Tamil Serial News: தொகுப்பாளர்களும் இப்போது சீரியல், சினிமா என அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில், தற்போது வி.ஜே அர்ச்சனாவும் சீரியலில் அறிமுகமாகிறார். இவரை டிவிக்களிலும் டிக் டாக் வீடியோக்களில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரணம் வழங்குவது நீட் தற்கொலையை ஊக்குவிக்கும் : சென்னை உயர்நீதிமன்றம்
காதல் பாடல்களை, ரொமாண்டிக் எக்ஸ்பிரஷன்களோடு டிக் டாக்கில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் மூலமாக அவருக்கு ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
வி.ஜே.அர்ச்சனா
டிக் டாக்கால் பலரது வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன . பலருக்கு அது பாதிப்பையும் கொடுத்துள்ளது. ஆனால் அர்ச்சனாவைப் பொறுத்தவரை நிறைய பாசிட்டிவ் வைப்ஸ்தான் டிக் டாக் மூலம் கிடைத்திருக்கிறதாம். ரசிகர்கள் நிறைய கிடைத்தனர். டிவியில் அறிமுகமானார். இப்போது சீரியலுக்கும் வந்து விட்டார்.
தற்போது டிக்டாக் தடை செய்யப்பட்டு இருப்பதால், இதில் பிரபலமாக இருந்தவர்களை காண முடியாமல் அவரது ரசிகர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இதற்கு வழிகாட்டியாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. பிரபலங்கள் தங்களது படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் அப்லோட் செய்து வருகிறார்கள். அதோடு பழைய டிக் டாக் வீடியோக்களையும் பலர் அப்லோட் செய்து வருகிறார்கள்.
இப்போது நடிகையாக அர்ச்சனா
சிங்கிள் டு கமிடட்.. சூப்பர் சிங்கர் விக்ரமுக்கு காதல் கடிதம் இனி வருமா?
இந்நிலையில், விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின், சீசன் 2 விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் ஆதித்யா டிவி அர்ச்சனா நடிக்க உள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா ராணி 2 படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட படத்தை, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”