Advertisment
Presenting Partner
Desktop GIF

சோகத்தில் முடித்த திருமணம்: மகிழ்ச்சி வர வழி இருக்கா? அண்ணா, நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழின் அண்ணா மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், தடைகளை மீறி நிகழ்ந்த திருமணங்கள் சோகத்தில் முடிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Zee tamil serial ausd

ரத்னா மீது கோபமாகும் வெங்கடேஷ்.. சண்முகம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியை சந்தித்த வெங்கடேஷ் குடும்பத்தினர் ரிசப்ஷன் நடத்துவது பேசி நீங்க தான் சம்மதிக்க வைக்கணும் என்று சொல்லிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி அவங்க நான் சொன்னா எல்லாம் கேட்க மாட்டாங்க, அவனை சொல்ல சொல்லுங்க என்று சொல்கிறான். பிறகு முத்துபாண்டியிடம் பேச அவன் ஷண்முகத்திடம் பேசுவதாக சொல்கிறான்.

அடுத்து சண்முகத்தை சந்திக்கும் வெங்கடேஷ் அப்பா அம்மா ரத்னா எப்படி இருக்கா என்று பேச தொடங்க இவர்கள் வெங்கடேஷ் குறித்து பேசுகின்றனர், மேலும் ரத்னாவை நேரில் வந்து பார்க்க சொல்கின்றனர். அடுத்து வீட்டிற்கு வந்த இவர்கள் ரத்னாவிடம் பேசி விட்டு ரிசப்ஷன் குறித்து பேச ரத்னா அம்மாவிற்கு விளக்கு போடணும் என்பதால் வர மாட்டேன் என்று மறுத்து அழ சண்முகம் அவ வருவா நாங்க கூட்டிட்டு வருகிறோம் என்று வாக்கு கொடுக்கிறான்.

நமக்காக கல்யாண விஷயத்தில் நிறைய விட்டு கொடுத்து போய் இருக்கா என்று ரத்னாவிற்கு எடுத்து சொல்கிறான். இங்கே வெங்கடேஷ் வீட்டில் இருக்க அவனது உறவினர்கள் ரத்னாவை பற்றி தப்பாக பேசி ஏற்றி விட வெங்கடேஷ் ரத்னா மீது கோபமடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீட்டை விட்டு கிளம்ப தயாரான சுடர்.. கொளுத்தி போட்ட மனோகரி - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடரை அஞ்சலி கைபிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றதை தொடர்ந்து இன்று, அஞ்சலி சுடரை உள்ளே அழைத்துச் சென்ற பிறகு இந்த கல்யாணம் நடந்ததில் யாருக்கு சந்தோஷமும் இல்லையோ எனக்கு சந்தோஷம் என்று சொல்லி கட்டிப்பிடித்துக் கொள்ள சுடரும் சந்தோஷப்படுகிறாள்.

அதைத்தொடர்ந்து சுடர் மற்ற மூன்று குழந்தைகளிடம் அன்பாக பேச பார்க்க அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்ள சுடர் வருத்தமடைகிறாள். பிறகு குழந்தைகளில் எல்லோரும் சாப்பிட உட்கார சுடர் சமையல் எனத் தெரிந்ததும் அபி, கவின், காவியா சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகின்றனர். இதனால் சுடர் குழந்தைகள் நான் சமைத்ததை கூட சாப்பிட மாட்டாங்க என வருத்தப்பட இந்து எல்லாம் போக போக சரியாகும் என்று ஆறுதல் சொல்கிறாள்.

சுடர் மன வருத்தம் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறாள். யாருக்கும் தெரியாமல் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது மனோகரி பார்த்து விடுகிறாள். பாத்தீங்களா எழிலையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ எல்லாரையும் ஏமாத்திட்டு இந்த வீட்டை விட்டு போக பார்க்கிறாள் என்று ஏற்றி விட சுடர் எனக்கு இந்த கல்யாணம் எப்படி நடந்துச்சு சத்தியமா தெரியல. நான் இங்கே இருக்கிறது சரியா தப்பா என்று கூட தெரியல என்று கண் கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment