Voting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா என்பது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. எப்போதையும் விட ஆர்வமாக பொதுமக்களும், பிரபலங்களும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர்.
குறிப்பாக பிரபலங்கள் வாக்களித்து விட்டு, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சாலிகிரமத்தின் ஒரு பள்ளியில் வாக்களித்ததாக படமும் வெளியானது. இந்நிலையில் அவர் ஓட்டு போடவில்லை என்றும், வெறும் மை மட்டும் வைக்கப்பட்டதென்றும் தேர்தல் அதிகாரி கூறியதாக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்தார்.
இது பற்றி அவர், ”நடிகர் ஸ்ரீகாந்த்தின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லாததால், அவர் ஓட்டளிக்கவில்லை” என, வாக்குச்சாவடி அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால், சாலிகிராமம் ஓட்டுச்சாவடியில், தான் வாக்களித்துள்ளதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
எனவே, அவர் ஓட்டளித்தாரா, இல்லையா என விசாரிக்கும்படி, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜன்டுகள் என, அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.