கொரோனா ஊரடங்கால் பல சீரியல்களின் ஷூட்டிங் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் டிவியில் 'தமிழும் சரஸ்வதியும்' என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் ப்ரோமோவை விஜய் டெலிவிஷன் வெளியிட்டுள்ளது. இதில் நக்ஷத்திரா நாகேஷ் மற்றும் தீபக் தினகர் இணைந்து நடிக்க உள்ளனர்.
Advertisment
இந்த சீரியலில் 12ஆம் வகுப்பு தேர்வை 8 அட்டம்ப்ட் எழுதியும் பாஸ் செய்ய முடியாத பெண்ணாக சரஸ்வதி என்ற கேரக்டரில் நக்ஷத்திரா நடித்துள்ளார். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என கூறும் நட்சத்திரா 8வது முறை எப்படியாவது பாஸ் செய்து தனது அப்பா மனதில் இடம் பிடிக்க நினைத்து கோவிலுக்கு செல்கிறார். அதே கோவிலில் படிக்காத பையனான தனக்கு படித்த பெண்ணை திருமணம் செய்ய உதவுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார் தீபக். சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தென்றல் சீரியலில் தீபக் நடித்திருந்தார். அந்த தொடர் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளராகவே இருந்த தீபக் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.
அதேபோல் தமிழ் சின்னத்திரையில் சன்டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த நக்ஷத்திரா ஏராளமான ஆல்பம் சாங் நடித்துள்ளார். பிறகு சன்டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil