தற்போது நடித்துவரும் ஜனநாயகன் படமே தனது நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவித்துள்ள தளபதி விஜய், அடுத்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனிடையே தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது ஆண்டு தொடங்க விழாவில் அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read In English: Vijay’s political speech at TVK’s first anniversary celebrations reconfirms Jananayagan is his swansong
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெறறிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது தனது 30 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையை விட்டு விலக உள்ளதாகவும், அறிவித்து பலருக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அரசியல் கட்சி தொடங்கப்பட்டதில் பலர் மகிழ்ச்சியடைந்தாலும், ஒருசிலர் சினிமாவை விட்டு விலகுவது ஒரு தற்காலிக முடிவாக இருக்கலாம், நிரந்தர முடிவாகக இருக்காது நம்பினர்.
இருப்பினும், எச் வினோத் இயக்கிய "ஜனநாயகன்" திரைப்படம் அவரது கடைசி படமாக இருக்கும் என்பதை விஜய் மற்றும் அவரது குழுவினர் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் மமிதா பைஜு போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
விஜய் சினிமாவிலிருந்து விலகுவது தற்காலிகமானது என்ற குரல்கள் வலுத்தாலும், த.வெ.கஆண்டு விழாவில் பேசிய விஜய் தனது, முன்னணியில் உள்ள விஷயங்களை இன்னும் தெளிவுபடுத்தியுள்ளது. தனது பேச்சில், ஆளும் தமிழ்நாடு மாநில அரசு மற்றும் இந்திய மத்திய அரசு போன்ற தனது அரசியல் மற்றும் சித்தாந்த எதிரிகளைப் பற்றி அவர் வார்த்தைகளால் பேசாமல் அதிரடியாக பல கருத்துக்களை பேசி, ஜனநாயகன் தான் தனது நடிப்பு வாழக்கையின் கடைசி படம் என்று பேசி இருப்பதால், ஜனநாயகன் தான் அவரது கடைசி படம் என்பது தெளிவாகிறது.
தனது பேச்சில், அரசியல் என்பது உண்மையிலேயே ஒரு தீவிரமான விஷயம் என்பதை விஜய் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தைக் கொண்டிருக்கத் தேவையான அடித்தளத்தை அறிந்து அவர் இந்த வழியில் நுழைகிறார், மேலும் அதை நோக்கியே செயல்படுகிறார். நடிகராக அவரது வாழ்க்கையை ரசித்த பல நெட்டிசன்கள், சுவரில் உள்ள எழுத்து தெளிவாக இருந்தது என்றும், ஜனநாயகன் தான் தங்கள் அஸ்தான நடிகரை பெரிய திரையில் பார்க்கும் கடைசி முறை என்றும் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் அரசியல் பெரியவர்களாகவும், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா போன்றவர்கள் மாநில முதலமைச்சர்களாகவும் மாறியுள்ளனர். கமல்ஹாசன், சரத்குமார், நெப்போலியன், குஷ்பு சுந்தர் மற்றும் கார்த்திக் ஆகியோர் மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைவர்களாக மாறிய பிற நடிகர்களாக உள்ளனர். தற்செயலாக, இந்த நடிகர்களில் யாரும் அரசியல் களத்தில் இறங்கும்போது தங்கள் நடிப்பு வாழ்க்கையை விட்டுக்கொடுக்கவில்லை. 1972 ஆம் ஆண்டு தனது கட்சியைத் தொடங்கி, 1977 ஆம் ஆண்டு முதல் முறையாகப் போட்டியிட்ட தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சரான எம்ஜிஆரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி விஜய் நடந்து வருவதால், அவரது வாழ்க்கையை இது மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.
இருப்பினும், விஜய் மற்றும் த.வெ.க.வுக்கு மட்டுமல்ல, இப்போது கட்சியின் அரசியல் பணியாளர்களாகவும், அவரது அரசியல் அபிலாஷைகளுக்கான வாக்கு வங்கியாகவும் தங்களை மாற்றிக் கொள்ள எதிர்பார்க்கப்படும் ஏராளமான ரசிகர்களுக்கும் இது சுவாரஸ்யமான நேரமாகும்.