Whose highest salary in Bigg Boss 3: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் வனிதாவுக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சைக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 -ம் அதற்கு விலக்கல்ல. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 -யில் தொடக்கத்தில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். போட்டியாளர்களின் சம்பலமும் முன் கூட்டியே நிறுவனத்தால் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கசிந்துள்ளது. இதில், பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது முறையாக சென்றிருக்கும் வனிதாவுக்குதான் அதிக சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற 15 போட்டியாளர்களில் இதுவரை சரவணன், ரேஷ்மா, மதுமிதா, உள்ளிட்ட போட்டியாளர்கள் ஆட்ட விதிகளின் படி வெளியேற்றப்பட்டுள்ளனர். வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களிலேயே அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.1.5 லட்சம் சம்பளம் வழங்குவதாக கூறப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் அவருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டு ஒரு நாளைக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அடுத்து இயக்குனர் சேரனுக்கு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணனுக்கு ஒரு நாளைக்கு ரூ.80 ஆயிரமும், மதுமிதாவுக்கு ரூ.80 ஆயிரமும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல, நடிகை ஷெரினுக்கு ரூ.80 ஆயிரமும், நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.1.25 லட்சம் சம்பளாமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதே போல, மற்ற போட்டியாளர்களான கவின், தர்ஷன், முகேன், லோஸ்லியா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது