விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஒரு சிறந்த ஜோடி. ஆனால், அவர்களின் காதல் கதை ஒரு சங்கடமான தருணத்தில் தொடங்கியது. கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் - நடிகை அனுஷ்கா ஷர்மாவும் முதலில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் சந்தித்தது தெரியும். 2019-ல் அமெரிக்க விளையாட்டு பத்திரிகையாளர் கிரஹாம் பென்சிங்கருக்கு அளித்த பேட்டியில், அனுஷ்காவுடனான தனது முதல் உரையாடலை விராட் வெளிப்படுத்தினார். அது சங்கடங்கள் நிறைந்ததாகவும், தான் பதட்டமான மனநிலையில் இருந்ததாகவும் ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன ஒரு ஜோக் சுத்தமாக எடுபடவில்லை என்றும் விராட் கோலி கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க:
அந்த உரையாடலில், விளம்பர படப்பிடிப்பின்போது தான் மிகவும் பதட்டமாக இருந்ததாக விராட் ஒப்புக்கொண்டார். அனுஷ்கா தன்னை விட உயரமாக இருக்கலாம் என்று கூறப்பட்டதால் தனது உயரத்தைப் பற்றியும் அவர் கவலைப்பட்டார். படப்பிடிப்பிற்காக அவர் ஹீல்ஸ் அணியாமல் இருக்கலாம் என்று சாதாரணமாக அவர் கூறினார்.
அனுஷ்கா சிறிய ஹீல்ஸ் கொண்ட ஷூ அணிந்திருந்தாலும், அவர் இன்னும் உயரமாகத் தெரிந்தார். அது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக விராட் கோலி நினைவு கூர்ந்தார். சூழ்நிலையை இலகுவாக்க முயற்சி செய்து அவர் ஒரு ஜோக் சொன்னார். ஆனால், அது விஷயங்களை மேலும் சங்கடமாக்கியது. விராட் கோலி கூறினார், “நான் அங்கு மிகவும் பதட்டமாக நின்று கொண்டிருந்தேன். எப்படி உரையாடலைத் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால், நான் ஏதோ முட்டாள்தனமாகச் சொன்னேன். அனுஷ்காவைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் ஹை ஹீல்ஸ் அணியவில்லை?’ என்று அது வேடிக்கையாக இருக்கும் என்று நினைத்து கேட்டேன்.” என்று வீராட் கோலி கூறினார்.
விராட் கோலி நினைவு கூர்ந்தார், “ஆனால் அனுஷ்கா என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து, ‘என்ன?’ என்று கேட்டார். நான் உடனடியாக தவறு செய்துவிட்டேன் என்று உணர்ந்து அதை சிரித்து சமாளிக்க முயன்றேன். உள்ளுக்குள் நான் ஒரு முழு முட்டாள் போல் உணர்ந்தேன்.” என்று கூறினார்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் தான் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அனுஷ்கா முழு நம்பிக்கையுடன் காணப்பட்டதாகவும், ஏனெனில், அவர் படப்பிடிப்பு தளங்களுக்குப் புதியவர் அல்ல என்றும் கோலி மேலும் கூறினார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா 2017 டிசம்பரில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு 2021 ஜனவரியில் வாமிகா என்ற மகள் பிறந்தார். 2024-ல் அகாய் என்ற மகனும் பிறந்தார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா விரைவில் பொதுமக்களின் தொடர்ச்சியான கவனத்திலிருந்து விலகி தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.
நடிகை சோனல் சவுகான் சமீபத்தில் விராட் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வந்ததற்காக அனுஷ்காவைப் பாராட்டினார். ஃபில்மிஞ்யானுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், அனுஷ்கா ஒரு கணவராக விராட் கோலிக்கு 'சரியான பெண்' என்று சோனல் சவுகான் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “அவர் இப்போது மிகவும் பக்தியுள்ளவராக இருப்பதால், ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஹர் ஹர் மகாதேவ் என்று நான் கூறுவேன். அவர் தனது ஆன்மீகப் பக்கத்தை ஆராயும் பல ரீல்ஸ்களை நான் பார்த்திருக்கிறேன். அவரது வாழ்க்கையில் சரியான பெண்மணி நிச்சயமாக அவரது ஆன்மீகப் பக்கத்தை வெளிப்படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சரியான நபர்கள், நேர்மறையான நபர்களால் சூழப்பட்டிருக்கும்போது, அது உங்கள் ஆளுமையில் பிரதிபலிக்கிறது. அவர் அவரது வாழ்க்கையில் ஒரு அமைதியான விளைவை ஏற்படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று அந்த நடிகை சோனல் சவுகான் கூறினார்.