Advertisment
Presenting Partner
Desktop GIF

தங்கைக்காக அ்ண்ணன் எடுத்த முடிவு: கச்சேரிக்கு தீபா வருவாளா? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழின் அண்ண, நினைத்தேன் வந்தாய் மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
KD anna and s

தீபாவை நெருங்கும் ரூபஸ்ரீ.. இழப்பின் துயரத்தில் கார்த்திக், நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை வேனில் வைத்து கச்சேரி நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்ல ஆசிரமத்தில் இருப்பவர்கள் முடிவெடுத்த நிலையில் இன்று, ஆசிரமத்தில் இருப்பவர்கள் தீபாவை வேனில் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்ய இன்னொரு பக்கம் துங்கா தீபா எப்படியும் கச்சேரிக்கு வருவா, அவளை எப்படியாவது கடத்தி இந்த கச்சேரியில் பாட விடாமல் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறான்.

மறுபக்கம் கார்த்திக் வீட்டில் தர்மலிங்கம் இறந்த சோகத்தில் இருக்க அவனுக்கு ஆறுதல் சொல்லும் அபிராமி இந்த கச்சேரி நல்லபடியாக நடக்கணும் தீபா கச்சேரிக்கு வரணும் என்று கடவுளிடம் வேண்டுகிறாள். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா எப்படியாவது போலீசிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறாள். அதே நேரத்தில் ரூபஸ்ரீ ஐஸ்வர்யாவுடன் கூட்டு சேர்ந்து போட்ட திட்டத்தின் படி ஆசிரமத்திற்கு வந்து எனக்கு கார்த்திக் சாரை தெரியும் என்று சொல்லி தீபாவை சந்திக்க முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இசக்கி விஷயத்தில் சண்முகம் எடுத்த முடிவு.. முரண்பட்டு நிற்கும் பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வீட்டில் நடந்த விஷயத்தை சண்முகத்திடம் உடைத்த நிலையில் இன்று, சண்முகம் கோபப்பட்டு அருவாளை எடுத்து கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்புகிறான். அப்போது அவனை தடுத்து நிறுத்தும் பரணி உன் அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்துட்டியா என்று சொல்லி அரிவாளை கீழே போட வைக்கிறாள்.

நாம ரெண்டும் பேரும் போய் பிரச்னையை பேசி தீர்க்கலாம் என்று சொல்லி ஷண்முகத்துடன் கிளம்பி வருகிறாள். ஷண்முகம் உனக்கு பாதுகாப்பு இல்லாத வீட்டில் நீ இருக்க வேண்டாம் என்று சொல்லி இசக்கியை வீட்டிற்கு கூப்பிட பரணி நீ எதுக்கு வீட்டை விட்டு வெளியே வரணும்? இது உன்னுடைய வீடு, நீ இங்க தான் இருக்கணும் என்று சொல்கிறாள். உன் புருஷன் முத்துப்பாண்டி வந்துடுவான் என்று சொல்கிறாள்.

பிறகு ஷண்முகம் மற்றும் வைகுண்டத்தை வீட்டிற்கு அழைத்து வந்த பரணி அப்பேற்பட்ட முத்துபாண்டியையே மாற்றினவ இசக்கி, மத்தவங்களை அவ மாத்துவா.. அவ வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்கிறாள். ஆனாலும் ஷண்முகம் மற்றும் வைகுண்டம் என இருவரும் இசக்கி அந்த வீட்டில் இருப்பதில் உடன்பாடு இல்லாமல் பரணி முடிவுக்கு சம்மதம் சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழிலிடம் சிக்கிய சுடர்.. அடுத்தடுத்து நடந்த மோதல், இந்து செய்ய போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் டெலிவரி பாய் கொரியர் ஒன்றை கொண்டு வந்து கொடுத்த நிலையில் இன்று, மனோகரி அந்த கொரியாரை எழிலிடம் கொடுக்க சொல்லி செல்வியை அனுப்ப அதை பார்த்த ராமையா என்ன அது என்று கேட்டு நானே எழில் சார் கிட்ட கொடுத்துடுறேன் என்று வாங்கி கொள்கிறார்.

ராமையா உள்ளே வர கனகவல்லி நான் சொன்ன வேலையை முடிச்சாச்சா என்று கேட்டு அந்த பைலை வாங்கி கொண்டு அனுப்பி விடுகிறாள். பைலை பிரித்து பார்க்க அதில் சுடர் கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்ய பார்ம் பில் பண்ணி இருப்பது தெரிய வருகிறது. கனகவல்லி இந்த யோசனை நமக்கு தோணாமால் போய்டுச்சே என்று வருத்தப்படுகிறாள்.

பிறகு சுடர் கீழே வர கனகவல்லி இதை நீயே எழிலிடம் கொடுத்து விடு என்று கொடுத்து அனுப்புகிறாள். அப்போது அஞ்சலி குறுக்கே வந்து என்ன அது என்று கேட்க உங்க அப்பாவுக்கு வந்தது தான் கொடுத்துடு என்று சொல்லி கொடுக்கிறாள். அஞ்சலி அதை வாங்கி வந்து எழிலிடம் கொடுக்க அதை பிரித்து பார்த்த எழில் பயங்கர டென்ஷன் ஆகிறான். சுடர் உள்ளே வந்ததும் அதை கிழித்து போட்டு திட்டுகிறான்.

அடுத்து இன்னொரு கொரியர் பாய் வீட்டிற்கு வர இதை பார்த்த எழில் அவனை கூப்பிட்டு அந்த கொரியரை வாங்கி பிரிக்கிறான். அதில் தாலி பிரித்து போடும் போது எழில் மற்றும் சுடர் இருவரும் கையை ஒன்றாக வைத்து மோல்ட் செய்த நிலையில் அது கிப்டாக வந்து இருப்பது தெரிய வந்து கோபத்தில் அதை தூக்கி போட்டு உடைக்கிறான். இதையெல்லாம் பார்த்த இந்து சுடர் நல்லவள் அவ மேலே கோபப்படாதீங்க என்று சொல்ல முயற்சி செய்கிறாள்.

பிறகு தீபாவிடம் வந்து விஷயத்தை சொல்ல நீங்க பேசுறது எனக்கு கேட்குற மாதிரி எழிலுக்கும் கேட்க வைக்குற ஷக்தி என்கிட்ட இருக்கு அதன் மூலமாக நீங்களே எழிலுக்கு எடுத்து சொல்லி அவங்களை சேர்த்து வையுங்க என்று ஐடியா கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment