/tamil-ie/media/media_files/uploads/2017/04/trisha-1.jpg)
ஜெய சக்தி
தென்னிந்தியசினிமாவில் தற்போதுமுன்னணிநடிகைகள்என்றால்அதுஅனுஷ்கா, நயன்தாராதான். இவர்களுக்குத்தொடர்ந்துநல்லபடங்கள்கிடைப்பதோடுஅவைவெற்றிஅடைந்தும் வருகின்றன. இருவருமேஆரம்பத்தில்எந்தப்படம்கிடைத்தாலும்நடிக்கலாம்என்றநிலையில்தான்இருந்தார்கள். ஆனால்இன்றுபடங்களைத்தேர்வுசெய்துநடிக்கும்அளவுக்குவளர்ந்துவிட்டார்கள். என்னதான்தமிழில்பெண்களைமையப்படுத்திபடம்எடுத்தாலும்ஓடாதுஎன்றநிலையைஇருவருமேமாற்றிஇருக்கிறார்கள். ஆனால்இவர்களைவிடவும் சீனியரான த்ரிஷாவின்நிலை? இவர்கள் மூவரின் திரை வாழ்வைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?
அனுஷ்கா: தனிக் கொடி நாட்டிய அருந்ததி
ஆரம்பத்தில்இவர்நடித்தபடங்கள்வழக்கமானநடிகைகளின்படங்கள்போலவேதான்இருக்கும். தமிழில் இவர் அறிமுகமான ரெண்டு படத்தில் கிளாமர் தூக்கலாக இருந்தது. கதாநாயகிக்கென்று பெரிதாக எதுவும் வேலை இல்லாத வேடம்தான். அப்படிச் சில படங்கள் நடித்த பிற்கு வந்த அருந்ததிபடம்தான்இவருக்குத்திருப்புமுனையைஏற்படுத்தித் தந்தது. இவரது கம்பீரமான அழகும், வசீகரமும் அருந்ததி பாத்திரத்துக்குக் கச்சிதமாகப்பொருந்திப்போகஅதுபோன்றபீரியட்படங்களில்அவருக்குவாய்ப்புஅதிகரிக்கஆரம்பித்தது. அந்தமாதிரிபடங்களுக்குஅவரதுஉயரமும்தோரணையும்நன்றாகவேகைகொடுத்தன.
அருந்ததிக்குப்பிறகுருத்ரமாதேவி,பாகுபலிஎன்றுதனக்கெனதனிஅடையாளத்தைபதித்துக்கொண்டிருக்கிறார். பாகுபலி 2-வின் அசத்தல் நாயகியாக உருவெடுத்திருக்கிறார். இடையில் வேட்டைக்காரன், சிங்கம் என்று வழக்கமான வேடங்களில் நடித்தாலும் அருந்ததியால் கிடைத்த புகழும் அந்தஸ்தும் இன்னமும் மங்காமல் இருக்கிறது. அதற்கு அடிப்படையான அழகும் கம்பீரமும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. இவற்றோடு நடிப்புத் திறமையும் சேர்ந்திருப்பதால் இவரது கொடி உயரத்தில் பறக்கிறது.
நயன்தாரா: என் வழி தனி வழி
நயன்தாராஇன்று அடைந்திருக்கும் உயரம் பிரமிப்பூட்டுகிறது. ஐயா, சந்திரமுகி போன்ற படங்களில் சாதாரண வேடங்களில் வந்த நாட்கள் இப்போது மங்கலான கனவுபோல இருக்கின்றன. வல்லவன், வில்லு போன்ற படங்களில் வெறும் கிளாமர் பொம்மையாக வந்துபோன நினைவுகளும் மறைந்துவிட்டன. நயன்தாராநடிக்கும்படங்கள்அனைத்திலும்அவருக்குமுக்கியத்துவம்வாய்ந்தகதாபாத்திரம்நிச்சயமாகஇருக்கிறது.
பல்வேறுசர்ச்சைகளிலும்கிசுகிசுக்களிலும்சிக்கினாலும் இவரது திரை வாழ்வின் பயணம் சீராக உள்ளது. இப்போதுகோலிவுட்டின்லேடிசூப்பர்ஸ்டாராகவலம்வருகிறார். இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்இவருடையகால்ஷீட்டுக்காகக்காத்திருக்கிறார்கள்.இவருக்கெனவேஒருசினிமாபிசினஸ்இருக்கிறது. அதுதான்இவருக்குமாயா, நானும் ரவுடிதான், டோரா, அறம்போன்றபடவாய்ப்புகளைஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றன. அந்தப் அப்டங்களில் சிறப்பாக நடித்து அந்த வாய்ப்புகளுக்கு முற்றிலும் நான் தகுதியானவள் என்பதையும் நயன் நிரூபித்துவருகிறார். அழகும், நடிப்பும் கொண்ட இவரது திரை ஆளுமை பிரமிக்கவைக்கிறது.
மேலும்,ஒவ்வொருபடத்துக்கும்தன்னைநன்றாகவேதயார்செய்துகொள்ளும்திறமைஇவருக்குநன்றாகவேகைகொடுத்திருக்கிறது. இப்போதெல்லாம்படங்களில்முழுமையாககவனம்செலுத்திவருகிறார். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். வீண்சலசலப்புகளுக்கும், கிசுகிசுக்களுக்குஇடம்கொடுப்பதில்லை. இவை அனைத்தும் சேர்ந்து நயன்தாராவை, என் வழி தனி வழி என்று தெம்போடு சொல்லவைக்கின்றன. நயன்தாராவுக்கென்று திரையரங்கில் பறக்கும் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் இதற்குக் கட்டியம் கூறுகின்றன.
தடுமாறும் த்ரிஷா
இவர்களுக்குமுன்பேபிரபலமாகஇருந்தத்ரிஷாவுக்குத்தற்போதுசுத்தமாகமார்க்கெட்இல்லை. சமீபத்தில்கிடைத்தபடங்களும்பெரிதாகக்கைகொடுக்கவில்லை. பூலோகம், தூங்காவனம், சகலகலாவல்லவன், அரண்மணை, நாயகிஆகியவை இவருக்கு ஏற்றம் தரும் என்ற எதிபார்ப்பு நிறைவேறவில்லை. கொடிபடத்தில்மட்டும்சற்றுமக்கள்மனதில்தங்கினார். ஆனாலும்அதுவும்பெரியஅளவில்அவரதுசினிமாவாழ்க்கைக்குபாசிட்டிவாகமாறவில்லை.
த்ரிஷா அபாரமான நடிகை இல்லை. ஆனால், திறமையான நடிகை. கொடுத்த வேடத்துக்கு நியாயம் செய்யக்கூடியவர். இவரிடம் அழகும் இருக்கிறது. இளமைத் தோற்றத்திலும் குறைவில்லை. ஆனாலும், இவரால் சரியான படங்களைத்தேர்வுசெய்ய முடியவில்லை. இவரும் பல படங்களில் கிளாமராக நடித்திருக்கிறார். ஆனால், நயன்தாராவுக்கோ (பில்லா) அனுஷ்காவுக்கோ (விக்ரமார்க்குடு) கிளாமர் கைகொடுக்கும் அளவுக்கு இவருக்குக் கைகொடுப்பதில்லை. எனக்கும் உனக்கும் என்பது போன்ற கிளாமர் இல்லாத வேடங்களில்தான் இவர் அதிகம் சோபிக்கிறார். அந்தப் படங்களும் கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் அல்ல. கதைகளுக்குஏற்பத்தன்னை மாற்றிக்கொள்ளஇவர் மெனக்கெடுவதும் இல்லை. சாமி, கில்லி, ஆய்த எழுத்து, சர்வம் என கிட்டத்தட்ட ஒரே தோற்றம், ஒரே நடிப்பு என்று இருப்பதால் இவரால் பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.
இடையில்ரியல்எஸ்டேட்தொழில்அதிபர்வருண்மணியனுடன்காதல், திருமணம்என்றுஆரம்பிக்கவேசுத்தமாகஃபீல்டில்இருந்துவெளியேறினார். ஆனால்அதுவும்பின்னர்அவருக்குசிக்கலாகிதிருமணம்நின்றுபோனது. இதுபோன்றசூழ்நிலைகள்சினிமாவில்உள்ளஎல்லாநடிகைகளுக்கும்ஏற்படக்கூடியதுதான். அவர்களுக்குமனஉளைச்சல்கள்இருக்கும், அதையெல்லாம்மீறித்தான்ஜெயிக்கிறார்கள். த்ரிஷாவும்அவற்றையெல்லாம்தூக்கிப்போட்டுவிட்டுமீண்டும்மெல்லசினிமாவுக்குள்பிரவேசமானார். தற்போதுநிலைமைரொம்பமோசம்இல்லைஎன்றாலும்அவருக்கானநேரம்கூடிவரவில்லையோஎன்னமோ, படங்கள்எதுவும்பெரிதாகபிரேக்கொடுக்கவில்லை.
தற்போதுதமிழில்மோகினி, கர்ஜனை, சதுரங்கவேட்டை2 போன்றபடங்களுக்குபுக்ஆகியுள்ளார். அனுஷ்கா,நயன்தாராவைப் போல இவரும்முக்கியமான நாயகியாக உருவெடுக்கிறாராஎன்றுபார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.