/tamil-ie/media/media_files/uploads/2017/06/simbu_AAA-.png)
சிம்பு நடித்த அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் வெளியாவது திடீரென தள்ளி வைக்கப்பட்டது ஏன் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்புவை பற்றி தமிழ் திரையுலகுக்கே நன்றாக தெரியும். இருந்தும் கூட பொலிகாளைமேல் தான் சவாரி செய்வேன் என்று சிம்புவை வைத்து படம் எடுத்தவர்களுக்கு பாடமே மிஞ்சும். அந்த வரிசையில் இன்று இணைந்திருப்பவர் மைக்கேல் ராயப்பன்.
வரிசையாக தோல்விகளாகவே கொடுத்து சும்மா உட்கார்ந்த சிம்புவை வைத்து த்ரிஷா இல்லனா நயன் தாரா இயக்குநர் ஆதிக் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தொடங்கினார். இடையில் எப்போதும் போல் கால்ஷீட் சொதப்பிய சிம்புவுக்கு ’ஸ்பெஷலாக’ கவனித்து நடிக்க வைத்தார்கள்.
அந்த கோபத்தை உள்ளேயே வைத்திருந்த சிம்பு, படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டேன் என்று பிரச்னை செய்து வருகிறாராம். காலை சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மதியத்துக்குள் பிரச்னை முடிந்து படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று நம்பியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.