நடிகர் விக்ரம் நடித்த படங்களிலேயே மிக முக்கியமானதும், அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததும் சேது திரைப்படம். பாலா இயக்கிய இந்தப் படம், விக்ரமின் நடிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது. ஆனால், இந்த படத்திற்காக அவர் சந்தித்த சிரமங்கள் ஏராளம்.
'சேது' கதாபாத்திரத்திற்காக, விக்ரம் தனது உடலை வருத்தி, கடுமையான தியாகங்களைச் செய்தார். அதில் மிக முக்கியமானது, 15 நாட்கள் பட்டினி கிடந்தது. ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனாக தனது கதாபாத்திரத்திற்குள் முழுமையாக ஒன்ற, இந்தத் தியாகம் அவசியமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அவரது உடல் எடை கணிசமாகக் குறைந்தது, அது கதாபாத்திரத்தின் தோற்றத்திற்குப் பெரும் உதவியாக இருந்தது. மேலும், இந்தப் படப்பிடிப்பின் போது விக்ரம் சந்தித்த மற்றொரு சவால், ஒரு காது கேட்காத நிலை.
'சேது' கதாபாத்திரத்தின் ஒருபகுதியாக, காது கேட்காதது போன்ற பாவனையை அவர் செய்ய வேண்டியிருந்தது. இது நடிப்பு சார்ந்த விஷயம் என்றாலும், அந்த உணர்வை வெளிப்படுத்த அவர் கடும் பிரயத்தனம் செய்தார். யாராவது பேசினால், அவர்களைப் பார்த்தே புரிந்துகொள்ளும் விதமாகவும், சில சமயம் தட்டிச் சொல்லும்போதும் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியதாக படத்தின் இயக்குநர் பாலா புதுயுகம் சேனலில் நடத்தப்பட்ட நேர்க்காணலில் கூறினார்.
Throwback : எனக்கு பிடித்த நடிகர் அவர்தான்.. #directorBala #surya #vishal #vikram #atharva #arya #puthuyugamtv #TamilCinema #vanangaan #CinemaLover #balamovies
Posted by Puthuyugamtv on Saturday, January 18, 2025
இந்த கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே, 'சேது' திரைப்படம் விக்ரமுக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தனது அடுத்தடுத்த படங்களில் பல்வேறு பரிமாணங்களில் நடித்து, சினிமா ரசிகர்களால் 'சீயான்' என்று அன்போடு அழைக்கப்படும் அளவிற்கு தனித்துவமான இடத்தைப் பிடித்தார். 'சேது' படத்திற்காக அவர் பட்ட கஷ்டங்கள், அவரது வெற்றியின் ஒருபகுதியாக இன்றும் பேசப்படுகிறது.