Advertisment
Presenting Partner
Desktop GIF

திரும்பி வந்த தீபா: மாப்பிள்ளையை கடத்திய மாறன்; மிரட்டலை சமாளிப்பாரா அண்ணா?

ஜீ தமிழின் வீரா அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Veeera and Kd Anna

கார்த்திக்கின் தந்திரத்தால் உடைந்த உண்மை.. மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் மற்றும் துங்கா என இருவரும் மாறி மாறி சவால் விட்டுக் கொண்ட நிலையில் இன்று, கார்த்திக் ஐஸ்வர்யா மீது ஏதோ சந்தேகமாகவே இருக்கிறது என்பதால் அவளை மடக்கி பிடித்து உண்மையை வர வைக்க முடிவெடுக்கிறான். கீதா தீபாவாக நடிப்பதாக சொல்ல கார்த்திக் மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர்.

அதாவது கீதா மீனாட்சி ரூமில் படுத்துக் கொள்வது போல எல்லோரையும் நம்ப வைத்து விட்டு பின்பக்க வழியாக வெளியே வர வைக்கின்றான். அதன் பிறகு தீபா போல் வேஷம் அணிந்து கொள்கிறாள். அடுத்து கார்த்திக் அபிராமிக்கு போன் செய்து தீபா கிடைத்து விட்டதாக சொல்ல குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷம் அடைந்து வீட்டுக்கு வந்தா அவளை ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கின்றனர்.

அதன் பிறகு தீபா ஐஸ்வர்யா அக்கா கிட்ட தனியா பேசணும் என்று சொல்லி அவளை ரூமுக்குள்ள அழைத்து செல்கிறாள். இங்கே கார்த்திக் அபிராமியிடம் வந்திருப்பது தீபா இல்ல கீதா தான்.. ஐஸ்வர்யா அண்ணி எதையோ மறைக்கிறாங்க அவங்க கிட்ட இருந்து உண்மையை கொண்டு வரத்தான் இப்படி பண்ணி இருக்கேன் என்று சொல்கிறான். ஐஸ்வர்யா உடன் சென்ற கீதா கார்த்திக்குடன் போனில் லைனில் இருக்கிறான்.

ரூமுக்குள் வந்தது தீபா அன்னைக்கு மலையிலிருந்து என்ன புடிச்சு தள்ளும் போது நீங்களும் அங்க இருந்து இங்க எதுக்காக இப்படி பண்ணீங்க உண்மைய சொல்லுங்க என்று கேட்க ஐஸ்வர்யா அதிர்ந்து போகிறாள். உன் மேல இருந்த கோவத்துல புத்தி கெட்டுப் போய் இப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு என்று சொல்கிறாள். ஐஸ்வர்யா பேசியதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாப்பிள்ளை தூக்கிய வீரா, மாறன்.. பிரியா கல்யாணத்தில் நடக்கப்போவது என்ன? 

வீரா சீரியலில் நேற்றைய சண்டே ஸ்பெஷல் எபிசோட்டில் ப்ரியாவை காதலனுடன் சேர்த்து வைப்பதாக வீரா வாக்கு கொடுத்திருந்த நிலையில் இன்று, வீரா மற்றும் மாறன் என இருவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் சேதுபதி வீட்டுக்குள் புகுந்து சந்தோஷை தூக்குகின்றனர். அவளை மண்டபத்திற்கு அழைத்து வந்து விருந்தாளிகளில் ஒருவராக உட்கார வைத்து விடுகின்றனர்.

இதைத்தொடர்ந்து இங்கே சேதுராமன் மகன் சந்தோஷ் காணாமல் போனது அறிந்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி பார்க்க மாறன் மற்றும் வீரா இருவரும் சேர்ந்து அவளது ரூமுக்குள் புகுந்து சாக்குப்பையில் தூக்கி சென்றதை கவனிக்கிறான். இதைத்தொடர்ந்து மண்டபத்தில் கண்மணி மற்றும் வீரா என இருவரும் சேர்ந்து பிரியாவிற்கு அலங்காரம் செய்ய மாறன் அங்கு வந்து வீராவை தனியாக அழைத்து செல்கிறான்.

அடுத்து என்ன பிளான்? என்ன செய்யணும்? என்று விசாரிக்க வீரா நீ போய் மாப்பிள்ளை அரவிந்தை காணோம் என்று சொல்லி எல்லோரையும் நம்ப வைத்து சந்தோஷை மாப்பிள்ளையாக்கி கல்யாணத்தை நடத்தி வைக்க வழியை பாரு என சொல்கிறாள். இதைத்தொடர்ந்து வெளியே வந்த மாறன் மாப்பிள்ளை அரவிந்த் காணோம் என்று சொல்ல இரண்டு குடும்பத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அதன் பிறகு சந்தோஷ் நான் பிரியாவை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்ல  வீரா உங்க அப்பா அம்மாவுக்கு போன் போட்டு சம்மதம் வாங்கு என்று சொல்கிறாள். அடுத்து சந்தோஷ் அவர்களது அப்பாவுக்கு போன் போட மாறன் வெளியே வந்து அவனது அப்பா போல பேசி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட பரணி.. சர்ப்ரைஸ் கொடுத்த முத்துப்பாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் முத்துபாண்டி இசக்கிக்கு புடவையை கிப்டாக கொடுத்து சர்ப்ரைஸ் செய்த நிலையில் இன்று, முத்துப்பாண்டி புடவை எடுத்து கொடுத்து நாளைக்கு கோவிலுக்கு போகலாம், நீ இந்த புடவையை தான் கட்டிகிட்டு வரணும் என்று சொல்ல இசக்கி அளவில்லா சந்தோசம் அடைகிறாள்.

இதையடுத்து இசக்கி சண்முகம் மற்றும் பரணிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவர்களும் இதை கேட்டு ஆனந்தம் அடைகின்றனர், உடனே சௌந்தரபாண்டி போன் போட்டு மீண்டும் உன் தங்கச்சியை சந்தோசமா வாழ விடமாட்டேன் என்று வார்னிங் கொடுக்க பரணி போனை வாங்கி உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று சவால் விடுகிறாள்.

மேலும் நாளைக்கு பிறந்த நாளை எப்படி கொண்டாடுறாங்கனு மட்டும் பாரு என்றும் சொல்கிறாள். இதையடுத்து அடுத்த நாள் காலையில் போலீஸ் ஸ்டேஷனே கொண்டாட்ட கோலத்திற்கு மாற முத்துப்பாண்டி என்ன விஷேஷம் என்று குழப்பம் அடைய இசக்கியோட பிறந்த நாளை இங்க தான் கொண்டாட போறோம் என்று சொல்கின்றனர்.

அடுத்து இசக்கி பிறந்த நாளை கொண்டாட எல்லாரும் ஸ்டேஷனில் ஒன்று கூட சனியன் என்ட்ரி கொடுக்க முத்துப்பாண்டி அவனை பிடிக்க போக சௌந்தரபாண்டி அவனை ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு முன் ஜாமின் வாங்கியாச்சு என்று ஆர்டர் காபியை எடுத்து காட்டி அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதையடுத்து இசக்கியின் பிறந்த நாளை கொண்டாட முத்துப்பாண்டி ஆசையாக அவளுக்கு கேக் ஊட்டி விட்டு வாழ்த்து சொல்ல அனைவரும் சந்தோசப்பட சௌந்தரபாண்டி கடுப்பாகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment