ஒரு வருஷத்தில் 37 படத்துக்கு இசை; தீபாவளிக்கு வந்தது 8 படம்: 97-ல் நடந்த சம்பவம், கண்டிப்பா இளையராஜா இல்ல!

தேவாவின் இசைப்பயணத்தில் மறக்கமுடியாத சில அனுபவங்கள் குறித்து இசையமைப்பாளர் தேவா மனம் திறந்து பேசியுள்ளார். அப்படி அவருடைய இசை வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

தேவாவின் இசைப்பயணத்தில் மறக்கமுடியாத சில அனுபவங்கள் குறித்து இசையமைப்பாளர் தேவா மனம் திறந்து பேசியுள்ளார். அப்படி அவருடைய இசை வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Deva 2

இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான தேவா, ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்.  இவர், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய இசையைக் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய இசைப் பயணத்தில், கானா பாடல்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. இவர் இசையமைத்த பல கானா பாடல்கள் சென்னைத் தமிழில் அமைந்திருக்கும், அவரே பல பாடல்களைப் பாடியும் இருக்கிறார். இப்படியாக அவருடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் பற்றி தேவா பிளாக்‌ஷீப் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். 

Advertisment

குறிப்பாக, 1997-ஆம் ஆண்டில் ஒரே ஆண்டில் 37 படங்களுக்கு இசையமைத்ததையும், தீபாவளிக்காக ஒரே நாளில் எட்டுப் படங்கள் வெளியானதையும் குறிப்பிட்டார். இதற்கு தேவா, இந்த பிரமாண்ட சாதனையின் பின்னால் தனது தம்பிகளின் அயராத உழைப்பும், ஆதரவும் இருந்ததாகக் கூறி நன்றி தெரிவித்தார். தனியாளாக இது சாத்தியமில்லை என்றும், இரவு பகல் பாராமல் தொடர்ந்து இசையமைத்துக்கொண்டே இருப்பதாகவும் அவர் அப்போது கூறினார்.

deva deva

அண்ணாமலை, பாட்ஷா போன்ற ரஜினிகாந்த் படங்களுக்கு இவர் இசையமைத்த பாடல்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும், ஆசை, காதல் கோட்டை போன்ற படங்களில் மெல்லிசை பாடல்களையும் கொடுத்து, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார். இவரின் பாடல்கள் 90-களில் பிறந்த தலைமுறையினரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிப்போனது. தேவா, கானா பாடல்களில் மட்டுமல்லாமல், மெலடி மற்றும் பக்திப் பாடல்களிலும் தனி முத்திரை பதித்து, இன்றும் தமிழ் சினிமா இசை உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை தக்கவைத்துள்ளார்.

Advertisment
Advertisements

தேவா, கானா பாடல்களைத் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றார். மெல்லிசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில், நகர்ப்புற சென்னை மக்களின் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட கானா பாடல்களுக்கு இவர் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாடல்களில் தாளமும், எளிமையான வரிகளும் கலந்திருக்கும். இவரே பல பாடல்களைப் பாடியும் இருக்கிறார். தேவா, இன்றும் தமிழ் சினிமாவில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வருகிறார். கானா இசையாக இருந்தாலும், மெல்லிசையாக இருந்தாலும், பக்திப் பாடலாக இருந்தாலும், தேவா ஒருபோதும் தனது தனித்துவமான பாணியிலிருந்து விலகியதில்லை.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: