Advertisment

மருமகனிடம் தோற்ற மாமனார்... வெளிச்சத்திற்கு வந்த பொய்யான கர்ப்பம் : அடுத்து என்ன நடக்குமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆா.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil serial New

அண்ணா - கார்த்திகை தீபம்- நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அம்பலமாகும் ஐஸ்வர்யாவின் கர்ப்ப நாடகம்.. ஆப்பு வைத்த ரியா, அபிராமி எடுக்க போகும் முடிவு?

Advertisment

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா தூக்கி வீசிய மாத்திரை அட்டை தீபா கையில் கிடைத்த நிலையில் இன்று, தீபா, அந்த அட்டையை கொண்டு வந்து மீனாட்சியிடம் காட்ட அவள் இது பீரியட்டை தள்ளி போடுவதற்கான மாத்திரை, அப்படினா ஐஸ்வர்யா கேம் விளையாடிட்டு இருக்கா போல என்று சந்தேகப்படுகின்றனர். பிறகு மீனாட்சி அவ வழக்கமா போற ஹாஸ்பிடலில் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருத்தி இருக்கா, அவளை வைத்து உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று பிளான் போடுகின்றனர்.

அதன் பிறகு ஐஸ்வர்யாவை அந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று வழக்கமான செக்கப் போல் பரிசோதனை செய்து ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்க்க ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது, இந்த ரிப்போர்ட்டுடன் வீட்டிற்கு வந்த தீபா ஐஸ்வர்யா ரூமுக்குள் சென்று நீ கர்ப்பம் இல்ல தானே என்று கேட்க ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். இருந்தாலும் நான் கர்ப்பமாக தான் இருக்கேன், நீ என்ன எதோ உளறிட்டு இருக்க என்று சமாளிக்க முயற்சி செய்கிறாள்.

தீபா நான் ஆதாரத்தோடு தான் வந்து கேட்கிறேன், உண்மையை சொல்லு என்று கேட்க இதையெல்லாம் ஒட்டு கேட்ட ரியா அபிராமியிடம் சென்று நீங்க என்கிட்டே பேச மாட்டிங்கனு தெரியும். தீபாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஏதோ பிரச்சனை, அதை தீர்த்து வையுங்கள் என்று சொல்லி கொளுத்தி போடுகிறாள். அபிராமி ஐஸ்வர்யா ரூமுக்கு வர இவர்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

அதன்பிறகு ஐஸ்வர்யாவை செக்கப் செய்த டாக்டருக்கு போன் போட்டு விசாரிக்க அவரும் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்று உண்மையை சொல்ல அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரை பாதியில் இறக்கி விட்ட எழில், கடைசியில் காத்திருந்த ஷாக்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட மனோகரி சுடரிடம் வாக்குவாதம் செய்ய எழில் அவளுக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று, எழில் குழந்தைகளை ஸ்கூலுக்கு அழைத்து செல்லும் போது வழியில் காரை நிறுத்து உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு என்று சொல்லி ஆளாளுக்கு ஒரு புக்கை வாங்கி கொடுத்து ஸ்கூலுக்குள் அனுப்பி வைக்கிறான்.

இதனையடுத்து சுடரும் எழிலும் காரில் வந்து கொண்டிருக்க சுடர் எழிலை கலாய்க்கிறாள், குழந்தைகளுக்கு என்ன கிப்ட் வாங்கி கொடுக்கிறதுனு கூட உங்களுக்கு தெரியல, கவினுக்கு எந்த ஆர்ட்டிஸ்ட் பிடிக்கும்னு தெரியுமா? காவியாவுக்கு எது பிடிக்கும்னு தெரியுமா? என்று கேள்வி கேட்க எழில் எதுவும் தெரியாமல் முழிக்கிறான். மேலும் பாதியில் காரை நிறுத்தி சுடரை கீழே இறக்கி விட அவள் நீங்க வர வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன் என்று சவால் விட்டு காத்துக் கொண்டிருக்கிறாள்.

அஞ்சலி சுடருக்காக காத்திருக்க எழில் வீட்டிற்கு வந்ததும் சுடர் வந்தா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறாள். கனகவல்லி சுடர் வீட்டிற்கு வரவே இல்லை என்று சொல்ல எழில் அவளை இறக்கி விட்டதை நினைத்து பார்க்கிறான். கனகவல்லி அவளை தேடி கூட்டி வாப்பா என்று சொன்னதும் எழில் சுடரை இறக்கி விட்ட இடத்திற்கு வருகிறான்.ஆனால் அங்கு சுடர் இல்லை, இதனால் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகத்திற்கு நடக்கும் கத்தி குத்து, சௌந்திரபாண்டி எடுத்த முடிவு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரெஜிஸ்டர் ஆபிசில் வைத்து முத்துப்பாண்டி சண்முகத்தின் சட்டையை பிடித்து வம்பிழுத்த நிலையில் இன்று, சண்முகத்தின் மேல கையை வச்சா அவ்வளது தான் என்று ஊர் காரர்கள் சத்தம் போட முத்துப்பாண்டி வேற வழியின்று அங்கிருந்து கிளம்பி செல்கிறான். அடுத்து ஸ்கூலில் பதவியேற்று விழாவுக்கான ஏற்பாடுகள் நடக்க சௌந்தரபாண்டி முத்துபாண்டியுடன் இங்கு வருகிறான்.

முத்துப்பாண்டி இங்க எதுக்கு நாம வரணும் என்று கேட்க சண்முகத்தோட வெற்றியை பார்த்து வெறியேத்திக்கிட்டு அவனை கொல்லனும் என்று சொல்கிறார், சண்முகம் ரத்னா கையால் ஸ்கூல் சாவியை வாங்க வைத்து அவளை கரெஸ்பாண்ட்டாக பதவியேற்க வைக்கிறார். சனியன் சண்முகத்தை அவ்வளது சீக்கிரம் ஜெயிக்கவோ அழிக்கவோ முடியாது அவனுக்கு முருகன் துணை இருக்கிறார். அவன் முருகனோட தீவிர பக்தன். அவனை அழிக்க ஒரு யாகம் பண்ணனும் என்று சொல்கிறான்.

இதை கேட்ட பாக்கியம் என்ன யாகம் என்று கேட்க சௌந்தரபாண்டி அவன் தியானம் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கான் என்று சமாளிக்கிறார், அடுத்து முத்துப்பாண்டி சண்முகத்தை கொல்ல ஒரு திட்டம் இருப்பதாக சொல்ல நீ உன் திட்டப்படி பண்ணு, நான் சனியன் சொன்ன மாதிரி யாகத்தை பண்ணுறேன். எது எப்படியோ அந்த சண்முகம் அழியனும் என்று ஆவேசப்படுகிறார்.

அடுத்து சண்முகம் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவனை சுற்றிவளைக்கும் ரவுடிகள் கத்தியால் குத்தி கொல்லுவது போல் கனவு கண்டு பயந்து எழுகிறாள் பரணி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment