சியோமி நிறுவனம் சைபர் நாயை உருவாக்கு உள்ளது. சியோமி நிறுவனத்தால் ஒரு வருடம் முன்பே இது அறிமுகம் செய்யப்பட்டாலும், அதன் ஒரிஜினல் மாடலை தற்போது வெளியிட்டுள்ளது.
நாம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியான நாய்யைப்போல, ஒரு ரோபாட்டை சியோமி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது நாம் வளர்க்கும் நாயின் செய்லபாடுகளை அப்படியே பிரதிபலிக்கும். நாய்யை போலவே நடக்கும், குதிக்கும் ஏன் குட்டிகர்ணம்கூட அடிக்கும்.
இதில் 48 சென்சார் கோர்கள் இருக்கிறது. தீவிரமாக ஆராய்ந்து கற்றுகொள்ள 2 எஜ்ஜின்கள் உள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜ் திரன் உள்ளது. இதில் அதிவேகமாக செயல்பட, தொடர் உணர்தல், ஜிபிஎஸ், இப்படி பல வகை தொழில்நுட்பங்கள் இருக்கிறது.
இது தடைகளை தாண்டி நீங்கள் கொடுக்கும் கமெண்டுகளை பின்பற்றும். மேலும் இத்துடன் நீங்கள் உரையாடவும் முடியும். இதை வியாபார் ரீதியாகவும் பயன்படுத்தலாம். வீட்டு பயன்பாட்டை தவிர்த்து இது வியாபரத்திற்கும் பயன்படுகிறது.
இது ஒரு கவலையான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் இது விற்பனைக்கு இல்லை. ஆனால் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, கொல்கத்தாவில் உள்ள எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் இதை நீங்கள் பார்க்க முடியும்.