/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1310.jpg)
இந்தியில் வெளியான ’பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை, ஹெச். வினோத் இயக்கியிருந்தார். முன்னணி கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். ஜி ஸ்டூடியோஸுடன் இணைந்து போனி கபூர் தயாரித்திருந்த இந்தப் படத்தை, எஸ்.பிக்சர்ஸும், கந்தசாமி ஆர்ட்ஸும் வெளியிட்டன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' படம் ஆகஸ்ட்.8ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நேர்கொண்ட பார்வை ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இப்படம், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக் இது என்பது அனைவருக்கும் தெரியும்.
முதலில் இயக்குனர் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்க மிகவும் யோசிக்க, அஜித் 'நீங்கள் எடுத்தால் நல்லா இருக்கும்' என்று கன்வின்ஸ் செய்து இயக்க வைத்திருக்கிறார். 'மாஸ், மசாலா, என்ற எந்த கமர்ஷியல் அம்சமும் இல்லாத ஒரு படத்தில் நீங்கள் ஏன் நடிக்க விரும்புகிறீர்கள்?' என்று வினோத் கேட்ட போது, 'பெண்களை மையப்படுத்தி நடக்கும் வன்முறைகள் இப்போது அதிகமாகிவிட்டது. நானே பெண்களை துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன். இந்த மாதிரி சமூகத்துக்கு தேவையான ஒரு படம் கொடுக்க விரும்புகிறேன்' என்று அஜித் சொல்லி இருக்கிறார்.
மேலும் படிக்க - Nerkonda Paarvai Release Date : அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இதனால், அஜித் ரசிகர்கள் என்பதைக் கடந்து பரவலாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் படமாக இது அமைந்திருக்கிறது. குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில்... பெரும்பாலும் ஆக்ஷன் படங்களிலும், பக்கா கமர்ஷியல் படங்களிலும் நடித்து வரும் அஜித், இதுபோன்ற சமூக பிரச்சனைகள் சார்ந்த படங்களில் நடிப்பது கண்டிப்பாக வரவேற்கத்தக்கது என்பதே பெண்களின் கருத்தாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.