Advertisment

3 பெண்களை கடத்தும் சீதா... மாமன் மகளை கடத்தும் முத்துபாண்டி : கடத்தல் மயமான ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Anna and Seetha ranam

ஜீ தமிழின் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியல்

ரத்னாவை கடத்த முத்துப்பாண்டி திட்டம்

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் முத்துப்பாண்டியுடன் சண்முகம் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்து விட்டு பரணியை கூட்டிக் கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோட்டில்,நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலன் என மூவரும் டைலர் கடைக்கு வந்து கல்யாணத்திற்காக ஜாக்கெட் தைக்க சொல்லி கொடுக்கின்றனர். அடுத்ததாக சண்முகம் கனியை கூட்டிக்கொண்டு இதே டைலர் கடைக்கு வருகிறான். பரணி, பாக்கியம், சிவபாலன் கிளம்பிச் சென்று விட கனி இசக்கி உடன் போன் பேச செல்ல சண்முகம் கடையை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருக்க அப்போது செல்வமும் அவனது அம்மாவும் இதே டைலர் கடைக்கு வருகின்றனர்.

ஜாக்கெட்டை கொடுத்து அளவு எதுவும் இல்லாமல் ஒல்லியா இருப்பா அதுக்கு ஏத்த மாதிரி தைக்கணும் என்று சொல்ல டைலர் அளவு எதுவும் இல்லாம எப்படி தைக்கிறது என கேள்வி கேட்கிறார். அங்கே பரணியின் புடவை இருப்பதை பார்த்து இது யார் கொடுத்தது என கேட்க சௌந்தரபாண்டி ஐயாவோட பொண்ணு பரணி கொடுத்தாங்க என்று சொல்ல அதே அளவுல அப்படியே இந்த ஜாக்கெட்டையும் தைத்து கொடு என்று கொடுத்து விட்டு செல்கின்றனர்.

இதை தொலைவில் இருந்து பார்த்த சண்முகத்திற்கு சந்தேகம் வருகிறது. அடுத்து சண்முகம் கனியும் காய்கறி வாங்க வண்டியில் சென்று கொண்டிருக்க இதே யோசனையில் வண்டி ஓட்டும் சண்முகம் கடையை தாண்டி செல்ல கனி கடை வந்துடுச்சு என்று சொல்லி சண்முகத்தை நிறுத்துகிறாள். மறுபக்கம் முத்துப்பாண்டி இரண்டு ரவுடிகளை போலீஸ் கெட்டப்புக்கு மாற்றி ரத்னாவின் புகைப்படத்தை காட்டி இவளுக்கும் எனக்கும் தான் கல்யாணம், நான் சொல்லும்போது இவளை தூக்கிடனும் என்று சொல்கிறான்.

மேலும் இவர்களை ஏற்கனவே சண்முகம் வீட்டு வாசலில் காவலுக்கு இருந்த காவலர்களுக்கு பதிலாக மாற்றி விடுகிறான். சண்முகமும் கனியும் வீட்டுக்கு வர இவர்கள் புதிதாக இருப்பதை பார்த்து விசாரிக்க முத்துப்பாண்டி ஐயா காவலுக்கு இருக்க சொன்னதாக சொல்ல சண்முகத்துக்கு சந்தேகம் அதிகமாகிறது. அதைத் தொடர்ந்து பரணியின் கல்யாண வேலைகள் அனைத்தும் ஜோராக நடக்க எல்லோரும் மண்டபத்திற்கு வந்து இறங்க பரணி ஏற்பாடுகளை பார்த்து வியக்க பாத்திரக்கடைக்கார மகன் செல்வம் தூரத்திலிருந்து பரணியை பார்த்தபடி இருக்கிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகாவுக்கு செக் வைத்த சீதா.. மீரா கல்யாணத்தில் திடீர் திருப்பம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான  சீரியல் சீதா ராமன், இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ராம் சத்யன் வீட்டிற்கு வந்த நிலையில் மறுபக்கம் சீதா கூலாக இருக்க மகாவுக்கு சந்தேகம் வந்தது. இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் சீதா ராமுக்கு போன் செய்து நீங்க சத்யனோட ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்துடுங்க, நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இருப்பேன் என்று சொல்ல இதையெல்லாம் ஒட்டு கேட்ட மகாவும் அர்ச்சனாவும் ஏதோ பிளான் பண்ணி இருக்கா, என்னனு தான் தெரியல என்று யோசிக்கின்றனர்.

ஏற்னவே சீதா காலேஜ்க்கு கிளம்பிய பெண்களை கடத்த சொல்ல துரை அதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் சேது மூன்று பெண்களுடன் காரில் வந்து கொண்டிருக்கும் வழி மறித்து பிரச்சனை செய்து கத்தி முனையில் மூன்று பெண்களையும் கடத்தி விடுகின்றனர்.  பிறகு மகாவுக்கு சீதா வேறொரு போனில் இருந்து போன் செய்து மிரட்டல் விடுக்க மகா அதிர்ச்சி அடைகிறாள், கொஞ்ச நேரத்தில் சேதுவும் வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல மகா யாராக இருக்கும் என தெரியாமல் முழிக்கிறாள்.

மறுபக்கம் ராம் சத்யனை அழைத்து கொண்டு ரெஜிஸ்டர் ஆபிஸ் வர விஷால் இவர்களை அடித்து தூக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.  மாலை வாங்குவதற்கான சத்தியன் ஒரு கடையின் அருகே இறங்க விஷாலின் கார் வேகமாக மோத வர கண் இமைக்கும் நொடியில் காப்பாற்றுகிறான் ராம், இங்கே வீட்டிற்கு வரும் சீதா உங்க மூன்று பெண்களையும் கடத்தியது நான் தான், மீராவோட நீங்க ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும் இல்லனா உங்க பொண்ணுங்க ரோட்ல செத்து கிடப்பாங்க என்று ஷாக் கொடுக்க மகா வேறு வழியில்லாமல் ஒப்பு கொள்கிறாள். இதனால் அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்து.

கடத்தல் மயமான சீரியல்

இதில் அண்ணா சீரியலில் தங்கையின் திருமணத்தின்போது தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக பெண்ணை கடத்த காவல்துறை அதிகாரியான முத்துப்பாண்டி திட்டமிடுகிறான். அதேபோல் ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பிய நபருடன் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக சீதா 3 பெண்களை கடத்தி விடுகிறாள். மொத்தத்தில் 2 கடத்தலுமே திருமணத்திற்காக தான்.

“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment