Advertisment

சதிவலையில் சிக்கிய ஹீரோ: அப்பா ட்ராமாவை மகள் கண்டுபிடிப்பாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற்று வரும் அண்ணா நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Anna manohari

அண்ணா - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சௌந்தரபாண்டியின் ட்ராமா.. காப்பாற்ற துடிக்கும் ஷண்முகம், பரணி எடுத்த முடிவு

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பக்கவாதம் வந்தது போல் நடிக்க தொடங்க சண்முகம் ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்ல முத்துபாண்டியும் பாண்டியம்மாவும் தடுத்து நிறுத்திய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி ஹாஸ்ப்பிடல் எல்லாம் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க முத்துபாண்டியும் பாண்டியம்மாவும் அவன் தான் வர மாட்டேன்னு சொல்றான்ல, இங்கயே வச்சி வைத்தியம் பாரு.. அதுக்கு தானே உன்னை டாக்டருக்கு படிக்க வச்சான் என்று எமோஷனல் பிளாக் மெயில் செய்கின்றனர்.

சண்முகம் அவரை பிடிக்காத நானே அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகணும்னு நினைக்கிறேன் நீங்க என்ன வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறான். பிறகு பரணி ஒரு டாக்டரா நான் கடமையை செய்திட்டு கிளம்பறேன் என்று சொல்லி சௌந்தரபாண்டியை செக்கப் செய்கிறாள். ஆனால் பக்கவாதம் ஏற்பட அவரது உடம்பில் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் பரணி இது எப்படி நடந்தது என்று கன்பியூஸ் ஆகிறாள்.

இதையடுத்து பரணி சௌந்தரபாண்டிக்கு ஊசி போட்டு விட்டு அப்பாவுக்கு இப்படி ஆகிருச்சே என்ற வருத்தததோடு கிளம்பி வருகிறாள். இதே வருத்தத்தில் சாப்பிடாமல் தூங்கி விட எல்லாரும் சாப்பிடாமலேயே இருக்கின்றனர், பரணி நைட் திடீரென எழுந்து கொள்ள சண்முகம் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். அடுத்து பரணி யாரும் சாப்பிடவில்லை என்பதை அறிந்து எல்லோரையும் எழுப்பி சாப்பிட வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மனோகரியுடன் கைதான எழில்.. கல்யாண விஷயத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் மனோகரியை பார்க்க ஹோட்டலுக்கு வந்திருக்க போலீசும் ஹோட்டலுக்குள் நுழைந்த நிலையில் இன்று, மனோகரி எழிலை கட்டி பிடித்தபடி கண் கலங்கி கொண்டிருக்க எழில் ஆறுதல் சொல்லி கொண்டிருக்க ரூமுக்குள் நுழைந்த போலீஸ் இவர்களை தவறான கேஸில் கைது செய்து அழைத்து செல்கின்றனர். மீடியாக்களும் மொத்தமாக அங்கு கூடி விட இவர்கள் குறித்த செய்தி தீயாக பரவுகிறது.

பிறகு போலீஸ் ஸ்டேஷன் சென்ற இவர்கள் பேசி புரிய வைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வருகின்றனர், அப்போது கனகவல்லி என்னாச்சு என்று கேட்க மனோகரி எல்லாம் என்னால் தான், என்னை மன்னிச்சிருங்க எழில் என்று கண்ணீர் விட்டு நாடகம் போடுகிறாள். இனிமே நான் இங்க இருக்க மாட்டேன் என்று டிராமா போட்டு மேலே கிளம்ப எழில் மனோகரி நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று வாக்கு கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதனை தொடர்ந்து கனகவல்லி எழில் நீ என்னப்ப சொல்ற என்று கேள்வி கேட்க ஆமாம் மா, நான் யோசித்து தான் சொல்றேன் என்று பதில் சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment