Advertisment

தம்பிக்கு எதிராக அண்ணன் சதி... தங்கைக்காக ஸ்கூல் வாங்கும் அண்ணன் : ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்,பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna KD NV

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

கார்த்திக்கை வேலையில் இருந்து தூக்க பிளான் போட்ட ஆனந்த்... தொழிலாளர்களால் தவிடு பொடியாகும் திட்டம்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கம்பெனியில் தொழிலாளி ஒருவருக்கு அடி பட கார்த்திக் அவருக்கு உதவி செய்த நிலையில் இன்று, கார்த்திக் அடிபட்ட தொழிலாளருக்கு உதவி செய்ததை வைத்து அவன் வேலையே செய்ய மாட்டுறான் என்று சொல்லி வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்ப பிளான் போடுகின்றனர் அருண் மற்றும் ஆனந்த்.

பிறகு இந்த விஷயத்தை தொழிலாளர்களிடம் சொல்ல அதற்கு அனைவரும் மறுப்பு தெரிகின்றனர். கார்த்திக் தம்பி எங்களுக்கு நல்லது தான் பண்ணாரு, அடி பட்டவருக்கு உதவியது தப்பா என்று கேட்கின்றனர், ஆனாலும் கார்த்தியை வேலையில் இருப்பது தூக்குவது உறுதி என்று சொல்கின்றனர்.  இதனால் தொழிலாளர்கள் கார்த்திக் தம்பியை வேலையில் இருந்து எடுத்தால் எங்களையும் வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்புங்க என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

பிரச்சனை வேற மாதிரி சென்று விட்டதால் அருண் ஆனந்த் எதுவும் செய்ய முடியாமல் தங்களது முடிவை கை விடுகின்றனர். அடுத்து கார்த்திக் டயார்டாக வீட்டிற்கு வர தீபா வேலை எப்படி போச்சு என்று கேட்டு கை, கால் பிடித்து விடவா? தலையை பிடித்து விடவா என்று கேட்க கார்த்திக் வேண்டாம் என்று மறுக்கிறான், இதனால் வேலை செய்து களைப்பில் வந்த புருஷனுக்கு எதுவும் செய்ய முடியலையே என்று தீபா வருத்தமாக வெளியே கிளம்ப கார்த்திக் கையை பிடித்து இழுத்து காதல் பார்வையுடன் பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீட்டை அடகு வைக்க வந்த பரணி.. ஷண்முகம் உடையும் அடுத்த ரகசியம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் என் தங்கச்சியை ஸ்கூல் ப்ரின்சிபலா மாற்றி காட்டுறேன் என்று சவால் விட்ட நிலையில் இன்று, ண்முகம் விட்ட சவாலை கேட்டு சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைய பரணி நான் என் புருஷனோட சேர்ந்து வாழனும்னு ஆசையா இருந்தேன், பஞ்சாயத்தை கூட்டி அதை நீங்க நடத்தி வச்சிடீங்க ரொம்ப நன்றி என்று சொல்லி தனது பங்குக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனை தொடர்ந்து வீட்டிற்கு வரும் சண்முகம் வைகுண்டத்திடம் ஸ்கூலை எடுத்து நடத்த போகும் விஷயத்தை சொல்கிறான்.

சண்முகத்தின் பேச்சை கேட்ட வைகுண்டம், அது எப்படி டா  முடியும். 1 கோடி ரூபாய்க்கு மேல சொல்லுவாங்களே என்று சொல்ல, அது எத்தனை கோடியா இருந்தாலும் சரி என் தங்கச்சிக்காக நான் செய்ய தான் போறேன் என்று சொல்கிறான். அதன் பிறகு சண்முகமும் பரணியும் ஸ்கூல் ஓனரை சந்தித்து பேச அவர் நான் கொடுக்க ரெடியாக தான் இருக்கேன், அந்த இடமே 1 கோடி போகும், நீங்க முதல்ல 50 லட்சம் கொடுங்க அதை நான் உங்களுக்கு எழுதி வச்சிடுறேன் என்று சொல்கிறார்.

மேலும் அதிக பீஸ் வாங்காமல் ஸ்கூலை நடத்தணும் என்று சொல்கிறார். வீட்டிற்கு வந்த பரணி வீட்டை அடகு வைத்து பணத்தை வாங்க கிளம்பி செல்ல வைகுண்டம் அந்த விஷயத்தை சண்முகத்துக்கு தெரிய படுத்த அவன் ஏற்கனவே பரணிக்காக வீட்டை அடகு வைத்த விஷயம் அவளுக்கு தெரிய கூடாது என பதறி ஓடி வருகிறான். ஆனால் பரணி பாத்திரத்தை அடகு வைத்துள்ளவரையே சந்தித்து பணத்தை கேட்க அவர் சண்முகம் ஏற்கனவே உனக்கான இந்த வீட்டை அடகு வைத்து இருக்கான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரை துரத்தி விட்ட மனோகரி.. அடம் பிடிக்கும் அஞ்சலி, அடுத்து என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமையா சொன்னதை கேட்ட போலீஸ் தமிழை விசாரிக்க அவள் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்லி புரிய வைத்த நிலையில் இன்று, போலீஸ் அவளை புரிந்து கொண்டு ரிலீஸ் செய்ய மீண்டும் எழில் வீட்டிற்கு வருகிறாள், நான் எந்த தப்பும் பண்ணல என்று புரிய வைக்க முயற்சி செய்ய மனோகரி சுடர் மீண்டும் இந்த வீட்டிற்குள் வர கூடாது என திட்டம் போட்டு நீ என்ன சொன்னாலும் இனிமே நாங்க நம்ப போறது இல்ல என்று திட்டி அவளை பேக்கை தூக்கி போட்டு துரத்தி விடுகிறாள். 

இதனை தொடர்ந்து சுடர் ஒரு கோவிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அங்கு வரும் வேலு தன்னுடன் அழைக்க சுடர் அவனிடம் இருந்து தப்பித்து இட்லி கடை பாட்டியின் கடையில் ஒளிந்து கொள்ள பாட்டியும் இங்கு யாரும் வரல என்று வேலுவை சமாளித்து அனுப்பி வைக்கிறார். அடுத்து சுடர் நடந்த விஷயங்கள் அனைத்தையும் பாட்டியிடம் சொல்லி கண் கலங்குகிறாள். மறுபக்கம் எழில் வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான்.

அப்போது அஞ்சலி மட்டும் சாப்பிடாமல் ரூமுக்குள் இருக்க மனோகரி அவளை தூக்கி வந்து சாப்பிட சொல்லி போர்ஸ் செய்கிறாள். அஞ்சலி தமிழ் வந்தா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறாள். அடுத்து மனோகரி எழிலிடம் அந்த தமிழ் குழந்தைகளை எப்படி மாத்தி வச்சிருக்கா பாரு என்று கம்பளைண்ட் செய்ய எழில் ஒழுங்கா சாப்பிடு என்று அஞ்சலியை மிரட்டுகிறான். அஞ்சலி தமிழ் வராமல் சாப்பிட மாட்டேன் என்று உறுதியாக சொல்கிறாள்.

இதை கேட்ட எழில் அவ வீட்டை விட்டு போய்ட்டா, இனிமே வர மாட்டா என்று சொல்ல, நீங்க தானே அனுப்பனீங்க நீங்களே கூட்டிட்டு வாங்க என்று அடம் பிடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment