Advertisment
Presenting Partner
Desktop GIF

அம்மாவை காப்பாற்றிய மகன்: மருமகனால் சிக்கிய மாமனார்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் மாரி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
anna karthigai deepam Serial

ஆதாரத்துடன் ஆப்பு வைத்த கார்த்திக்.. அபிராமி விடுதலையானது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம்.சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கோர்ட்டில் ஆஜர் படுத்திய நிலையில் இன்று, அபிராமியை கோர்ட்டில் ஆஜர்படுத்த ராஜேஸ்வரி ரூ 100 கோடி வரதட்சணை கேட்டதாக சொல்ல அபிராமி இதெல்லாம் பொய் என்று சொல்கிறாள். கோர்ட்டில் அதற்கான ஆதாரம் என்ன இருக்கு என்று கேட்க கார்த்திக் ஆதாரம் இருப்பதாக ஷாக் கொடுக்கிறான்.

அதாவது ராஜேஸ்வரி வக்கீலிடம் பேசிய விஷயங்களை அருண் தூரத்தில் இருந்து வீடியோ எடுத்திருக்க கார்த்திக் அதை கோர்ட்டில் சமர்ப்பிக்க அதில் ராஜேஸ்வரி அபிராமி மேல் கொடுத்திருப்பது போலி கேஸ் என்பது தெரிய வருகிறது.  இதனால் கோர்ட்டை அவமானப்படுத்தியதால் ராஜேஸ்வரிக்கு 10 நாள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபிராமியை விடுதலை செய்யப்படுகிறார்.

இதை கொண்டாடும் வகையில் தீபா இருக்கும் ஆசிரமத்தில் மீனாட்சி மற்றும் மைதிலி ஆகியோர் சாப்பாடு கொடுக்க அப்போது இன்னொருத்தருக்கும் கொடுங்க, உடம்பு முடியாமல் ரூமில் இருப்பதாக சொல்ல மீனாட்சி நானே கொண்டு வந்து தரேன் என்று தீபா இருக்கும் ரூமை நோக்கி செல்ல மைதிலி இங்க இவங்களுக்கு கொடு என்று மீனாட்சியை கூப்பிட தீபாவை பார்க்க முடியாமல் போய் விடுகிறது.

அதன் பிறகு ராஜேஸ்வரியை ஐஸ்வர்யா இருக்கும் சிறையில் அடைக்க அம்மாவை பார்த்து ஐஸ்வர்யா அதிர்ச்சியாக ராஜேஸ்வரி நடந்ததை சொல்ல ஐஸ்வர்யா கடுப்பாகிறாள். அடுத்து கார்த்திக் வீட்டில் கீதா கண்ணில் தீபா எழுதிய டைரி கிடைக்க அதில் தீபா கார்த்திக் மீதான காதல் மற்றும் மீனாட்சியின் சப்போர்ட் குறித்து எழுதி இருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சௌந்திரபாண்டிக்கு நெற்றியில் துப்பாக்கி.. சண்முகம் தப்பியது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் ஷண்முகம் வீட்டிற்கு வந்து கோவில் நகையை திருடி விட்டதாக தகவல் வந்திருப்பதாக ஷாக் கொடுத்த நிலையில் இன்று, சண்முகம் வீட்டிற்குள் சென்று சூடாமணி முன்பு இருக்கும் நகைகளை எடுத்து காட்ட அங்கு ரத்னாவிற்காக வாங்கிய நகைகள் மட்டுமே இருக்கிறது. மேலும் அதற்கான பில்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது. 
இருந்தாலும் போலீஸ் கோவிலிலும் சோதனையிட வேண்டும் என்று சொல்லி ஷண்முகம் பரணியை கைது செய்து கோவிலுக்கு அழைத்து வர கோவிலில் எல்லா நகைகளும் சரியாக இருக்கிறது.

பிளாஷ்கட்டில் சண்முகம் எல்லா நகைகளையும் சாமி போட்டோ முன்பு வைத்து சாமி குடும்பிட்ட போது முருகன் கழுத்தில் இருந்த மாலை கீழே விழ அதில் சௌந்தரபாண்டி வைத்த நகைகள் மாட்டி கொண்டதும் அது மீண்டும் அந்த மாலையுடன் முருகன் கழுத்துக்கு சென்றதும் தெரிய வருகிறது. இதனால் போலீஸ் தவறான தகவல் வந்திருப்பாக சொல்லி அங்கிருந்து கிளம்ப பரணி நீங்க தானே எங்களை கைது பண்ணி கூட்டி வந்தீங்க. இப்போ நீங்க தான் எங்களை கூட்டிட்டு போய் வீட்டில் விடணும் என்று சொல்கிறாள், போலீஸ் வேறு வழியின்றி அவர்களை வீட்டில் விடுகின்றனர்.

மேலும் பரணி தவறான தகவலால் கைது செய்தததால் பொய்யான புகார் அளித்தது யார் என்று சொல்லுங்க இல்லனா மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல போலீஸ் சௌந்தரபாண்டி பெயரை சொல்லாமல் மன்னிப்பு கேட்டு கிளம்பி செல்கின்றனர்.  அடுத்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்த போலீஸ் நெற்றியில் துப்பாக்கியை வைத்து இன்னொரு முறை பொய்யான தகவல் கொடுத்தீங்க அவ்வளவு தான் என்று மிரட்டி விட்டு செல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாரியை காலில் விழ வைத்த தாரா.. காரணம் என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

மாரி சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா வீட்டை விட்டு வெளியே செல்வதாக பிரச்னையை துவங்கிய நிலையில் இன்று, தாரா ஒன்னு ஸ்ரீஜா இந்த வீட்டில் இருக்கனும் இல்ல நான் இருக்கணும் என்று பிரச்சனை செய்ய ஸ்ரீஜா நானே இந்த வீட்டை விட்டு போறேன் என்று சொல்கிறாள். ஆனால் மாரி ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதால் இப்போது வீட்டை விட்டு வெளியே போனால் சரியாக இருக்காது என்று நினைக்கிறாள்.

இதன் காரணமாக தாராவை சமாதானம் செய்து மனதை மாற்ற முயற்சி செய்ய தாரா ஸ்ரீஜாவும் இந்த வீட்டில் இருக்கனும், நானும் இந்த வீட்டில் இருக்கனும்னா ஒரே வழி தான் இருக்கு. எல்லார் முன்னாடியும் மாரி என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்று கண்டிஷன் போடுகிறாள். இதனால் வேறு வழியின்றி மாரி தாராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தாரா தனது முடிவை மாற்றி கொள்கிறாள்.

அதை தொடர்ந்து சங்கரபாண்டி ஏன் சிஸ்டர் அந்த ஸ்ரீஜா பொண்ணு தான் போறேன்னு சொல்லுச்சே போகட்டும்னு விட வேண்டியது தானே என்று கேள்வி கேட்கிறான். தாரா அந்த பொங்கலில் விஷயத்தை கலந்தது நீ.. நான் சொல்லி தான் நீ அப்படி செய்த, அதுல விஷம் இருக்குனு தெரிந்து தான் நானும் சாப்பிட்டேன் என்று தனது திட்டத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment