New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Simbu.jpg)
சிம்பு என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லும் அளவுக்கு இருந்த நிலையை மாற்றியுள்ள அவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ள நடிகை சித்தி இதனானி சேனல் ஒன்றுக்கு அளித்து பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் சிம்பு. எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் இவர், கடந்த 2002-ம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகானா அறிமுகமானார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த சிம்பு இடையில் பல சர்ச்சைகளில் சிக்கினார்.
சிம்பு என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லும் அளவுக்கு இருந்த நிலையை மாற்றியுள்ள அவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்தார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சித்தி இத்னானி தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரமோஷனுக்காக பல்வேறு யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்துள்ள சித்தி இத்னானி ஒரு பேட்டியில் ஏதாவது கற்பனை கதை இருந்தால் சொல்லும்படி தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்காக சித்தி இத்னானி சொன்ன சிம்பு தொடர்பான காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கதையில், சிம்புவும் சித்தியும் பள்ளி மாணவர்கள் என்றும், சித்தியின் தந்தையாக ரஜினி மற்றும் சிம்புவின் அண்ணனாக உதயநிதி இருவரும் நடிக்க எங்கள் திருமணத்தை ரஜனி உதயநிதி இருவரும் சேர்ந்து நடத்த வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த கதை தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.