புது சீரியல் என்ட்ரி... முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் : ரசிகர்கள் அதிர்ச்சி

புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், விஜய் டிவியின் முக்கிய சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், விஜய் டிவியின் முக்கிய சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

விஜய் டிவி சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும், அதற்கு பதிலாக புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முன்பு வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தீபக், நட்சத்திரா நாகேஷ் நடித்து வரும் இந்த சீரியலில், மாமன் மச்சான் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில், அர்ஜூன், கோதையின் சொத்துக்களை எழுதி வாங்கியதில் இருந்து அடுத்தடுத்து வந்த காட்சிகளே ரிப்பீட் மோடில் வந்துகொண்டிருக்கிறது. மேலும் தனது அப்பா அம்மா அண்ணன் இவர்கள் சொல்வதை நம்பாமல் டாக்டருக்கு படித்துள்ள ராஹினி, தனது கணவன் அர்ஜூன் சொல்வதை மட்டும் முழுவதுமாக அப்படியே நம்புகிறார்.

இதுவே சீரியலுக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இல்லாமல், கோதை அர்ஜூனின் அப்பா சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக சொன்னதை எந்த ஆதாரமும் இல்லாமல் ராஹினி இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், எதற்கெடுத்தாலும் தனது அண்ணன் தமிழ் மீதே தனது கோபத்தை காட்டி வருகிறார். டாக்டருக்கு படித்தவர் இதையெல்லாம் யோசிக்காமல் முட்டாள்த்தனமாக நடந்துகொள்வாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

இவ்வளவு காலம் அர்ஜூன் சொன்னதை நம்பிய ராஹினி இப்போது அர்ஜூனின் மாமா சொல்வதை நம்பி, தமிழ் அடித்து தான் அர்ஜூன் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்று தமிழிடம் சண்டைக்கு சென்றுள்ளார். வந்த காட்சிகளே மீண்டும் ரிப்பீட் ஆகி வருவதால், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அதற்கு பதிலாக, ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த திரவியம் நடிப்பில் வெளியாக உள்ள வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: