கடந்த ஆண்டு வெளியான சுல்தான் படத்திற்கு நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், விருமன் படம் வரும் 12-ந் தேதி வெளியாக உள்ளது.
குட்டிப்புலி கொம்பன் மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தைய இயக்கியுள்ள விருமன் படத்தில் ராஜ்கிரன். சரண்யா, பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், நாயகியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது மேலும் பாடல்களுடகன் சேர்ந்து படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்ட நிலையில். படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்பர்ப்பு எழுந்துள்ளது. இந்த விழாவின் போது பேசிய அதிதி ஷங்கர், மேடையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் நடனமாடி ஆச்சரியப்படுத்தினார்.
இதனிடையே விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் அதிதி ஷங்கர் இந்த படத்தில் வரும் மதுரை வீரன் என தொடங்கும் பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியதை தொடர்ந்து முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இந்த பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி என்று கூறப்படுகிறது.
யுவன் அதிதி குரலில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள இந்த பாடல் முதலில் செந்தில் ராஜலட்சுமி இருவரும் பாடியதாகவும், ஆனால் அதிதி வந்த பிறகு ராஜலட்சுமியின் குரலில் பதிவான பாடலை நீக்கிவிட்டு அதிதியை புதிதாக பாட வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூப்பர் சிஙகர் செந்தில் ராஜலட்சுமி ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“