Advertisment

பெண் பார்க்கும் படலம்... தற்கொலை முயற்சி... விவாகரத்து... ஜீ தமிழ் சீரியல்கள் அப்டேட்

ஜீ தமிழின் சீதாராமன், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க உள்ளிட்ட சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
zee tamil serial

சீதா ராமன் - அண்ணா - மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி வெற்றியிடம் நாளை பஞ்சாயத்து என்று சொல்லி பேச அதை பற்றி வெற்றி கவனமாக கேட்டு கொள்கிறான். ஆனாலும் என்னால் உதவ முடியாது என்று சாதாரணமாக சொல்லி விட சக்தி டென்ஷன் ஆகி வெற்றியை திட்டுகிறாள்.

அடுத்து புஷ்பா துர்காவிடம் நாளை பஞ்சாயத்தில் உன் கழுத்தில் சங்கிலி தாலி கட்ட வேண்டும், இல்லையென்றால் யமுனாவின் கழுத்தில் இருக்கும் தாலி இறங்கி விடும் என்று சொல்லி மிரட்டுகிறாள்.  அதன் தொடர்ச்சியாக புஷ்பா கோகிலாவிடம் தனது திட்டத்தை சொல்ல கோகிலாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறாள். மறுநாள் அனைவரும் பஞ்சாயத்துக்கு கிளம்பி போகிறார்கள்.

சக்தி பஞ்சாயத்துக்கு வரக்கூடாது என்பதால் அவள் இருக்கும் அறையை பூஜா பூட்டி விடுகிறாள். பிறகு பஞ்சாயத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை சொல்லுகிறாள் சக்தி அதிர்ச்சி அடைகிறாள். பஞ்சாயத்தில் சக்தி வரவில்லை என்று என்று சாந்தா சொல்ல அவள் வரும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது, சீக்கிரம் பஞ்சாயத்தை ஆரம்பியுங்கள் என்று கோகிலா உட்பட அனைவரும் சொல்கின்றனர்.

அதன்பிறகு ரங்கநாயகி யமுனா, கார்த்திக் திருமணம் செல்லாது என்றும் தாலியை கழற்றி பாலில் போடும்படியும் அதிர்ச்சி கர தீர்ப்பை கொடுக்கிறாள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் வீட்டுக்கு வந்து சௌந்தரபாண்டி வர சொன்ன விசயத்தை சொன்ன நிலையில் இன்றைய எபிசோடில் ஷண்முகம் தங்கைகள் நம்ம வீட்டுக்கு ஐந்தாவதாக ஒரு பொண்ணு வர போவதாக சொல்ல ஷண்முகம் சந்தோஷப்படுகிறான்.

பிறகு ஷண்முகம் கடைக்கு வந்ததும் அவனுக்குள் பரணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா? இல்லையா என்ற சந்தேகம் வர பிறகு பரணிக்கு போன் செய்து கல்யாண விசியம் பற்றி பேச பரணி பாத்திர கடைக்கார மாப்பிள்ளை பற்றி கேட்பதாக நினைத்து எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிடுகின்றான்.

இதனால் ஷண்முகம் கவலையடைய ஆணாவூனாவும் வெட்டுக்கிளியும் போக போக சரியாகிரும் என இவனை சமாதானம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து ஷண்முகம் வெள்ளை வேட்டி சட்டையில் தயாராகி வெளியே வர 4 தங்கைகளும் அவனுக்கு தலை சீவி பவுடர் அடித்து விட்டு மாப்பிளை போல மாற்றுகின்றனர். பிறகு ஷண்முகம் முருகனின் போட்டோ முன்பு நின்று எனக்கு இந்த கல்யாணம் இப்போ தேவையா என்று கேட்க நான்கு தங்கைகளும் அவனுக்கு எடுத்து சொல்லி சமாதானம் செய்கின்றனர்.

பிறகு ஷண்முகம் தனது தங்கைகளுடன் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வர அவர் வாங்க மாப்பிளை என வரவேற்று எதுல வந்தீங்க என்று கேட்க நடந்து தான் வந்ததாக ஷண்முகம் சொல்ல சௌந்தரபாண்டி சொல்லி இருந்தால் வண்டி அனுப்பி இருப்பேன்ல என பேசுகிறார். அதன் பிறகு ஷண்முகம் பதற்றமாகவே இருக்க முத்து பாண்டி அவனை கூல் செய்து அப்படியே ரத்னாவை பார்க்க ரத்னா அவனை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்.

பின்னர் ஷண்முகம் புடவையில் இருக்கும் பரணியின் அழகில் மயங்கி அவளிடம் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா என்று கேட்க பரணி அப்பா நம்மளை டெஸ்ட் பன்றாரு என்று நினைத்து எனக்கு விருப்பம் தான் என்று சொல்ல ஷண்முகம் சந்தோஷம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட மதுமிதா மயங்கி விழுவதை வீடியோ காலில் ராமும் சீதாவும் பார்த்த நிலையில் இன்றைய எபிசோடில்  வீட்டுக்கு வரும் ராமும் சீதாவும் மதுமிதாவை காரில் ஏற்றி கொண்டு ஹாஸ்ப்பிடலில் அட்மிட் செய்கினறனர்.

அங்கு மதுவை பரிசோதனை செய்த டாக்டர் ஒன்னு ரெண்டு இல்ல கிட்டத்தட்ட 100 மாத்திரை சாப்பிட்டு இருக்காங்க, அதனால் மதுவை காப்பாற்றுவது கஷ்டம் தான் என்று சொல்ல சீதா அதிர்ச்சி அடைகிறாள். இதனையடுத்து ஹாஸ்பிடலுக்கு அர்ச்சனா, சுபாஷ் மற்றும் சேது ஆகியோர் வர அவர்களை சீதா தடுத்து நிறுத்தி நீங்க உள்ள போக கூடாது என சத்தம் போட இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே போக முயற்சி செய்கின்றனர்.

இதனால் சீதா கையில் கிடைக்கும் பொருளை எடுத்து காளியாக மாறி உங்களை இங்கேயே கொன்னுடுவேன் என மிரட்ட அவர்கள் வேறு வழியாக டாக்டரை சென்று சந்திக்கின்றனர். மதுமிதா எங்க வீட்டு மருமகள், எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்ல, அவளை காப்பாத்துங்க என்று சொல்லி டாக்ட்டரிடம் பேசி விட்டு வெளியே வந்து சீதாவை சந்தித்து நாங்க டாக்டரை பார்த்து பேசிட்டோம், இனிமே நீ தான் உள்ள போக முடியாது என ஷாக் கொடுக்க சீதா அவர்களிடம் சத்தம் போட டாக்டர் வெளியே வந்து இது ஹாஸ்பிடல் என திட்டுகிறார்.

அதன் பிறகு ராமுவும் சீதாவை திட்ட சீதா எதுவும் செய்ய முடியாமல் அமைதியாகிறாள், அதன் பிறகு ஒரு வழியாக மதுமிதா உயிர் பிழைக்க சீதாவை தவிர எல்லாரும் அவளை சந்திக்க செல்கின்றனர். அப்போது அவள் சீதா பற்றி கேட்க அவள் வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதாக சொல்கின்றனர். மேலும் ராம் தான் உன்னை காப்பாற்றியதாக ஓவர் பில்ட்டப் கொடுக்கின்றனர்.

இதையடுத்து சீதா மதுமிதாவை பார்க்க போக டாக்டர் உங்களை உள்ளே விட கூடாதுனு சொல்லி இருப்பதாக தடுத்து நிறுத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment