Advertisment

மாமியாரிடம் இருந்து தப்பிய மருமகள்... ஹாஸ்பிடல் கட்டும் நாயகி : ஜீ தமிழ் சீரியலின் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil Karthik sakthi barani

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

அபிராமியிடம் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தீபா.. காத்திருக்கும் அடுத்த சிக்கல்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று தீபா காபி எடுத்து வர அபிராமியை பார்த்து ஷாக் ஆனாள். இதனை தொடர்ந்து இன்று  தீபா அபிராமியிடம் சிக்க கூடாது என்பதற்காக காபி கொடுக்காமல் வெளியே வர சினேகா அவளை தடுத்து நிறுத்த தீபா இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக இதெல்லாம் என்னுடைய வேலை கிடையாது, நான் செய்ய மாட்டேன். உங்களால் செய்ய முடிந்ததை செய்துக்கோங்க என ஷாக் கொடுக்கிறாள்.

ஏற்கனவே பி.ஏ. பெயர் தீபா என்பதை கேட்டு அபிராமி டென்ஷனிலும் சந்தேகத்திலும் இருக்கும் சமயத்தில் சினேகா உள்ளே வந்து தீபா காபி கொடுக்க முடியாதுனு சொல்லிட்டா என்று சொல்லி ஏற்றி விட யார் அவ? அவளை பார்க்கணும் என தேடி செல்ல தீபா ஒரு ஸ்கிரீன்  பின்னாடி ஒளிந்து கொள்கிறாள்.

தீபாவை நெருங்கி செல்லும் வேளையில் கார்த்திக் வந்து விட அபிராமி அவனிடம் பேசுகிறாள். சினேகாவிடம் காபி கொடுத்தீர்களா என்று கேட்க தீபா கொடுக்க முடியாதுனு சொன்ன விஷயத்தை கொளுத்தி போடுகிறாள். திரும்பவும் கார்த்திக் ஒரு மீட்டிங் என கிளம்பி விட அபிராமியும் வீட்டிற்கு கிளம்பி விடுகிறாள்.

அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த தீபா மீனாட்சியிடம் நடந்த விஷயங்களை சொல்ல இதையெல்லாம் என்னால் நம்பவே முடியல, நீ வேலைக்கு போற விஷயம் மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் என பேசி கொண்டிருக்க அங்கு வரும் கார்த்திக் நாளைக்கு நான் டெல்லி போறேன் என்று சொல்கிறான். மறுபக்கம் அபிராமி சாமியாரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க அருணாச்சலம் அதெல்லாம் வந்துடுவார் என சொல்ல சாமியாரும் வந்து விடுகிறார்.

அவர் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு போட நேரம் குறித்து விட்டு செல்ல அபிராமி ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சியிடம் நாளைக்கு அவர் சொன்ன நேரத்தில் மூன்று பேரும் இங்கே இருக்கனும் என சொல்ல மீனாட்சி அந்த விஷயத்தை தீபாவிடம் சொல்கிறாள். தீபா லீவ் சொல்லி விட்டு வருவதாக கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சண்முகத்தை விட்டு கொடுக்காத பரணி.. சௌந்தரபாண்டிக்கு ஷாக்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கடையில் இருப்பதை பார்த்த சௌந்தரபாண்டி ஷண்முகத்திடம் சண்டை போட வந்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி அவளை கட்டிக்கிட்டு வந்து இப்படி கல்லா பெட்டியில் உட்கார வைத்திருக்க அவ படிச்சதெல்லாம் இதுக்கு தானா என்று சண்டை போட சண்முகமும் இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு பரணி சண்முகம் மேல எந்த தப்பும் இல்ல நான் தான் மெடிக்கல் ஷாப் போக வந்தேன் என்று பரணி அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.

பிறகு வீட்டிற்கு வந்த அவள் தோழிகள் சொன்னது, அம்மா கஷ்டப்பட்டு படிக்க வச்சது போன்ற விஷயங்களை நினைத்து பார்த்து கண் கலங்க வைகுண்டம் என் மருமகளை கடையில் உட்கார வைத்திருக்கான், அவனை இன்னைக்கு சும்மா விட மாட்டேன் என கம்புடன் காத்திருக்க பரணி நடந்த விஷயங்களை சொல்கிறாள். இதனால் வைகுண்டம் இந்த ஒருமுறை சண்முகத்தை மணிப்பதாக சொல்கிறார்.

அடுத்ததாக பரணி நன்றாக யோசித்து வீட்டிற்கு வந்து நான் ஒரு ஹாஸ்பிடல் கட்ட போறேன், அதுக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

பூஜாவுக்கு சவால் விட்ட சக்தி,மிரட்டல் விடுத்த சங்கிலி

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் நேற்றைய எபிசோடில் சக்தி பூஜாவிடம் ஆமா நான் தான் வீட்டுக்கு வந்தேன். வெற்றிக்கு பர்த்டே கிப்ட் கொடுத்தேன். உன்னால என்ன பண்ண முடியும் பண்ணிக்கோ என சவால் விட்டுவிட்டு கிளம்பிய நிலையில் இன்று சக்தியின் சவாலை கேட்டு பூஜாவுக்கு டென்ஷன் அதிகமாகிறது. மறுநாள் வெற்றிக்கும் சக்திக்கும் ஒரே நேரத்தில் காய்ச்சல் வர, ஷவரில் நனைந்ததால் தான் இப்படி என்று அனைவரும் கிண்டல் செய்கின்றனர். 

வெற்றியும் சக்தியும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். அங்கே தற்செயலாக அடியாளை சக்தி பார்க்க, வெற்றி சக்தி இருவரும் அவனைப் பிடித்து, பைக்கில் கட்டி ரோடெல்லாம் இழுத்துக்கொண்டு வந்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார்கள். மறுபக்கம் சங்கிலி மீனாட்சி வீட்டிற்கு சென்று புஷ்பா மட்டும் வெளியே வந்தால் உனக்கு ஆபத்து தான் என்று எச்சரித்துவிட்டு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment