VJ Chithra Suicide: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா.
விஜே சித்ரா தற்கொலை - மலையாளத்தில் படிக்க
1992ம் ஆண்டு மே 2-ஆம் தேதி சென்னையில் பிறந்த சித்ரா, 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.
வருங்கால கணவருடன் விஜய் டிவி நிகழ்ச்சியில்...
ஆனால் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான் அவருக்கு பெரும் பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அந்த சீரியலின் கதிர்-முல்லை ஜோடிக்காகவே ரசிகர்கள் குவிந்தனர். திரையில் அந்த ஜோடியை ரசிக்காதவர்கள் யாருமே இல்லை எனலாம். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளை கொண்டிருந்த சித்ரா, தொலைக்காட்சிகளில் சில நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஆடியுள்ளார்.
டிரடிஷனல் லுக்கில்...
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனது வருங்கால கணவருடன் வெளியில் செல்லும் போது எடுத்த படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார் சித்ரா.
இந்நிலையில், இன்று அதிகாலை படபிடிப்பு முடித்து வந்த சித்ரா, ஹேமந்த் ரவியுடன் ஓட்டல் அறையில் தங்கியிருக்கிறார். தான் குளிக்கப்போவதாகவும், அதனால் அறையை விட்டு வெளியேறும் படியும் ஹேமந்திடம் கூறியதாகவும், அதனால் அவர் வெளியில் காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஓட்டல் ஊழியர் தங்களிடம் இருந்த மாற்று சாவியைக் கொண்டு வந்து அறையை திறந்து பார்த்ததில், மின்விசிறியில் தூக்கிட்டு சித்ரா தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செமி டிரடிஷனல் சித்ரா...
படபிடிப்பில் இருந்த சித்ரா, நேற்று இரவு 7 மணியளவில் கூட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் போட்டிருக்கிறார். அங்கு ஏதேனும் பிரச்னையா? அல்லது ஓட்டலுக்கு திரும்பிய சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் ஏதாவது பிரச்னையா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது இது குறித்து சித்ராவுடன் இருந்த ஹேமந்த் ரவியிடம் நசரத்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சித்ராவின் மறைவு, சின்னத்திரை நடிகர்கள் மட்டும் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”