Advertisment

கணவன் மீது காதல்... பிரபல பாடகியான மனைவி : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று வரும் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Anna KD mkk

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லவ் யூ சொன்ன பரணி.. சண்முகம் செய்த சத்தியம்

Advertisment

அண்ணா இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் குடி போதையில் இருக்க இசக்கிக்கு முத்துப்பாண்டி இனிமே உன் வீட்டுக்கு போக கூடாது இன்று கண்டிஷன் போட்ட நிலையில் இன்று, சண்முகம் தூங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் உட்கார்ந்த பரணி அவனது கையைப் பிடித்துக் கொண்டு நீ ரொம்ப நல்ல அண்ணன், யாருக்குமே கிடைக்காத அண்ணன். இவ்வளவு நாளா நான் உன்னை புரிஞ்சுக்காம தான் இருந்தேன் ஆனா இப்ப புரிஞ்சுகிட்டேன் இனிமே நாம நல்ல வாழ்க்கை வாழ போறோம்  லவ் யூ என்று சொல்கிறாள்.

மறுநாள் காலையில் சண்முகம் உடம்பு வலியோட தூங்கி எந்திரிக்க எல்லோரும் குடித்துவிட்டு வந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட இனிமே தெரிந்தும் தெரியாமலும் சரக்கு அடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். மேலும் தனக்கு சரக்கு ஊத்தி விட்டவர்களை அடா அடிக்கிறான்.

அடுத்து பாக்கியம் வீட்டுக்கு வந்து எங்க அந்த குடிகார சண்முகம் என்று கேட்க எல்லோரும் அவன் தெரியாம ஒரு முறை குடித்து விட்டான் என்று சண்முகத்துக்கு சப்போர்ட்டாக பேசுகின்றனர். பிறகு இசக்கிக்கு தாலி பிரிச்சு போடணும், எல்லோரும் வரணும் என்று சொல்ல சண்முகம் எப்படி வருவான் பாரு என்று பரணி கோபப்படுகிறாள்.

பாக்கியம் சண்முகம் வந்து தான் ஆகணும் என்று சொல்ல அப்படின்னா நீயே அவனை கூப்பிடு என்று சொல்ல பாக்கியம் சண்முகத்துக்காக காத்திருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவை தேடி வந்த பத்திரிகையாளர்கள்.. வீடியோ காலில் சிக்கிய ஆனந்த்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமிக்கு சாப்பாடு ஊட்டி மருந்து போட்டு விட்ட நிலையில் இன்று, ஆனந்த் மற்றும் ரியால் என இருவரும் சேர்ந்து கடை ஒன்றிற்கு சென்று இருக்க அபிராமி வீடியோ கால் செய்ய ஆனந்த் சமாளித்து போனை வைக்கிறான். இந்த நேரத்தில் மீனாட்சி எந்த சட்டைக்காக ரியாவுடன் சண்டை போட்டாலோ அதே சட்டையில் இருப்பதை கவனிக்கிறாள்.

இதனால் திரும்பவும் வீடியோ கால் செய்து இந்த சட்டை எப்படி வந்தது என்று கேட்க ஆனந்த் உனக்கு பிடிக்கும் என்பதால் நானே பெங்களூரில் தேடிப் பிடித்து வாங்கினேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறான். அடுத்ததாக தீபாவை பேட்டி எடுக்க டிவி சேனல் பத்திரிக்கையாளர்கள் அபிராமி வீட்டின் முன்பு கூட மீனாட்சி கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறார்.  

தீபா இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை என்று பேட்டி கொடுக்க மறுக்க கார்த்திக் உங்களுக்கு என்ன பிரச்சனை இப்படி பேட்டி கொடுக்கிறது ஒரு விதமான ப்ரோமோஷன் தான் இதனால் உங்களுக்கு அடுத்த கட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லி அழைத்து வருகிறான்.

வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி இருக்க தீபா கீழே வந்து செய்தியாளர்களிடம் எனக்கு பேட்டி கொடுக்கலாம் பழக்கம் கிடையாது என்று சொல்கிறாள். ஐஸ்வர்யாவில் ஆரம்பித்து அபிராமி வரை எல்லோரையும் அறிமுகப்படுத்தி அதன் பிறகு என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்னுடைய ஹஸ்பண்ட் கார்த்திக் சார் தான் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment