Advertisment

விஜயகுமார் பேத்தி தியா கண் அருகே மச்சம்: மணப் பெண் அலங்காரத்தில் மறைக்காதது ஏன்?

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், தியாவின் கண் அருகே இருக்கும் மச்சத்தை மணப்பெண் அலங்காரத்தில் மறைக்காதது ஏன் என்று பியூட்டிஷியன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Diya

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் திங்கள்கிழமை ஆடம்பரமாக நடைபெற்ற நிலையில், தியாவின் கண் அருகே இருக்கும் மச்சத்தை மணப்பெண் அலங்காரத்தில் மறைக்காதது ஏன் என்று மேக்கப் போட்ட பியூட்டிஷியன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. 

Advertisment

தமிழ் சினிமா சீனியர் நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மிக ஆடம்பரமாக கோலாகலமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நேரில் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகள்தான் தியா. அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர், இவரைப் போல, இவருடைய மகள் தியாவும் ஒரு மருத்துவர். பிரம்மாண்டமாக நடந்த தியா திருமணம் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தி இணைய தளங்கள் பலவற்றிலும் விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளது. 

விஜயகுமார் பேத்தி தியாவுக்கு திருமணத்தில் மணப்பெண் மேக்கப் செய்த பியூட்டிசியன் ஒருவர் அளித்த பேட்டியில்,  தியா முகத்தில் இருக்கும் மச்சத்தை மேக்கப் செய்யும்போது அவர் அதை மறைக்க வேண்டாம் எனக் கூறியது பற்றிய ஒரு நெகிழ்ச்சியான விஷயத்தை கூறியிருக்கிறார். பியூட்டிசியனின் பேட்டியில்,  தியா இவ்வளவு அழகாக இருந்தாலும் அவருடைய கண் பக்கத்தில் ஒரு வடு போல இருந்த மச்சத்தை மேக்கப் செய்து மறைக்க வேண்டாம் என்று கூறினார். அதோடு அதற்கு தியா கூறிய காரணத்தைப் பற்றி பியூட்டிசியன் கூறியிருக்கிறார்.

தியாவுக்கு மேக்கப் போட்ட பியூட்டிசியன் பேட்டியில் கூறியிருப்பதாவது: “முதலில் என்னிடம் பேசும்போது எனக்கு தியா இவ்வளவு பெரிய பிரபலத்தின் வாரிசு என்று எனக்கு தெரியாது. ஆனால், நான் அங்கே போன பிறகு விஜயகுமார் குடும்பத்தை சார்ந்த எல்லோருமே என்னிடம் பாசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதோடு மணப்பெண் தியாவின் அம்மா அனிதா மற்றும் அவருடைய சித்திகளான ஸ்ரீதேவி, ப்ரீத்தி போன்றோரும் நாங்கள் செய்த மேக்கப் ஐ பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. அதோடு நான் வியந்து பார்த்தது தியாவை தான்.. காரணம் அவர் ஒரு மருத்துவராக இருக்கிறார், அதோடு இவ்வளவு பெரிய குடும்பத்தை சார்ந்தவர், ஆனால், தான் ஒரு பிரபலத்தின் வாரிசு என்று கொஞ்சம் கூட எந்த இடத்திலும் அவர் காட்டிக்கவே இல்லை. சாதாரண ஒரு பெண் போலத்தான் அவர் பழகிக் கொண்டிருந்தார். அதேபோல தியாவிற்கு முகத்தில் பெரிய அளவில் எந்த ஒரு மேக்கப்பும் போடவில்லை. 

அவர் இயற்கையாக இருப்பது போன்றே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அவருடைய கண்களுக்கு மட்டும் தான் நான் கொஞ்சம் மேக்கப் கொடுத்து இருந்தேன். அதை பார்த்து எல்லோரும் பாராட்டி இருந்தனர். அதுபோல கண்களுக்கு பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் வடுபோல இருந்தது. அதை மறைக்கவா என்று கேட்டபோது அதற்கு தியா மறுத்துவிட்டார். அதற்கு காரணம் அந்த மச்சம் பிறந்து வளர்ந்து இத்தனை வருடங்களாக என் கூடவே இருக்கிறது. அதை மறைத்து நான் போலியாக இருக்க விரும்பவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி இருந்தார். இது எனக்கு அதிசயமாக இருந்தது. இது போல எல்லோரும் நமக்கு இருக்கும் குறையை கூட நம்முடைய பலமாக எடுத்துக் கொண்டால் எதை நினைத்து பயப்படவும் வேண்டாம், அவமானப்படவும் வேண்டாம் என்று எனக்கு தோன்றியது. ஏனென்றால் தியாவின் முகத்தில் அந்த ஒரு மச்சம் மட்டும்தான் ஒரு குறை போல இருந்தது. அதையே எனக்கு பெருமை என்று தியா சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது” என்று பியூட்டிஷியன் பேசியிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment