Advertisment

மீண்டும் சூப்பர் சிங்கரில் இணைந்தாரா பிரியங்கா?

பிக்பாஸ் செல்வதற்கு முன், பிரியங்கா' சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

author-image
WebDesk
New Update
Vj Priyanka

Vj Priyanka again join in super singer as a host after a bigg boss show

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை தட்டிச் சென்றார்.

Advertisment

பிக்பாஸ் செல்வதற்கு முன், பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது, விருந்தினராக வந்த இசையமைப்பாளர் அனிரூத்திடம் உங்களுக்கு விஜய் டிவியில் பிடித்த ஷோ எது என மாகாபா-வும், பிரியங்காவும் கேட்டனர். அப்போது அனிரூத் ஸ்டார்ட் மியூசிக் சொன்ன உடனே பிரியங்கா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். அப்போது ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 சீக்கிரமா ஆரம்பிங்க என விஜய் டிவியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

பிறகு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, ஃபைனல்ஸ் முடிந்த ஓரிரு நாட்களில் பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல, யாருமே எதிர்பாராதவிதமாக, மாகாபா ஸ்டார் மியூசிக் சீசன் 3யை தொகுத்து வழங்கினார். இது பிரியங்கா ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இனி பிரியங்கா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்க மாட்டார், அதனால் தான் சீக்கிரம் செட்டிலாகி விட, பிக்பாஸ் வீட்டுக்கு சென்று விட்டார் என ரசிகர்கள் சலசலக்க தொடங்கினர்.

இருப்பினும் தன்னுடைய நகைச்சுவையான பேச்சுத்திறமை மூலம், மாகாபா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது. இனி இந்த ஷோவை மாகாபாவை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ப்ரோமோ வீடியோக்களில் கமெண்ட் செய்ய தொடங்கினர்.

இதுபோதாது என பிரியங்கா வீட்டுக்குள் இருக்கும் போது சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ரோமோவும் வெளிவந்தது. பிரியங்காவும், மாகாபா-வும் தான், பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்நிலையில் பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க, மாகாபா-வின் கோ ஆங்கர் யாராக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கினர்.

ஆனால் யாராக இருந்தாலும், பிரியங்கா அளவிற்கு ஆங்கரிங் செய்ய முடியாது. பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும். சூப்பர் சிங்கரில் போட்டியாளர்களின் பாடல்களை விட, பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும். போட்டியாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், நடுவர்களையும் பிரியங்கா விடமாட்டார். உன்னி கிருஷ்ணன் முதல் அணு வரை எல்லாரையும் கலாய்த்து தள்ளுவார்.

ஒரு வாரம் பிரியங்கா அல்லது மாகாபா வாராமல் போனால், ரசிகர்கள் ஏன் வரவில்லை என கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தளவுக்கு சூப்பர் சிங்கர் என்றாலே, பிரியங்காவும், மாகாபாவும் தான் என்றாகிவிட்டது.

publive-image

இப்படி இருக்க சமீபத்தில் ஆரம்பித்த சூப்பர் சிங்கர் ஜீனியர் 6 ஷோவில் பிரியங்கா இல்லாமல் போனது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு, பிரியங்கா கடந்த வாரம், யூடியூப் லைவில் ரசிகர்களிடம் பேசினார். அப்போது, பலரும், இனி மறுபடியும் சூப்பர் சிங்கர்-ல உங்கள எப்போ பாக்கலாம் என கேட்க, அதற்கு பதிலளித்த பிரியங்கா, அது எனக்கே தெரியல.. ஆனால் கூடிய சீக்கிரமா சொல்றேன் என கூறினார்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷூட்டிங்கின் போது, பின்னணி பாடகி பிரியங்கா மற்றும் தொகுப்பாளினி பிரியங்கா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனால் இனிவரும் எபிசோட்களில், பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment