கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை (10.8.18) உலகம் முழுவதும் வெளியாகிறது.
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் நாளை ரிலீசாக இருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
விஸ்வரூபம் 2 :
தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தெலுங்கில் மட்டும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில்க் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியான நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தனர்.
இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ/யு சான்றிதழ் வழங்கி இருந்தது. படத்தில் சுமார் 22 இடங்களில் சென்சார்போர் கத்திரி போட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், மர்மயோகி திரைப்படத்திற்காக வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பித்தரும்வரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.மர்மயோகி படத்திற்கான கதை, திரைக்கதை தொடர்பான பணிகளை முடித்துவிட்டதாக கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சாய்மீரா நிறுவனம் கொடுத்த பணம் இதுவரை நடைபெற்ற பணிகளுக்காக செலவாகிவிட்டதாகவும், மேற்கொண்டு பணத்தை ஒதுக்க அவர்களால் இயலவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, படத்தை எடுத்தப்பிறகுதான் அவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாய்மீரா நிறுவனத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, விஸ்வரூபம்-2 படம் நாளை வெளியாவதில் இருந்த தடை விலகியுள்ளது.
எனவே, திட்டமிட்டப்படி நாளை உலகம் முழுவதும் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.