/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-110917-2025-08-20-11-09-33.jpg)
விஜயகாந்த் என்று பெயர் எழுதினாலே, அதை பார்த்து கொண்டே இருக்கக்கூடிய ஆட்கள் இன்றும் இருக்கிறார்கள்.. அவரது மறைவுக்கு பிறகும், அவர் மீதான மதிப்பும், மரியாதையும், அன்பும் கூடிக் கொண்டே இருக்கிறது.
அவருடைய சாதனையை, அவருடைய பழக்கவழக்கத்தை, குணநலன்களை ஒவ்வொருவராக சொல்ல சொல்ல, அனைவரும் பிரம்மித்து போய் கேட்கிறார்கள்.. இப்படியெல்லாம் ஒரு மனிதன் வாழ்ந்துவிட முடியுமா? என்று வியந்து சொல்கிறார்கள்.
அந்தவகையில் கேப்டன் பிரபாகரன் படம் பிளாக் பஸ்டர் படமாகும். அதே படத்தை இந்த வருட விஜயகாந்த் பிறந்தநாளன்று, 500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய போகிறார்கள்.. அப்படத்தை முழுமையாகவே டிஜிட்டல் செய்து வெளியிடுகிறார்கள்.
மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் வருகிறது.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
1991 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டன்று வெளியான இயக்குநர் ஆர். கே. செல்வமணி அவர்களின் இயக்கத்தில் உருவான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம், வெளியானவுடன் திரையரங்குகளில் மெகா ஹிட் ஆகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்ச் சினிமாவில் தனது தனி அடையாளத்தைப் பதித்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு, இப்படம் அவரை தொடர்ந்து “கேப்டன்” என்று ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த பெயர், பிறகு அவரது வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்ட ஒரு பெருமைக்குரிய பட்டமாக இருந்து வந்தது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பு செய்தது இசைஞானி இளையராஜாவின் இசை. அவரது அசத்தலான பின்னணி இசை மற்றும் ஹிட் ஆன பாடல்கள், படத்தின் அதிரடியான கதையுடன் சேர்ந்து மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
திரைப்படத்தில் விஜயகாந்த் உடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பணியாற்றியிருந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்ய, படம் ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்களாக இடம்பிடித்தது.
இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு, இந்தக் கிளாசிக் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு புதிய அழகில் திரும்பி வந்துள்ளது.
4K ரெஸலூஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் தொழில்நுட்பத்தின் மூலம், படம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் ஒரு புதுப்பித்த அனுபவத்தை வழங்கும் வகையில் மீண்டும் திரையரங்குகளுக்கு வர தயாராக உள்ளது.
இதன் மூலம், பழைய ரசிகர்களுக்கு நாஸ்தால்ஜியாவாகவும், புதிய ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவமாகவும் அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.