விஜய் டிவிக்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும் சம்பளம் ஏத்த மாட்றாங்க என லைவ் வீடியோவில் பிரியங்கா ஜாலியாகக் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. மாகாபா ஆனந்த் உடன் இணைந்து சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊகும் சொல்றியா உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும், தனியாக ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்றைய தினம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து லைவ் வீடியோவில் பிரியங்கா ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். அந்த வீடியோவில், இந்த நிகழ்ச்சிக்காக காலை 11 மணியளவிலேயே நேரு ஸ்டேடியத்திற்கு வந்துவிட்டேன். நான் சமத்து பொண்ணு. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்க்க முன்னதாக வந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் டிவிக்காக அதிகமாகவே உழைக்கிறேன், ஆனால் சம்பளம் தான் உயர்த்தி தர மாட்டேன் என்கிறார்கள் என்றும் தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் லைவ் வீடியோவில் சுற்றி காட்டியதோடு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமானவர்களையும் வீடியோவில் குறிப்பிட்டார் பிரியங்கா. பதிலுக்கு அவர்களும் குலதெய்வம் என்று பிரியங்காவை புகழ்ந்துள்ளனர்.
பின்னர், இந்த நிகழ்ச்சியை டைரக்ட் செய்த ரிச்சர்ட் என்பவரை அறிமுகம் செய்த பிரியங்கா, சிறுவனாக இருந்த ரிச்சர்ட் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகுந்த பொறுப்பானவராக மாறியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய ரிச்சர்ட், குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே இந்த நிகழ்ச்சியை சிறப்பாக எடுத்துக் கொண்டு செல்ல முடிந்ததாகவும் மக்கள் இதேபோல தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் அடுத்தடுத்த சீசன்களையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“