விஜய் டிவியில் பல சீரியல்களைக் கூறலாம், ஆஃபீஸ், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து டி.ஆர்.பி-யில் அடிச்சு தூக்கி இருக்கிறது. இதற்கு காரணம், இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான முத்து - மீனா ஜோடி ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருந்த நிலையில், ராசியாகி க்யூட்டாக ரொமான்ஸ் செய்வது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் ஆர். சுந்தர்ராஜன் அண்ணாமலை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரயில் ஓட்டுநரான அண்ணாமலை தான் ஓய்வு பெறும் நாளில் தனது ரயிலில் ஒருவர் அடிபட்டு இறந்து போகிறார். இது அவருடைய மனதை மிகவும் பாதிக்கிறது. தனது ரயிலில் அடிபட்டு இறந்துபோனவரின் குடும்பத்தைத் தேடிப் பிடித்து, அவர்களுக்கு உதவி செய்கிறார். ரயிலில் அடிபட்டு இறந்தவரின் மகள்தான் மீனா, கோயில் அருகே பூ வியாபாரம் செய்யும் வறுமையான குடும்பம் இவர்களுடையது.   2 பெண்கள், 1 தம்பி, அம்மா என்று அந்த குடும்பம் ஆதரவில்லாமல் நிற்பதை அறிந்த அண்ணாமலை, மீனாவை தனது மூத்த மகன் ஸ்ரீ தேவாவுக்கு நிச்சயம் செய்கிறார். ஆனால், திருமணத்திற்கு முன்னதாக, அண்ணமலையின் பி.எஃப். செட்டில்மெண்ட் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போகிறான் ஸ்ரீதேவா. ஆனால், அந்த பணத்தை அவனுடைய பெண் தோழி ஏமாற்றிவிட்டு செல்கிறாள். 

Siragadikka Aasai

திருமணத்தின் போது மாப்பிள்ளை ஓடிப்போனதால், மீனாவின் கழுத்தில் அண்ணாமலையின் இளைய மகன் முத்து தாலிக் கட்டுகிறான். ஆரம்பத்திலிருந்தே மீனா பார்க்கும்போதெல்லாம் முரடனாகத் தெரிந்த முத்துவைத் திருமணம் செய்துகொண்டதால் வாழ்க்கை என்னவாகுமோ என்ற கலக்கத்தில் வாழ்க்கையைத் தொடங்கினாள் மீனா. 

ஆனால், அண்ணாமலையின் மனைவி விஜயா, அடிதடி என்று இருக்கும் தனது இளைய மகன் முத்துவைப் பிடிக்காது. மூத்த மகன் ஸ்ரீதேவாவைத்தான் பிடிக்கும். அதனால், திரும்ப வீட்டுக்கு வரும் ஸ்ரீதேவாவுக்கு பணக்காரப் பெண் என்று நினைத்து ஏற்கெனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்த பின் கணவனை இழந்து வாழும் ரோகிணி உண்மையை மறைத்து தான் பணக்கார பெண் என்று கூறி ஸ்ரீதேவாவை திருமணம் செய்துகொள்கிறாள். ரோகிணி பணக்காரப் பெண் என்று அவளுக்கு பெரிய பியூட்டி பார்லர் வைத்து தருகிறாள் விஜயா.  

அதே நேரத்தில் ஏழை வீட்டு பெண் என்பதால், விஜயா மீனாவைக் கொடுமைப்படுத்துகிறாள். இதனால், மீனாவின் வாழ்க்கைத் சோகமாக போய்க் கொண்டிருக்கும்போது, அவளுடைய கணவன் முத்து ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டு போலீசில் சிக்கிக்கொள்ளும்போது, முத்துவின் தம்பி ரவியின் கேர்ல் ஃபிரண்ட் உதவியுடன் அவனைக் காப்பாற்றுகிறாள். அதன் பிறகு, முத்துவுக்கும் மீனாவுக்கும் நெறுக்கம் ஏற்படுகிறது. முத்து மீனாவைப் புரிந்துகொள்கிறான். வீட்டில் மீனாவை விட்டுக்கொடுக்காமல் தனது அம்மா விஜயா உடன் சண்டை போடுகிறான்.

அண்ணாமலை ஏழை வீட்டு பெண்ணான தனது மருமகள் மீனா மீது அன்பும் கரிசனையுடனும் நடந்துகொள்கிறார். 

இதனிடையே, விஜயா தனது மருமகள் ரோகிணிக்கு பியூட்டி பார்லர் வைப்பதற்காக வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து 17 லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்துவிட்டு வட்டி கட்டாமல் போக, அண்ணாமலைக்கு தெரிவருகிறது. இதனால், வீட்டில் விஜயாவின் ஆதிக்கம் சற்று குறைகிறது.

இந்த சூழ்நிலையில்தான், முத்துவின் தம்பி ரவிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு பேச்சு தொடங்குகிறது. ஆனால், அவனுடைய கேர்ல் ஃபிரண்ட் ஸ்ருதி ரவியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். ஸ்ருதியின் அப்பாவுக்கும் அண்ணாமலைக்கும் சண்டை என்பதால் இவர்களின் காதலுக்கு முத்து எதிர்ப்பு தெரிவிக்கிறான். ஆனால், மீனா அவர்களைச் சேர்த்து வைக்க முத்துவுக்கு தெரியாமல் முயற்சி செய்கிறாள். 

ஆனால், முத்து தனது தம்பி ரவிக்கு மீனாவின் தங்கை சீதாவை திருமணம் செய்துவைக்கத் திட்டமிடுகிறான். மறுபக்கம் ஸ்ரீதேவாவின் மனைவி ரோகிணி எங்கே தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி புகுந்த வீட்டுக்கு தெரிந்துவிடுமோ என்று அச்சத்தில் இருக்கிறாள். ஸ்ரீதேவா வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊரைச் சுற்றுவது அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்படி பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக செல்கிறது  ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். 

குறிப்பாக, ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் தொடக்கத்தில் முத்துவும் மீனாவும் எலியும் பூனையுமாக இருந்த நிலையில், அவர்கள் திருமணத்துக்குப் பிறகு, ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு அன்னியோன்யமாக க்யூட்டாக ரொமான்ஸ் செய்யும்போது பார்வையாளர்களின் மனடில் இடம்பிடித்து விடுகின்றனர். இதனால், ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து டி.ஆர்.பி-யில்  அடிச்சுத் தூக்கி உச்சத்திற்கு சென்றுள்ளது.

முக்கியமாக முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், மிகவும் யதார்த்தமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவருடைய யதார்த்தமான நடிப்பு, தெனாவெட்டான பேச்சு, உடல்மொழி நடிகர் விஜய் சேதுபதியை நினைவூட்டுவதாக உள்ளது. ரசிகர்கள் பலரும் இவரை சின்னத்திரை விஜய் சேதுபதி என்றே கூறுகிறார்கள். மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா கதாபாத்திரத்தின் பின்னணியை உணர்ந்து மிகவும் கச்சிதமாக நடிக்கிறார். இயக்குனர், நடிகர் ஆர். சுந்தர் ராஜன் தனது வழக்கமான கிண்டலான, நகைச்சுவையான நடிப்பின் மூலம் ரசிர்களை கவர்ந்துள்ளார். 

மொத்தத்தில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் முத்து - மீனா ரொமான்ஸ் ரசிகர்களைக் கவர்ந்து டி.ஆர்.பி-யில் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment