சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் இல்லை; ஆரோக்கியமற்ற போட்டி... ‘இது ஒரு பந்தயம் அல்ல’ - நயன்தாரா ஓபன் டாக்

சினிமா துறையில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நடிகை நயன்தாரா மனம் திறந்து பேசினார்.

சினிமா துறையில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நடிகை நயன்தாரா மனம் திறந்து பேசினார்.

author-image
WebDesk
New Update
nayanthara

நடிகர்களிடையே போட்டி நிலவுவது சகஜம் என்றாலும், அது ஆரோக்கியமான பழக்கம் அல்ல என்று நயன்தாரா கருத்து தெரிவித்தார். (Credit: Facebook/@QueenNayantara)

அறிமுக இயக்குனர் சத்யன் அந்திக்காட்டின் ‘மனசினக்கரே’ (2003) திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து, நடிகை நயன்தாராவின் புகழ் வேகமாக உயர்ந்தது. மலையாளத்தில் மேலும் சில குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும், பல வாய்ப்புகள் அவரை வந்தடைந்தன, அவற்றில் பெரும்பாலானவை இறுதியில் பெரிய வெற்றியைப் பெற்றன. அவர் அறியும் முன்பே, நயன்தாரா தென்னிந்திய திரையுலகின் ஒரு முக்கியமான நட்சத்திரமாகவும், தனது திரைப்படங்களின் வசூலுக்கு பங்களிக்கும் திறன் கொண்ட ஒரு முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

அதன் பிறகு அவரது திரை வாழ்க்கையில் தொடர்ந்து வளர்ச்சியையே கண்ட நயன்தாரா, தற்போது நாட்டின் மிகப்பெரிய பெண் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இயக்குனர் அட்லீ குமாரின் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படத்திலும் அவர் ஒரு பகுதியாக இருந்தார், இது இரண்டாவது அதிக வசூல் செய்த இந்தி திரைப்படமாக மாறியது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான இத்தகைய வெற்றிகரமான சினிமா வாழ்க்கையைப் பெற்றிருந்தாலும், நயன்தாராவுக்கு திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை. மேலும், அவர் பெரும்பாலும் எளிமையான வாழ்க்கையை வாழவே விரும்புகிறார். உண்மையில், நீண்ட காலமாக அவருக்கு சமூக ஊடகங்களில் பொது கணக்குகள் கூட இல்லை.

ஒருமுறை, நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசுகையில், திரையுலகில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று வெளிப்படுத்தினார். கைரளி டிவிக்கு அளித்த பழைய பேட்டியில் அவர் கூறியதாவது: “நான் திரையுலகில் உள்ள எனது சக ஊழியர்களுடன் தொழில்முறை உறவுகளை மட்டுமே பேணுகிறேன். எனக்கு நன்கு தெரிந்தவர்களுக்காக தனிப்பட்ட தொடர்புகளை ஒதுக்குகிறேன். நட்புக்கு நான் அதிக மதிப்பளிக்கிறேன். வாழ்க்கையில், என்னை நன்கு அறிந்த மற்றும் நான் உண்மையாக நண்பர்கள் என்று அழைக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே எனக்கு இருக்கலாம். அவர்களுக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியும். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் உடனடியாக வருபவர்கள் அவர்கள். திரையுலகில் நெருங்கிய நட்பை உருவாக்குவதும் பராமரிப்பதும் கடினம், முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் நாம் ஒரே நபர்களுடன் பணியாற்றுவதில்லை என்பதால் என்று கூறினார். மேலும், படப்பிடிப்பு முடிந்ததும், நாம் பிரியாவிடை பெற்றால், எப்போதாவது நிகழ்ச்சிகள் அல்லது விருந்துகளில் மட்டுமே ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடலாம்.” என்று நயன்தாரா கூறினார்.

Advertisment
Advertisements

அந்த உரையாடலின்போது, நடிகர்களிடையே உள்ள போட்டி குறித்தும் அவர் பேசினார். “அது மலையாளம் மற்றும் பாலிவுட் உட்பட அனைத்து தொழில்களிலும் உள்ளது, ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் இருவரிடமும் போட்டி உள்ளது. இருப்பினும், அது ஆரோக்கியமானதல்ல. நாம் மற்றவர்களுடன் போட்டியிடுவதை விட, நம்முடன் நாமே போட்டியிட்டால் (ஒவ்வொரு நடிப்பிலும் மேம்படுத்த முயற்சிப்பது) நல்லது. இது மற்றவர்களுடன் போட்டியிடக்கூடிய பந்தயம் அல்ல. ஒருவருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களும் திரைக்கதைகளும் மற்றவருக்கு கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக, நாம் நம்முடன் தொடர்ந்து போட்டியிட்டால், ஒவ்வொரு படத்திலும் நமது நடிப்பில் குறைந்தது 1 சதவீத முன்னேற்றத்தையாவது நாம் காணலாம்” என்று சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் விளையாட்டு திரில்லர் திரைப்படமான ‘டெஸ்ட்’டில் நடித்த நயன்தாரா குறிப்பிட்டார். 

Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: