எனக்கு கதையே தெரியாது, ஆனா சில்வர் ஜூப்லி ஆகும்: ரஜினிக்கு உத்திரவாதம் கொடுத்து இசைஞானி தயாரிப்பில் வந்த படம்!

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து, வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் ‘ராஜாதி ராஜா’. 1989-ம் ஆண்டு மார்ச்சில் வெளியான இந்தப் படம், 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து, வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் ‘ராஜாதி ராஜா’. 1989-ம் ஆண்டு மார்ச்சில் வெளியான இந்தப் படம், 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது

author-image
WebDesk
New Update
Rajinikanth Rajadhi Raja movie

எனக்கு கதையே தெரியாது, ஆனா சில்வர் ஜூப்லி ஆகும்: ரஜினிக்கு உத்திரவாதம் கொடுத்து இசைஞானி தயாரிப்பில் வந்த படம்!

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து, வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் ‘ராஜாதி ராஜா’. 1989-ம் ஆண்டு மார்ச்சில் வெளியான இந்தப் படம், 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் இளையராஜாவின் கணிப்பு குறித்து ரஜினிகாந்த் இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

“ஒருமுறை இளையராஜா என்னிடம் வந்து, ‘என் அண்ணன் பாஸ்கரின் தயாரிப்பில் நீங்கள் ஒரு படம் நடிக்க வேண்டும்’ என்று கேட்டார். உடனே நான் சம்மதம் தெரிவித்தேன். அப்படி உருவான படம்தான் ‘ராஜாதி ராஜா’” என்று ரஜினி கூறினார். “இந்தப் படத்தின் இயக்குநர் சுந்தர்ராஜன் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், எனக்கு அவரைப் பற்றி முழுமையாகத் தெரியாது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. படத் தயாரிப்பாளர் பாஸ்கர் சார் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம், ‘இன்னைக்கு கிளைமேட் நல்லா இருக்கு. உங்களுக்கு இட்லி, மட்டன் குழம்பு’ எனப் பேசுவாரே தவிர, படத்தைப் பற்றி எதுவும் பேச மாட்டார். அதேபோல, இயக்குநர் சுந்தர்ராஜனும் என்னிடம் எதுவும் சொல்ல மாட்டார். இதனால், இந்தப் படம் எப்படி வருமோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது” என்று ரஜினி தனது தயக்கத்தைப் பற்றிப் பேசினார்.

இந்தக் கவலையை ரஜினிகாந்த் இளையராஜாவிடம் கூறியபோது, அவர் சிரித்துக்கொண்டே, “இந்தப் படம் சில்வர் ஜூப்ளி (25 வாரங்கள்) ஓடவில்லை என்றால், நான் ஆர்மோனியம் வாசிப்பதையே நிறுத்திவிடுகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் நடியுங்கள்” என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறினார்.

ரஜினிகாந்த், “அவர் அப்படிச் சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. இளையராஜா சொன்னால் அதைச் செய்துவிடுவார். அதனால், இந்தப் படம் கண்டிப்பாக வெள்ளி விழா கொண்டாட வேண்டும்; அப்படி இல்லையென்றால், நானே இரண்டு திரையரங்குகளில் பணம் கொடுத்து, வெள்ளி விழா ஓட வைத்துவிட வேண்டும் என்றுகூட நான் முடிவு செய்துவிட்டேன்” என்றார்.

Advertisment
Advertisements

ஆனால், ரஜினி பயந்ததற்கு மாறாக, ‘ராஜாதி ராஜா’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா கணித்தது போலவே, சில திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது. “இளையராஜா சரியாகக் கணிப்பார். அப்படி ஒரு திறமையும், ஞானமும் கொண்டவர் அவர்” என்று ரஜினி இளையராஜாவைப் புகழ்ந்து பேசினார்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: