/tamil-ie/media/media_files/uploads/2017/12/vishal-krishna759.jpg)
கடும் உழைப்பில் உருவான படைப்பை திருட்டு வி.சி.டி, சமீப காலமாக அழித்துக் கொண்டிருக்கிறது. இதனிடமிருந்து சினிமாவைக் காப்பாற்ற மத்திய அரசால் செக்சன் 6ஏ சினிமாட்டோகிராப் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”பைரஸியால் அழிந்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவையும், பிராந்திய மொழிகளில் வர்த்தக ரீதியிலும் தரமான கலை படைப்பிலும் முதன்மையாக திகழும் தமிழ் திரைப்பட துறையையும் காப்பாற்ற, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள செக்சன் 6ஏ சினிமாட்டோகிராப், சட்டத்தை ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட துறை சார்பாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.