Advertisment

மேடை அலங்காரம் முதல் மணமகள் அலங்காரம் வரை... நடிகர் விஜயகுமார் மகள் நெகிழ்ச்சி பதிவு

8 மாத திட்டமிடல்; மேடை முதல் அலங்காரம் வரை அனைத்தையும் சிறப்பாக மாற்றிய அனைவருக்கும் நன்றி; மகள் தியா திருமணம் குறித்து நடிகர் விஜயகுமார் மகள் அனிதா நெகிழ்ச்சி பதிவு

author-image
WebDesk
New Update
diya marriage

மேடை முதல் அலங்காரம் வரை அனைத்தையும் சிறப்பாக மாற்றிய அனைவருக்கும் நன்றி; மகள் தியா திருமணம் குறித்து நடிகர் விஜயகுமார் மகள் அனிதா நெகிழ்ச்சி பதிவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் பிரமாண்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றுள்ள நிலையில், தியாவின் அம்மாவான நடிகை அனிதா, திருமண புகைப்படங்களுடன் திருமணத்திற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா, கூலி திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பின்னர் திருமணம் முடிந்து திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிதாவின் மகள் தியாவிற்கு திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தியாவின் திருமணத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர்கள் ரஜினி, பிரபு, பிரசன்னா, இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். மேலும், விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பம் திருமணத்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தது. நடிகை வனிதா மட்டும் மிஸ்ஸிங்.

கடந்த ஒரு வாரமாகவே விஜயகுமார் வீட்டில் திருமண நிகழ்வுகள் களைகட்டியது. திருமண பந்தக்கால் நடுதல், சுமங்கலி பூஜை, மெஹந்தி பங்க்ஷன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடி குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அனிதா தனது மகள் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ”என்னுடைய இளவரசி விரும்பிய ஒரு திருமண வாழ்க்கையைக் காண வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவாகியுள்ளது. கடந்த 8 மாதங்களில் இவ்வளவு திட்டமிடல் மற்றும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் குறைபாடற்ற முறையில் செயல்படுத்தியதற்காக முழு நிகழ்வுக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் என்னால் நன்றி சொல்ல முடியாது. ஒவ்வொரு விவரங்களையும் ஆராய்ந்து இந்தத் திருமணத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்பமுடியாத விதவிதமான அலங்காரங்களை அழகுபடுத்தியவர்களுக்கு நன்றி. விருந்தோம்பல் மற்றும் அற்புதமான உணவை வழங்கியவர்களுக்கு நன்றி. கடந்த சில மாதங்களாக என்னுடன் சேர்ந்து இந்த அழகான நிகழ்வை என்னுடன் இணைத்ததற்காக இன்னும் பலர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன். எனது மகள் தனது புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் போது உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை,” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு பலரும் லைக்குகளை பொழிந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment