Advertisment
Presenting Partner
Desktop GIF

அப்பாவுக்கே விஷம் கொடுத்த மகள்: பழைய வில்லி ரீ-என்ட்ரி; கார்த்திக் என்ன செய்வார்?

தனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த அப்பாவுக்கே விஷம் வைத்து வில்லத்தனம் காட்டியுள்ளார் ரம்யா.

author-image
WebDesk
New Update
Kd Serial

அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரமேஷ் கார்த்திக் கொண்டு வந்த ஆள் தான் என்ற ரகசியம் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்த நிலையில் இன்று, ஐஸ்வர்யா ரம்யாவை சந்தித்து ரமேஷ் குறித்த உண்மையை உடைக்க அதை கேட்டதும் ரம்யா அதிர்ச்சி அடைகிறாள், இதுக்கெல்லாம் நீங்க தான் காரணமா அப்பா என்று கோபம் கொள்கிறாள்.

அதனை தொடர்ந்து நேராக வீட்டிற்கு வந்த ரம்யா தனது அப்பாவுக்கு ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்து என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே பா.. நான் கார்த்தியை அடையாமல் விட மாட்டேன், அதற்கு யார் தடையா இருந்தாலும் சும்மா விட மாட்டேன் என்று வன்மத்தை கொட்டுகிறாள். ஜூஸை குடித்த அவளது அப்பா சரிந்து விழுகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்னொரு பக்கம் புதிய ஐஸ்வர்யா காட்டப்படுகிறார். இதை தொடர்ந்து ரூபாஸ்ரீ வீடு காட்டப்படுகிறது. கோகிலா ரூமுக்குள் அடைந்து கொண்டிருக்கும் ரூபஸ்ரீயை வெளியே கூப்பிடுகிறாள். வெளியே வந்த அவள் இந்த தீபாவால் எல்லாரும் என்னை டூப்ளிகேட் ரூபாஸ்ரீனு கூப்பிடுறாங்க, என் மரியாதையே போய்டுச்சு.. அந்த தீபாவை சும்மா விட மாட்டேன் என்று ஆவேசப்படுகிறாள்.

இந்த நேரத்தில் அங்கு என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா தீபாவுக்கு கல்யாணம் என்று சொல்ல கோகிலாவும் ரூபாஸ்ரீயும் குழப்பம் அடைய தீபா தாலியை கழட்டியதையும் அபிராமி மீண்டும் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தையும் சொல்லி தீபாவுக்கு எதிராக சதி செய்ய ரூபஸ்ரீயையும் தன்னுடன் கூட்டு சேர்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment