குழந்தையை கடத்த ப்ளான்: கல்யாணத்தை நிறுத்த சதி: வில்லத்தனத்தில் மிரட்டும் சீரியல்கள்!

ஜீ தமிழின் அண்ணா மற்றும் இதயம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் அண்ணா மற்றும் இதயம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna and Idhau

நிச்சயதார்த்தத்தில் நடக்க போகும் கலவரம் என்ன? சௌந்தரபாண்டி போட்ட திட்டம்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணியுடன் பெண்கள் கண்ணாமூச்சி ஆட வைகுண்டம் ரொமான்ஸ் செய்ய இதை வெட்டுக்கிளி பார்த்து விட்ட நிலையில் இன்று, வெட்டுக்கிளி தங்கைகளிடம் வந்திருப்பது உங்க அப்பாவோட செட்டப் என்று சொல்ல தங்கைகள் இருந்திட்டு போகட்டும் என்று பதில் கொடுக்க வெட்டுக்கிளி கடுப்பாகிறான்.

அதனை தொடர்ந்து பாக்கியம் நிச்சயதார்தத்துக்கு கிளம்ப சௌந்தரபாண்டி நானும் வரேன் என்று சொல்ல நீங்க எதுக்கு அதெல்லாம் வேண்டாம் நாங்களே போயிடு வரோம் என்று பதிலடி கொடுக்கிறாள். ஆட்டோவில் எல்லாம் வேண்டாம் நானே கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன் என்று கிளம்பி வருகிறார்.

மறுபக்கம் மாப்பிள்ளை வீட்டார் 8 மணிக்கே கோவிலுக்கு வந்து விட பெண் வீட்டார் ஒருத்தர் கூட இல்லாமல் இருக்க> தாய் மாமன் சந்தானம் இங்க ஒருத்தர் கூட வரவேற்க ஆள் இல்ல, மரியாதை இல்லாத வீட்டில் பொண்ணு எடுக்கணுமா? இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல வெங்கடேசன் கடுப்பாகி இந்த ஆள் இங்க இருக்க வேண்டாம் என்று சொல்ல அவர் கோபித்து கொண்டு கிளம்பி வருகிறார்.

Advertisment
Advertisements

எதிரே வந்த சௌந்தரபாண்டி சந்தானத்தை பார்க்க காரை நிறுத்தி விட்டு எங்கே போறீங்க என்று கேட்க வரவேற்க ஒரு ஆள் கூட இல்ல, அதனால் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி கோச்சிக்கிட்டு கிளம்பிட்டேன் என்று சொல்கிறான். பாக்கியம் ஐயோ அப்படியெல்லாம் இல்ல வாங்க பேசி தீர்த்துக்கலாம் என்று சொல்கிறாள்.

பிறகு சௌந்தரபாண்டி அவரை தனியாக அழைத்து சென்று பளாரென அறைய அவர் ஐயா எதுக்கு அடிச்சீங்க என்று கேட்கிறான். நீ கோச்சிட்டு போய்ட்டா நான் யாரை வச்சி கல்யாணத்த நிறுத்துறது என்று தனது திட்டத்தை ரகசியமாக சொல்லி இதே மாதிரி பண்ணு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆதியை அடக்கும் அறிவு.. ஸ்வேதா டீமுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதயம், சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பாரதி ஹாஸ்பிடலுக்கு வந்து இதயம் கொடுத்தவர் குறித்து விசாரிக்க நர்ஸ் போட்டோவை மாற்றி காட்டிய நிலையில் இன்று, தமிழ் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது துரை குழந்தையை கலாய்க்க பாரதி கோபப்பட ஆதி அவர்களை மேலே அனுப்பி விட்டு துரையை அடிக்க போக அறிவு தடுத்து நிறுத்தி உன்னுடைய குடுமி எங்க கையில் என்று ஆதியை அடக்குகிறான், இதனால் ஆதி எதுவும் செய்ய முடியாமல் மேலே வருகிறான்.

அதனை தொடர்ந்து பாரதி அவன் அவ்வளவு பேசுறான், நீங்க எதுக்கு அமைதியா இருக்கீங்க என்று கோபப்படுகிறாள். எதோ ஒரு உண்மையை மறைக்கறீங்க என்று சந்தேகப்பட ஆதி பாரதியை சமாதானம் செய்கிறான். ஸ்வேதாவும் அறிவும் அடுத்து என்ன செய்ய போற என்று கேட்க துரை நாளைக்கு குழந்தை இருக்காது என்று சொல்கிறான். அடுத்த நாள் காலையில் குடும்பத்தில் எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்க சாரதா தமிழ் எங்கே என்று கேட்க தூங்கி கொண்டிருப்பதாக பாரதி சொல்கிறாள்.

அறிவும் ஸ்வேதாவும் குழந்தை இருக்காது என்று நினைத்து சந்தோசப்பட சாரதா தமிழை அழைத்து வர சொல்ல பாரதி மேலே ரூமுக்கு வருகிறாள். பாரதி குழந்தையுடன் கீழே இறங்கி வர ஸ்வேதா அண்ட் கோ அதிர்ச்சி அடைகின்றனர். பிளான் என்னாச்சு என்று அறிந்து கொள்ள துரைக்கு போன் போட போன் ஸ்விட்ச் ஆப் என வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: