vijay tv super singer : விய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி எல்லா சீசன்களும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். சீனியர், ஜூனியர், க்ரூ என எந்த சீசன் நடத்தினாலும் அது கட்டாயம் சக்ஸஸ் தான்.
தற்போது ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிருத் ஆரம்பித்து வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குபெற்ற போட்டியாளர்களும் கலந்துக் கொண்டனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 வது சீசன் நிகழ்ச்சியில் கௌதம் பங்குபெற்றார். அப்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்ற கௌதம் பரிசை தவறவிட்டார். விட்ட கோப்பையை மீண்டும் பெற கெளதம் இந்த சீசனில் வெறித்தனமாக களம் இறங்கி இருக்கிறர்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மற்றொரு காரணம், ஆங்கர்கள் மாகாபா, பிரியங்காவின் கேலி கிண்டல்கள்.தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 7 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கூடிய விரைவில் ஃபனல்ஸ் நடைபெறவிருக்கிறது. இறுதி மேடைக்கு தகுதியான 5 போட்டியாளர்களும் தற்போது கடுமையான பயிற்சியில் உள்ளனர்.
#SetFinals ல கலக்க வர்றாங்க நம்ம #Top5Finalists! ????????
சூப்பர் சிங்கர் - வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. #SuperSinger #VijayTelevision @MaazaIndia pic.twitter.com/S7EKXdnZNe— Vijay Television (@vijaytelevision) October 31, 2019
இதில் பொதுமக்களை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் மூக்குத்தி முருகன், புண்யா, கெளதம் ஆகியோர் பெயர் அதிகம் அடிப்படுகிறது. தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிya 2 ப்ரமோக்கள் வெளியாகி எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளன. இறுதி பட்டத்தை வெல்ல போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மட்டுமில்லை நடுவர்களிடமும் அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.