Advertisment

குடும்பத்தை பிரிக்க சதி... சேர்த்து வைக்க மந்திரவாதி : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா,மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
anna KD MP

அண்ணா - மீனாட்சி பொண்ணுங்க - கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா,மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

உண்மையை உடைத்த பல்லவி.. கார்த்திக்கு பெரிய ஷாக், தீபா செய்ய போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் போலீசில் சிக்கிய பல்லவியை கார்த்திக் ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து வந்து பாட சொல்லிய நிலையில் இன்று, ரெக்கார்ட்டிங்கிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க பல்லவியை பாட தயாராக சொல்கிறார் கார்த்தி. அவள் எப்பவும் கோவிலுக்கு போயிட்டு வந்து தான் பாடுவேன், கோவிலுக்கு மட்டும் போய்ட்டு வந்துடுறேன் என்று அனுமதி கேட்க கார்த்திக் வேறு வழியில்லாமல் சீக்கிரம் வந்துடுங்க என்று அனுப்பி வைக்கிறான்.

தீபாவும் கூட செல்கிறாள். கோவிலில் தீபா இந்த ரெக்கார்டிங் நல்லபடியாக நடக்கணும் என்று வேண்ட பல்லவி நான் மாட்டிக்க கூடாது என்று வேண்டுகிறாள். பிறகு தீபா இது கார்த்திக் சாருக்கு முக்கியமான விஷயம், நல்லா பாடணும் என்று சொல்லி அழைத்து வர மீண்டும் பல்லவி தொண்டை சரியில்லை கொஞ்சம் நேரம் கழித்து பாடுவதாக நேரத்தை கடுத்துகிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் போய் பாடலாமா என்று கேட்க ஓகே சொல்லி பாட ஆரம்பிக்கிறாள்.

இந்த குரலை உன்னிப்பாக கவனித்த கார்த்தி இது அவன் கேட்ட ஒரிஜினல் குரல் என்பதை கண்டுபித்து ரெக்கார்டிங்கை நிறுத்தி யார் நீ என்று விசாரிக்க அவள் நான் பல்லவி கிடையாது, ரூபாஸ்ரீ தான் பாடினால் பணம் கிடைக்கும் என அனுப்பி வைத்ததாக சொல்ல கார்த்திக் அவளை திட்டி அனுப்புகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக வெளியே கிளம்ப தீபா பின்தொடர்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

பரணி, சண்முகத்தை சேர்த்து வைக்க வைகுண்டம் எடுக்கும் முடிவு, சௌந்தரபாண்டிக்கு ஷாக்

அண்ணா சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை சந்தித்து தர்மகத்தா தேர்தலில் நிற்க கூடாது என்று மிரட்ட பரணி என் புருஷன் நின்று ஜெயிப்பான் என்று சவால் விட்ட நிலையில் இன்று, பரணி வீட்டிற்கு வர வைகுண்டம் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். பரணிக்காக சண்முகம் டைனிங் டேபிள் ஏற்பாடு செய்திருக்க பரணி அதில் உட்கார்ந்து சாப்பிட மறுக்கிறாள்.

இன்னும் 50 நாள் தான் இருக்க போறேன், அப்படியிருக்கும் போது எதுக்கு இந்த ஏற்பாடு எல்லாம் என்று சொல்ல வைகுண்டம் சண்முகத்தை தனியாக அழைத்து சென்று அந்த மனசு இடத்தை பிடிக்க பாரு, ஏதாவது பண்ணு என்று அறிவுரை கூறுகிறார். அதுமட்டுமின்றி மந்திரவாதி ஒருவரை சந்தித்து மகனும் மருமகளும் ஒன்னு சேரனும் என்று சொல்லி கேட்க அவர் ஒரு தாயத்தை கொடுத்து இன்னும் 4 நாளில் இதை அவங்க கையில் கட்டிட்டா அவங்க சேர்ந்துடுவாங்க என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி.. நடக்க போவது என்ன?

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி ரங்கநாயகியை மீறி வீட்டுக்குள் வரவும் பூஜா சக்திக்கு எதிராக எதையாவது செய்யும் படி தூண்டி விடுகிறாள். இதனால் ரங்கநாயகியும் யோசிக்கிறாள். பூஜாவும் புஷ்பாவும் சக்தியை அடக்கி வைக்க, கார்த்திக்கு இரண்டாவது கல்யாணத்தை செய்தால் தான் சரியாக வரும் என்று திட்டமிடுகிறார்கள். அதே நேரத்தில் சக்தி பூஜாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சரண்யா மற்றும் வெற்றியுடன் சேர்ந்து திட்டமிடுகிறாள்.

கோகிலா ரங்கநாயகியைப் பார்த்து பேச வர, இதனால் சந்தேகமாகும் சக்தி யமுனாவுக்கு ஃபோன் செய்து, கார்த்திக்கிடம். பேசிப் பார் என்று சொல்கிறாள். கார்த்திக் நடந்து வந்து கொண்டிருக்க, பிரியா என்னும் ஒரு பெண் அவன் மீது தெரியாமல் ஸ்கூட்டியை மோதி விடுகிறாள். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. கார்த்திக் அவளுக்கு உதவி செய்கிறான். அப்போது யமுனாவிடம் இருந்து போன் வர, பிரியா போனை அட்டெண்ட் செய்து பேசிவிட்டு, கார்த்திக் பிஸியாக இருக்கிறார் என்று சொல்லி கட் செய்து விடுகிறாள். கார்த்திக் போனை ஒரு பெண் எடுத்து பேசி கட் பண்ணியதால் யமுனா அப்செட் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment